Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் 001


கீதையில் சில சொற்றொடர்கள் 001

मामकाः पाण्डवाश्चैव ... (अध्याय १ - श्लोक १)
மாமகாஹ பாண்டவாஶ்சைவ  ... (அத்யாயம் 1 - ஶ்லோகம் 1)
Maamakaah Paandavaaschaiva....(Ch I - Shloka 1)

இவை குருட்டு ராஜா த்ருதராஷ்ட்ரனின் வார்த்தைகள். என்னுடைய (புதல்வர்களும்) பாண்டுவின் (புதல்வர்களும்) என்பது அர்த்தம். பாண்டு தென் ஆப்ரிகா அல்லது தென் அமெரிக்காவை சார்ந்தவனா? இவனுக்கு சம்பந்தம் இல்லாத 'ஏதோ' ஒரு மனிதனா? இவனுடைய சொந்த தம்பி. ஆனால், பிரித்துப் பேசுகிறான். என்னுடைய ...பாண்டுவினுடைய... தம்பியின் குழந்தைகளைத் தன் குழந்தைகளாகக் கருதுவது நம் பாரத நாட்டில் உள்ள மிகச் சாமான்ய மனிதனின் பண்பு. இவனோ அரசன். பெருமை வாய்ந்த வம்சத்தில் பிறந்தவன். சிறந்த ஞானிகளின் வழிகாட்டினைப் பெற்றவன். எனினும், இவ்வாறு பேசுகிறான்...

ஒருவன் மனஸில் உள்ளதைத் தான் பேசுவான். இல்லை. அவனுள் அடியாழத்தில் புதைந்திருக்கும் அவனது பாவம் தான் வார்த்தைகளாகவும் செயல்களாகவும் வெளிப்படுகின்றன. (மனப்பாடம் செய்ததை ஸ்வய நினைவுடன் பேசும்போது மட்டும் பாவனையை மறைப்பதில் வெற்றி அடையலாம்.) பாவனைதான் ஒருவனின் Personality. 'என்னுடைய - எனது இல்லை' என்பதுதான்  த்ருதராஷ்ட்ரனின் personality. குருக்ஷேத்ர யுத்தத்தின் மூல காரணமே இதுதான்...

ஹஸ்தினாபுர  ராஜ்யம் என்னுடையது. என்னிடம் இருந்து அந்யாமாக பறிக்கப் பட்டது. நான்தான் ஹஸ்தினாபுர ஸிம்ஹாஸனத்திற்கு உண்மையான அதிகாரி. எனக்குப் பிறகு என்னுடைய புதல்வன் துர்யோதனனுக்கே அதன் மீது உரிமை."

"துர்யோதனன் என்னுடையவன். அவன் என்ன செய்தாலும், எப்படி நடந்து கொண்டாலும் என்னுடையவன். அவனுக்கு எதிராக இருப்பவர்கள் என்னுடையவர்கள் இல்லை. அவனது எதிரிகள் எனக்கும் எதிரிகள்."

எனினும் , த்ருதராஷ்ட்ரன் துர்யோதனன் அளவிற்கு அடாவடித்தனம் இல்லாதவன் ... அவன் தர்மம் எது என்பதைத் தெளிவாக அறிந்திருந்தான். அவனுள் தர்மம், 'என்னுடைய' என்ற மோஹம் இவை ரெண்டிற்கும் இடையே நிரந்தர போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் , அவன் பலஹீனமானவன் ... 'என்னுடைய' என்ற உணர்வின் விளைவு தர்மத்திற்கு எதிராக இருப்பதை அறிந்தும், அவனால் தர்மத்தின் பக்கம் உறுதியாக நிற்க முடியவில்லை. பலஹீனமானவன் மீது கோபம் வராதல்லவா? பரிதாப உணர்வுதான் வரும் ... ஒரு புழுவின் மீது கோபம் வருமா ?  [நினைவில் கொள்ளுங்கள். அடுத்த முறை உங்களுக்கு ஒருவர் மீது கோபம் வந்தால் நீங்கள் அவரை உங்களை விட பலமானவர் என்றும் உங்களையே பலஹீனமானவர் , helpless என்று கருதுகிறீர்கள் என்று அர்தம்.]  அதனால்தான், மஹாபாரதம் படிப்பவர்களின் உள்ளங்களில்  த்ருதராஷ்ட்ரன் பற்றி கோபம் வருவதில்லை. மாறாக, பரிதாப உணர்வுதான் வருகிறது. (கோபம் வராததற்கு மற்றொரு காரணமும் உண்டு. நாமும் அவனைப் போல் இத்தகைய போராட்டத்தில் சிக்கியவர்தானே !!!)

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...