Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் 008



கீதையில் சில சொற்றொடர்கள் 008

समत्वं योग उच्यते (अध्याय २ - श्लोक ४८)
ஸமத்வம் யோக உச்யதே (அத்யாயம் 2 - ஶ்லோகம் 48)
Samatvam Yoga Uchyate (Chapter 2 - Shloka 48)

அர்தம் : சான்றோரின் கூற்றுப் படி 'யோகம் என்பது ஸமத்வமே.'

இந்தச் சொற்றொடர் அர்தம் புரிந்து கொள்ள ஸுலபமானது.  இந்தச் சொற்றொடரில் ஸமத்வம் மற்றும் உச்யதே என்ற இரு வார்தைகள் சிறப்பானவை.

உச்யதே என்றால் 'சொல்கிறார்கள்'. 'ஆன்றோர்கள் சொல்கின்றனர்'; 'அறிந்தவர்களின் கூற்று இது'; என்பதே தாத்பர்யம். ஸ்ரீ க்ருஷ்ணன், "நான் சொல்கிறேன்" என்று ஆணித்தரமாக ஒரு கருத்தைச் சொல்வதற்குத் தகுதி பெற்றவர்தான்.  {நம்மில் பலர் அற்ப நபராக இருந்தும் 'நான் கூறுகிறேன்' என்று உரக்கக் கூவுவதைக் காண்கிறோம்.}  ஸ்ரீ க்ருஷ்ணன் அவ்வாறு கூறினால் அதை நாமும் ஏற்றுக் கொள்வோம்.  அத்தகைய உயர்ந்த நபர் அவர். ஆயினும், ஸ்ரீ க்ருஷ்ணன் 'ஆன்றோரின் கூற்று இது'; 'என் கருத்து இது' போன்ற வார்தைகளைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்.  இதற்கு பணிவும் அஹங்காரமின்மையும் தேவை .

உலக வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் ஸமத்வம் அவஶ்யமானது.  அதிகமாக நாடப் படுவதும் அதே. ஸமத்வம் இல்லாத நிலையைத் தவிர்த்திடும் பெரும் ப்ரயத்னம் செய்யப்படுவது நாம் அறிந்ததே.

பட்ஜெட் அறிக்கை ஸமநிலையுடன் இருந்தது என்று சொல்லும் போது ஸமுதாயத்தின் எல்லா வர்கத்தினருக்கும் நன்மை அளிக்கும் வகையில் இருந்தது, எந்த ஒரு தனிப்பட்ட வர்கத்தை மட்டும் ஆதரிக்கும் வகையில் இல்லை என்று பொருள்.

நாம் அனைவரும் ஸமத்வமான, எல்லா அங்கங்களும் ஸமமாக வளர்ச்சி அடைந்துள்ள உடலை நாடுகிறோம். மார்பு விரிந்து, தோள்கள் திரண்டிருக்க வேண்டும். இடை சிறியதாகவும் கொழுப்பு அற்றதாகவும் இருக்க வேண்டும். தசைகளுடன் கூடிய, ஆனால் அதி வளர்ச்சி இல்லாத தொடைகள் வேண்டும். மிக அதிக உயரமும் வேண்டாம். மிகக் குறைவான உயரமும் வேண்டாம். நாம் விரும்புவது இத்தகைய ஸமமான உடலை.

நம் இரு கண்களின் கூட்டுப் பார்வை கூட ஸமமாக இருக்க வேண்டும். ஸமநிலை மாறினால் கண்ணாடி அணிந்து மீண்டும் ஸமநிலைக்கு மாற்றுகிறோம்.

நம் உணவு ஸமநிலை கொண்டதாக அமைய வேண்டும். மாவுச்சத்து, புரதச்சத்து, வைடமின்கள், கொழுப்பு, தாதுப்பொருட்கள், ஆகிய அனைத்தும் உரிய விஹிதத்தில் இருக்க வேண்டும். ஆறு ருசிகளும் கூடியதாக இருக்க வேண்டும். அந்தந்த காலத்து பழங்களும், காய்களும், கீரைகளும் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். உணவை நாம் உண்பதும் ஸமத்வமாக இருக்க வேண்டும். பரிமாறப்பட்ட அனைத்து பண்டங்களையும் ரஸித்து, ருசித்து உண்ண வேண்டும். எதையும் ஒதுக்கக் கூடாது.

உலகம் இரு த்ருவங்களுக்கு இடையே சிக்கி இருந்த காலத்தில் நம் பாரதம் அணி ஸாரா தேஶமாக' இருந்தது, இரு த்ருவங்களில் எந்த பக்கமும் சாய்ந்திடாமல், இருவரிடமும் நட்பாக ஆனால் நடு நிலையுடன் இருக்க முயற்சித்தது.

ஸமத்வமாக அமைந்தால் மாத்ரமே ஒரு விளையாட்டு அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது. உதாஹரணத்திற்கு ஒரு கால் பந்து அணியில் தாக்கி விளையாடும் திறன் (attack), தன் கோல்போஸ்டைக் காத்திடும் திறன் (defense), பந்தை ஒருவர் மற்றவர்க்கு பகிர்ந்தளிக்கும் திறன் (pass), வேகமும், திறனும் மிக்க கோல்கீப்பர், ஆகிய அனைத்தும் இருக்க வேண்டும். இவை குறைந்திருந்தால் மிகச் சிறந்த ஓரிரு வீரர்கள் இருந்தும் அந்த அணி வெற்றி அடைந்திடும் வாய்ப்பு குறைவே.

நம் வாழ்க்கையும் ஸமத்வம் கொண்டதாக அமைய வேண்டும். பெரும் நிறுவனங்களில் பணி புரியும் பலர் தம் வேலையில் ஒரேயடியாக மூழ்கி வாழ்வின் பிற விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் திணறுவதை நாம் காண்கிறோம். தன்னைத் தானே உயர்த்திக் கொள்வதற்கும் சீரான உறவுகளை அநுபவிப்பதற்கும் இத்தகைய பிற விஷயங்களில் ஈடுபாடு அவசியம். வேலை வாழ்க்கைக்குத் தேவை.  ஆனால், வேலையே வாழ்க்கை இல்லை.

மனோ விஞானத்துறையிலும் ஸமத்வம் பேசப் படுகிறது. நமக்கு இடது மூளை, வலது மூளை என்று அமைந்துள்ளது. இவை இரண்டும் ஸமமாக வளர்ச்சி கண்டிருக்க வேண்டும். வலது மூளை உணர்ச்சிகளின் கேந்த்ரம். இடது மூளை தர்க்கம் மற்றும் பகுத்தறிவிற்கு கேந்த்ரமாகும். தர்க்கம் இல்லாத உணர்ச்சிகளோ உணர்ச்சியற்ற தர்கமோ ஆபத்தானது. ஒரு மநுஷ்யனுக்கு உணர்ச்சிகள் வேண்டும், தர்கத்திற்கு முரண்பட்டிருப்பினும். வாழ்க்கையை அனுபவிக்க, ரஸித்திட உணர்ச்சிகள் வேண்டும். தர்க்கமும் வேண்டும். மிகைப்படாமல். மிகைப்பட்டால் தர்கம் வாழ்க்கையை வறண்டு போகச் செய்திடும். ரஸம் அற்றதாக்கி விடும்.

செயல்களில் வெற்றி அடைந்திட, செயல்களைச் சிறப்பாகச் செய்திட, மனஸின் ரெண்டு அம்ஶங்கள் பேசப் படுகின்றன. மனஸின் குவிப்பு அல்லது கவனம், மற்றும் மனஸின் ஸமத்வம். கவனக்குவிப்புதான் செயல்களின் வெற்றிக்கு அவசியமானது என்பதே பொதுவாக நிலவிடும் கருத்து. ஆம். செயல்களைச் சிறப்பாகச் செய்வதில் மனஸின் குவிப்பு இன்றியமையாதது. ஆனால், ஒட்டு மொத்த வாழ்க்கையில் வெற்றி பெறவும் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளவும் இது போதாது. கவனக்குவிப்பினால் தீய செயல்களும் கூட சிறப்பாக செய்திடலாம். மாறாக, உயர்ந்த தன்மைகளை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையையும் உலகத்தையும் அதிக ஆழமாகப் புரிந்து கொள்ளவும் ஆன்மீகப் பாதையில் துரித வளர்ச்சிக்கும் ஸமத்வம்தான் தேவையானது.

உலக வாழ்க்கை எதிர்மறையான ரெட்டைகள் நிறைந்தது. விருப்பு-வெறுப்பு, புகழ்-அவப்புகழ், பாராட்டு-கண்டனம், மலர் மாலை-செருப்படி, உஷ்ணம்-குளிர்ச்சி; சேருதல்-பிரிதல், ஜனனம்-மரணம், வெற்றி-தோல்வி, ராத்ரீ-பகல், ஸுகம்-து:கம் , அநுகூலமானவை-ப்ரதிகூலமானவை, போன்ற பலப்பல ரெட்டை எதிர்மறைகள். ஸமத்வம் என்பது இவை ரெண்டைப் பற்றியும் ஸம நிலை. ஸமத்வமே யோகம். ஸமத்வமே வெற்றி .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...