Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 22



கீதையில் சில சொற்றொடர்கள் - 22

स्वधर्मे निधनं श्रेयः  (अध्याय ३ - श्लोक ३५).
ஸ்வதர்மே நிதனம் ஸ்ரேயஹ (அத்யாயம் 3 - ஶ்லோகம் 35).
Swadharme Nidhanam Shreyah (Chapter 3 - Shlokam 35).

அர்தம் :  ஸ்வதர்மத்தில்  மரணமும்  மேன்மையானதே.   எளிமையாகச் சொன்னால் "காபி அடிக்காதே" என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  உன்னுடைய ஸ்வயத் தன்மைக்குள் இருந்திடு என்கிறார் .

ஒரு CBSE பள்ளிக்கூடத்தில்  பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்க் கூட்டம்  நடத்தும் போது, வந்தவர்கள் அனைவரிடமும் நான்கு  கேள்விகள்  எழுதப்பட்ட ஒரு தாள் கொடுத்தேன். 
அந்த நான்கு கேள்விகள் பின்வருமாறு...
1.  நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
2. நீங்கள் செய்திடும் வேலையைப் பற்றி, உங்களுக்கு முழுமையான ஸந்தோஷம் (பூர்ண த்ருப்தி)  உள்ளதா? 
3.  இல்லை என்றால்  வேறு என்ன  செய்ய விரும்புகிறீர்கள்?
4.  ஏன் ??

முதல் கேள்விக்கான பதிலில்  அரஸாங்க வேலை, போலீஸ், இஞ்ஜினீயர், வக்கீல், ட்யூஷன், கடை நடத்துதல், ஏஜன்ஸீ, கட்டிட கான்ட்ராக்டர், வ்யவஸாயம், போன்ற  பல  வேலைகள்  குறிப்பிடப் பட்டிருந்தன. 

இரண்டாவது  கேள்விக்கு  நான்கைந்து நபர்கள் தவிர மற்ற அனைவரும்  இல்லை என்று எழுதி இருந்தனர்.       

ஆஶ்சர்யம் என்னவென்றால்  மூன்றாவது  கேள்விக்கான பதில்களும் முதல் கேள்விக்கான பதில்களும்  ஒன்றாகவே இருந்தன.  ஆனால், வெவ்வேறு தாள்களில்.. முதல் கேள்விக்கான இவருடைய பதில் மற்றவருடைய  தாளில் மூன்றாம் கேள்விக்கான பதிலாக இருந்தது.  அதாவது, ஒருவர்  "ஸந்தோஷம்"  இல்லை என்று  கருதிய வேலையை மற்றொருவர் செய்ய விரும்புகிறார்.

ஏன் என்ற நான்காம் கேள்விக்கு தத்தம் வேலையில் உள்ள கஷ்டங்களை அடுக்கி இருந்தனர் .  செய்ய விரும்பும் வேலையில் இந்த கஷ்டங்கள்  இல்லை  என்றும் எழுதி இருந்தனர்...

கடை நடத்துபவன்  தான் கட்ட வேண்டிய வாடகை, மின்ஸார கட்டணம், அரஸாங்க வரிகள்,  இவற்றை நினைத்து,  சாலை ஓரத்தில் நடை வண்டியில் ஸமோஸா  விற்பவனைப் பார்த்து பொருமுகிறான்.  அவனோ, "விடியற்காலை 03.30 மணிக்கு எழுந்து தயாரிப்புகள் செய்ய வேண்டிய தன் வேலையை நினைத்து , இவன் ஹாய்யாக காலை ஒன்பது மணிக்குக் கடையைத் திறந்து விட்டு, நாள் முழுவதும்  A C யில் அமர்ந்து விட்டு  இரவு வீட்டிற்குச் சென்றிடும்  இவனைப் பார்த்து பொருமுகிறான்.

ஒவ்வொரு வேலையிலும்  வஸதிகளும்  உண்டு கஷ்டங்களும்  உண்டு.  மற்றவர் செய்திடும்  வேலையில் உள்ள  சௌகர்யங்கள்  நம்  கண்களில்  படும்.  ஆனால், அவ்வேலையில் உள்ள கஷ்டங்கள்  அவருக்கு மட்டுமே  தெரியும்.   தன் ஸ்வபாவத்திற்கேற்ற ஒரு வேலையை  ஆனந்தமாகச் செய்தலே  சிறப்பு.  அதில்  உள்ள வருமானம், செலவுகள், வஸதிகள், கஷ்டங்கள், இவற்றைப் பொறுத்துக் கொள்வதே  சிறப்பு .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...