Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 21



கீதையில் சில சொற்றொடர்கள் - 21


युद्ध्यस्व विगत ज्वरः ।  (अध्याय ३ - श्लोक ३०)
யுத்யஸ்வ  விகத ஜ்வரஹ .  (அத்யாயம் 3 - ஶ்லோகம்  30)
Yuddhyasva Vigata Jwarah.. (Chapter 3 - Shlokam 30)

அர்தம் :  ஜ்வரத்தில்  இருந்து  விடுபட்டு  யுத்தத்தில்  ஈடுபடு.

ஜ்வரத்தினால் தேஹத்தில் உஷ்ணம் அதிகம் ஆகும் .  அங்கங்கள் பலஹீனம் ஆகும்.  மனம்  ஒருங்கிணைப்பு  கடினம் ஆகும். சிந்தனை ஆற்றல்  நின்று போகும்.  ஜ்வரம் இருந்திடும் போது யுத்தம் செய்வது  இயலாத கார்யம்.  யுத்த களத்தில் கீதை பேசப் படுவதால், ஜ்வரத்தில் இருந்து விடுபட்டு யுத்தம் புரிந்திடு என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  ஸ்ரீ ராமன்  இவ்விஷயத்தில்  ஜ்வலித்திடும் ஒரு உதாஹரணம்.  அவர் புன்னகை  மாறாமல், மனஸில் வெறுப்பும் பழி வாங்கும்  எண்ணமும் இல்லாமல் ராவணனுடன்  போர் புரிந்தார். ஸமீப  காலத்து  அரஸியல்வாதிகளில்  ஸ்ரீ  வாஜ்பேயி இவ்விஷயத்திற்கு ஒரு  சிறந்த உதாஹரணம். தான் பாதிக்கப் பட்டும்  ஆட்சியாளருக்கு எதிராக தம் மனஸில் க்ரோதம் இல்லாமல் அரஸியல் நடத்தியவர்.  ஜ்வரம் இருக்கும் போது யுத்தம் மட்டும் இல்லை, வாழ்க்கையின் எந்த செயலும் செய்ய  இயலாது என்பதே உண்மை.  எனவே, ஜ்வரத்தில் இருந்து விடுபடு.  பின்னர்  செயல் படு...

ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு  குறிப்பிடுவது  உடலுக்கான  ஜ்வரத்தை அல்ல. மனஸினைப்  பிடித்திடும்  ஜ்வரத்தை.  காமம், மற்றும்  க்ரோதம் இவை ரெண்டும் மனஸினைப்  பீடித்திடும்  ப்ரதானமான ஜ்வரங்கள்.  மனஸில்  தோன்றும் இந்த ஜ்வரங்கள்  உடல், மனம் மற்றும்  புத்தி ஆகிய மூன்றையும்  பாதிக்கும் ஆற்றல் கொண்டவை. உடல் பலஹீனம் அடையும்.  அங்கங்கள்  செயல் இழக்கும்.  ஷரீரம் அன்றாடம் செய்ய வேண்டிய செயல்கள் மந்தம் ஆகும் அல்லது நின்று போகும்.  மனஸின் மேல்  இந்த ஜ்வரங்களின் பிடி உறுதியானது.  வாழ்க்கையின்  அழகான, மதுரமான, ஆனந்தம் மற்றும்  உத்ஸாஹம்  அளிக்கக் கூடிய விஷயங்களை அநுபவிக்கும் ஆற்றலை  மனம் இழந்து விடும்.  புத்தி  ஸ்தம்பித்து விடும். சிந்தனை செய்வது இயலாமல் போகும்.

உடலின் ஜ்வரம் அவ்வுடலில் விஷமான ரஸாயனங்கள் ஸுரக்கப் படுவதற்குக் காரணம்  ஆகலாம்.  இவற்றை  எளிதாக  நீக்கவும் முடியும்.  ஆனால், மனஸினைப்  பீடித்திடும்  காமம் மற்றும் க்ரோதம் என்ற ஜ்வரங்கள்  உடலில்  விஷமான  ரஸாயனங்கள்  ஸுரக்கப் படுவதற்குக்  காரணமாக இருக்கின்றன.  மேலும், மனஸிளும் விஷமான  பாவனைகள்  துளிர்ப்பதற்கும்  காரணமாகின்றன.  இந்த விஷங்கள்  நாசம்  ஏற்படுத்த வல்லவை.  நீக்குவதற்கு  மிகக் கடினமானவை.

மனஸ் ஜ்வரத்தினால் பீடிக்கப் பட்ட நிலையில்  செய்யப் படும்  கர்மங்கள் மிச்சமிருக்கும்  வாழ்க்கையை  பஶ்சாதாபத்தில் தொலைத்து விடுவதற்கும்  காரணம்  ஆகின்றன.  உலகத்தில் நிகழ்ந்திடும் பெரும்பாலான குற்றச் செயல்கள் 'மனஸ் ஜ்வரத்தில்  பீடிக்கப் பட்ட நிலையில்  செய்யப் பட்டவையே.  ஜெயில்களில்  வாடும்  பெரும்பாலான கைதிகள், குறிப்பாக ஆயுள் கைதிகள், தம் மனம் காமம் அல்லது க்ரோதம் என்ற ஜ்வரத்தால்  பீடிக்கப் பட்ட நிலையில்  செயல்பட்டவர்களே.  எனவே தான்  ஸ்ரீ க்ருஷ்ணன்  சொல்கிறார்,... "யுத்யஸ்வ  விகத ஜ்வரஹ"  ... ஜ்வரத்தில் இருந்து  விடுபட்டு யுத்தம் புரிந்திடு."    

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...