Skip to main content

கீதையின் சில சொற்றொடர்கள் - 23


கீதையின் சில சொற்றொடர்கள் - 23

अथ केन प्रयुक्तोऽयं पापं  चरति  (अनिच्छान्नापि )  ... (अध्याय ३ - श्लोक ३६ )... 
அத கேன ப்ரயுக்தோயம் பாபம் சரதி  (அநிச்சான்னபி )  (அத்யாயம் 3 - ஶ்லோகம்  36.)
Atha Kena Prayuktoyam Paapam Charati (Anicchaannapi)  ..( Chapter 3 .. Shloka 36)

அர்தம் :  ஸ்வய விருப்பம் இல்லாவிடினும்  மனுஷ்யன் ஏன் பாபத்திற்குத் தூண்டப் படுகிறான்?

அர்ஜுனன் கேட்ட அத்புதமான கேள்வி இது.  கீதை முழுவதிலும் அர்ஜுனனின் இத்தகைய கேள்விகளையும் ஸ்ரீ க்ருஷ்ணனின் ஆழமான பதில்களையும் நிறைந்திருப்பதைக் காணலாம்.  பொதுவாக, கேள்வியே சிந்தனையைத் தூண்டி விடும்.  மாணவனின் கூர்மையான கேள்வி ஆசார்யனிடம் இருந்து  மிகச் சிறந்த பதிலைப் பிறப்பிக்கும்.  நேர்மை மற்றும் அறிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே கேள்வியைத் தூண்ட வேண்டும்.  திமிர் அல்லது ஆசார்யனை வீழ்த்த வேண்டும் என்ற உந்துதல் கேள்விக்குக் காரணமாகக் கூடாது.

இது  மிக அதிகமான முறை கேட்கப் பட்டக் கேள்வியாகும். "இறைவன் கெட்டவர்களை ஏன் படைக்க வேண்டும்?" "நல்லவர்களை மட்டும் படைத்து விட்டு அத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாமே?"  கீதை ப்ரவசன அரங்கில்  பலரும் பல முறை இக்கேள்வியைக் கேட்பர்.  இக்கேள்வியை கேட்பவர் அனைவரும் தன்னை "நல்லவராக" கருதி,  கெட்டவர்களிடம் தாம் பெற்ற கசப்பான அநுபவங்களை மனஸில் வைத்துக் கொண்டு கேட்பவர்கள்.  ஆனால், அர்ஜுனனின் கேள்வி சற்று வித்யாஸமானது.  அவன் தன்னைத் தானே விலக்கிக் கொள்ளவில்லை.  In fact, இப்போரில் கலந்து கொண்டு, எதிரியின் ஸேனையில் உள்ள பலரைக் கொல்வதன் மூலம் தான் மிகப் பெரிய பாபம் செய்யப் போவதாகக் கருதுகிறான்.

மநுஷ்யன் ஏன் பாபம் செய்கிறான்?  அவனை பாபத்திற்குத் தூண்டுவது எது?  பொதுவாக எவரும் பாபம் செய்ய விரும்புவதில்லை.  ஆனால், பாபத்திலிருந்து விலகியும் இருப்பதில்லை.  இதை அறிந்து உள்ளதால் அர்ஜுனன், "எது மநுஷ்யனை பாபத்திற்கு தூண்டுகிறது?" என்று கேட்கிறான்.

ஸ்ரீ க்ருஷ்ணன் பதிலாகக் கூறுவது யாது?  அடுத்த இதழில் காண்போம்.

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...