Skip to main content

கீதையில் இருந்து சில சொற்றொடர்கள் - 24


கீதையில் இருந்து சில சொற்றொடர்கள்  - 24

काम एष ... क्रोध एष ....  (अध्याय ३  - श्लोक ३७)
காம ஏஷ ... க்ரோத ஏஷ .... (அத்யாயம் 3 - ஶ்லோகம்  37)
Kaama Esha ... Krodha Esha ... (Chapter 3 - Shloka 37)

அர்தம் :  காமமும் க்ரோதமும் தான் அந்த ரெண்டு காரணங்கள்...

ஸ்ரீ க்ருஷ்ணன்  அர்ஜுனனின் கேள்விக்கு அளித்த பதில் இது.  "மநுஷ்யன் பாபத்திற்கு ஏன் தள்ளப்படுகிறான்?"  மநுஷ்யனை பாபத்திற்குத் தூண்டுபவை எவை?"  என்ற  அர்ஜுனனின் கேள்விக்கு ஸ்ரீ க்ருஷ்ணன் அளித்த பதில்.  "காம - க்ரோத  ... மநுஷ்ய மனஸைப் பற்றி ஸ்ரீ க்ருஷ்ணன் ஆற்றிய அழகானதொரு உரையின் முதல் இரண்டு வார்த்தைகள் இவை.

காமம் என்பது ஶரீர ரீதியான இச்சை மாத்ரம் இல்லை.  எந்த ஒரு அடாத விருப்பமும்,  முறையற்ற எந்த விருப்பமும் காமமே.  பசி எடுத்தால் உணவு வேண்டும் என்ற விருப்பம் காமம் இல்லை. பசிக்காக மட்டும் உணவை நாடினால் காமம் இல்லை. அலையும் நாக்கின் ருசிக்காக உணவை நாடினால் அது காமமே. கீதையில் மற்றொரு ஸந்தர்பத்தில், "தர்ம அவிருத்தோ காமோsஸ்மி"  அதாவது தர்மத்திற்கு முரண்படாத காமம் நானே  என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன்.  அதன் படி, தர்மத்திற்கு உட்பட்ட  ஶரீர இச்சையும்  தெய்வீகமே"  

க்ரோதம் என்பது உள்ளே பதுக்கி வைக்கப்பட்டு, ஸரியான  ஸந்தர்பம் வரும் போது வெடித்துக்  கிளம்பத்  தயாராக  உள்ள கோபம் அல்லது ஆவேஶம்.  பழி  தீர்த்துக் கொள்ளும் உந்துதல் க்ரோதத்தின் வெளிப்பாடு.   கோபத்திற்கும்  க்ரோதத்திற்கும் ஒரு வித்யாஸம்  உண்டு.   கோபம் என்பது  தத்க்ஷணம்  வெளிப்படும் ஒரு எதிர்ப்பு உணர்வு.  கோபம் நீண்ட காலம் போற்றிப் பாதுகாக்கப் பட்டால் அது க்ரோதமாக மாறி விடும்.  கோபத்திற்குக் காரணமான நபர் அல்லது விஷயம் மீது பழி வாங்கும் உணர்வும் தொற்றிக் கொண்டால், கோபம் க்ரோதமாக மாறி விடும்.  கோபம் இயல்பாக உள்ள ஒரு உள்ளுணர்வு.  ஆனால், க்ரோதம் வெளியில் இருந்து ஏற்கப்பட்டு, மனஸில் போற்றி வளர்க்கப் பட்ட ஒரு உணர்வு.  ஸம்ஸ்க்ருதத்தில்  ஒரு  ஸுபாஷிதம் உண்டு.  "  क्षण कोप उत्तमम् |  जाम कोप मध्यमंम्  |  प्रहर कोप अधमम्  |   அதாவது   கோபம் க்ஷண நேரம் இருந்தால் அது உத்தமம்.  ஒரு ஜாமத்தைத்  தாண்டி கோபம் நிலைத்தால் அது  மத்யமம் அல்லது ஸாதாரணம்.  கோபம்  ஒரு ராத்ரீயைத் தாண்டி அடுத்த நாள் வரை நீடித்தால் அது கீழ்த்தரம்.  கோபம் என்பது  அடி, வலி, வேதனை இவற்றிற்கு ஒரு எதிர்ப்பு உணர்வு.  ஆனால், க்ரோதம்  அந்த வேதனையை ஏற்படுத்திய நபர் மீது தோன்றிடும் எதிர்ப்பு உணர்வு.  ஏற்பட்ட வலி மங்கினால் கோபமும் மங்கி விடும் வாய்ப்பு உண்டு.  ஆனால், க்ரோதம்  என்பது பழி தீர்த்த  பின்னரும் தொடர்ந்திட வாய்ப்பு உண்டு.  குருக்ஷேத்ர யுத்தத்திற்குப் பின்னர் குருடன் த்ருதராஷ்ட்ரனும் அவன் மனைவி காந்தாரியும்  பாண்டவர்களின் நிழலில் வாழ வேண்டிய துர்பாக்யம் எற்பட்டது.  ராஜா யுதிஷ்டிரன் அவர்களை அன்புடன்  பார்த்துக் கொண்டார்.  ஆனால், பீமன் அவர்களைக் காணும் போதெல்லாம் தன்  புஜத்தினைத் தட்டிய படி, "இந்தக் கைகள்தான் து:ஷாஸனின்  மார்பைப் பிளந்தெடுத்தன.  இந்தக் கைகள் தான் துர்யோதனனின்  கைகளை அவன் உடலில் இருந்து பிய்த்து எடுத்தன."  என்று கூறுவான்.  க்ரோதத்திற்குத்  தீனி போடும் அவன் வழிமுறை இது.

ஸ்ரீ க்ருஷ்ணனின் கூற்றுப்படி காமமும் க்ரோதமும்  மநுஷ்யனை பாபத்திற்குத் தூண்டும் இரண்டு காரணங்கள்   பாபம் என்பது என்ன?  மஹாபாரதம் பாபத்தை எளிமையான வார்தைகளில் விளக்குகிறது.  "பாபாய பர பீடனம்"... அதாவது பிறர்க்கு பீடை அளிப்பது, வலி அல்லது வேதனை அளிப்பதே பாபம் என்கிறது மஹாபாரதம்.   ஒரு விஷயத்தை அடைந்திடும் விருப்பமும், ஒரு அநுபவத்தை ஸுகிக்கும் விருப்பமும் ஒரு அந்தஸ்தை அடைந்திடும் விருப்பமும்  காமம்.  இவ்விருப்பங்களுக்குத் தடையாகத தெரிந்திடும் விஷயங்கள் மற்றும் நபர்களை தடுப்பதும், அழிப்பதும் க்ரோதம்.  இந்த ரெண்டும் இருந்தால் பிறருக்குத் தீங்கு விளைவிப்பது, வலி அல்லது வேதனைக் கொடுப்பது, அதாவது பாபம் செய்தல் தவிர்க்க முடியாததல்லவா.  பாபம் தேஹ ரீதியான செயல்கள் மாதரம் இல்லை.  காமம், க்ரோதம் என்ற இவ்விரண்டு ஆயுதங்கள்  உடன் இருந்தால்,  வார்த்தைகளும் மனஸில் உதிக்கும் எண்ணங்கள் கூட  பிறருக்குத்  தீங்கு விளைவிக்கும்  ஆற்றல் கொண்டவையாக மாறி விடும்..

Comments

  1. அப்படியென்றால் அன்றைய மன்னர்களும் இன்றைய மந்திரிகளும் இதன் வசப்பட்டு தானே இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. அப்படியென்றால் அன்றைய மன்னர்களும் இன்றைய மந்திரிகளும் இதன் வசப்பட்டு தானே இருக்க வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...