Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் 003



கீதையில் சில சொற்றொடர்கள் 003

நானுஶோசிதும் (அத்யாயம் 2 - ஶ்லோகம் 25) / நைவம் ஶோசிதும் (அத்யாயம் 2 - ஶ்லோகம் 25) / ந த்வம் ஶோசிதும் (அத்யாயம் 2 - ஶ்லோகம் 25) / கா பரிதேவனா ? (அத்யாயம் 2 - ஶ்லோகம் 25)
नानुशोचितुम (अध्याय २ - श्लोक २५) / नैवं शोचितुम (अध्याय २ - श्लोक २६) / न त्वं शोचितुम (अध्याय २ - श्लोक २७) / का परिदेवना ? (अध्याय २ - २८) |
Naanshochitum (Ch 2 - Sh 25) / Naivam Shochitum (Ch 2 - Sh 26) / Na Twam shochithum (Ch 2 - Sh 27) / Kaa pardevanaa ? (Ch 2 - Sh 28).

அர்தம் : துயரம் கொள்ளாதே. வருந்தாதே... சிறப்பான வார்தைகள்.  எதற்குக் கவலை?  ஏன் வருத்தம்?

ஏழ்மை??  (ஒப்பிடுதல் நல்லதில்லை என்றாலும் சில தருணங்களில் ஒப்பிடுதல் துயரத்தை விரட்டிட, கவலையை அழித்திட உதவிடும்.)  சுற்றிலும் பார். உன்னைப் போல், உன்னை விட ஏழைகள் பலர் உள்ளனர். உன்னிடம் கல்வி இருக்கிறது. ஒரு வேலையில் சேர்ந்து வாழ்க்கைக்குத் தேவையானதை ஸம்பாதிக்க முடியும் உன்னால்.  உன்னிடம் உள்ள ஆற்றலை, திறனை வைத்து ஸம்பாதித்து விட முடியும். உன்னிடம் வயஸு இருக்கிறது. நல்ல உடல் இருக்கிறது. உழைத்து ஸம்பாதித்து விட முடியும்.  உலகத்தில் தனியானவனா நீ?  அநாதையா நீ ?  உன்னை ஆதரிக்க நல்ல குடும்பம் இருக்கிறது. நல்ல நண்பர்கள் உள்ளனர். கவலைப் பட காரணம் இல்லையே?

ஸ்வந்த வீடு இல்லை??  வாடகைக்கு வீடு எடுத்து, வஸித்திட பணம் இருக்கிறதே உன்னிடம்?? பல்லாயிரங்களைப் போல், நீ என்ன சாலையோர நடைபாதையிலா வஸிக்கிறாய்? ரயில் நிலைய பிளாட்பார்மிலா வஸிக்கிறாய்?  பின் து:கம் கொள்ள ஏது காரணம் ??

மிகக் கடுமையான சூழ்நிலையா?  வாழ்க்கை ஒரு சுழற்சிப் பாதை. எதுவும் நிரந்தரம் இல்லை. மாற முடியாதது என்று எதுவும் இல்லை.  எந்த சூழ்நிலையும் முடிவுறாத, இருண்ட குஹை இல்லை.  எல்லாம் மாறும்.  வந்தது போகும். போனது வரும். கஷ்டம் மாறி ஸுகம் மலரும். இருள் அழிந்து ஒளி பிறந்திடும். மன உறுதியை வளர்த்துக் கொள். பொறுமையை வளர்த்துக் கொள். சூழ்நிலை மாறும். நம்முடைய மனநிலை தான் நண்பர்களையும் சூழ்நிலைகளையும் நம்மை நோக்கி ஆகர்ஷிகின்றன. மனநிலையை உயர்த்திக் கொள். சூழ்நிலை தன்னால் மாறும்.  குறைந்தது, கடின சூழ்நிலையை புன்னகையுடன் எதிர்க்கொள்ளலாம்.  இடுக்கண் வந்தால் நகுக என்று பறைந்த முன்னோர்களின் வாரீஸல்லவா நீ? ஏன் துயரம்??

கீதை அதற்கும் ஒரு படி மேலே சென்று, "மரணம் கூட துயரத்திற்கான விஷயம் இல்லை" என்கிறது. மரணம் உடலுக்கு தான். நீ உடல் இல்லை. அந்த பரமனுடைய ஒரு துளி நீ. ஸத் - சித் - ஆனந்த வடிவ பரமாத்மனின் ஒரு துளி. ஆனந்தமே உன் உண்மை ஸ்வரூபம்.  ஏன் வருத்தம் தோய்ந்த முகமூடி அணிகிறாய்?

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...