Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 25

கீதையில்  சில  சொற்றொடர்கள்  -  25

तस्माद् त्वम् इन्द्रियाण्यादौ  नियम्य   ... (अध्याय ३ - श्लोक ४१).
தஸ்மாத் த்வம் இந்ரியாண்யாதௌ நியம்ய.... (அத்யாயம் 3 - ஶ்லோகம்  41).
Tasmaat Tvam Indriyaanyaadau Niyamya .... (Chapter 3 - Shloka 41).

அர்தம் :  அதனால்  முதலில்  இந்த்ரியங்களை  ஒழுங்கு படுத்து .

இந்த்ரியங்கள் மொத்தம்  பத்து.  ஐந்து க்ஞானேந்த்ரியங்கள் மற்றும் ஐந்து கர்மேந்த்ரியங்கள்.  என்பதை  நாம்  அறிவோம்.  இவற்றில் க்ஞானேந்த்ரியங்கள்  ஐந்தும்  ஸுக போகத்திற்கான  கருவிகளும் ஆகும். இவ்வைந்து  இந்த்ரியங்கள்தான்  மனஸை  இன்பத்தில்  ஆழ்த்தக் கூடியவை. அதே போல,  இவையே  மனஸை  துன்பத்தில்  ஆழ்த்தும் ஆற்றலும் கொண்டவை.  இந்தப்  புலன்கள் மூலம்  கிடைக்கப் பெற்ற அனுபவங்களின் ஆதாரத்தில்  இஷ்டம் - அநிஷ்டம் ;  விருப்பு - வெறுப்பு ;  பிடித்தவை - பிடிக்காதவை ;  ஆகிய பட்டியல்களைத்  மனஸ்  தயார்    செய்கிறது. இப்பட்டியல்களின்  அடிப்படையில்  அனுபவங்களைப் பாகுபடுத்தி இன்பத்தில் துள்ளுகிறது  அல்லது துயரத்தில்  மூழ்குகிறது.

ஸமத்வம்  யோக  உச்யதே  அதாவது  ஸமநிலையே  யோகம்  என்கிறார்  ஸ்ரீ கிருஷ்ணன்.  மேற்கூறிய அனுபவங்கள்  கிடைத்திடும் போது  ஸமநிலை இழந்திடாத  மனஸே  யோக ப்ராப்திக்கு  அர்ஹதை  கொண்டது..

இந்த்ரியங்கள்  தம்  கார்யத்தை  எங்ஙனம்  செய்கின்றன?  இந்த்ரியங்கள்  நம் ஶரீரத்தின்  த்வாரங்கள்.  ஒரே திஶையில், வெளி நோக்கி அதாவது புற உலகத்தை நோக்கித்  திறந்திடும்  த்வாரங்கள்.  வெளி  உலகத்தில்  நிறைந்து கிடக்கும் விஷயங்களுடன்  இணைவதும், அவ்விணைதலின் அனுபவங்களை உள்ளே அனுப்புவதும் இந்த்ரியங்களின் ப்ரதான கார்யங்கள் ஆகும். வெளியில் திரிந்து  உலக விஷயங்களுடன் இணைந்திடும் கார்யத்தில் கட்டுப்பாடுகள் விதித்தலோ  இணைதலின் மூலம் கிடைத்த அனுபவங்களின் செய்திகளை உள்ளே அனுப்புவதைத் தடுத்து நிறுத்துவதோ இந்த்ரியங்களால் இயலாதவை. ஒன்று  இந்த்ரியங்கள்  வலுவிழந்து  செயலற்றவை  ஆக வேண்டும்  அல்லது அந்த  த்வாரங்கள்  பலவந்தமாக அடைக்கப் பட்டு  புலன்கள் அடக்கப் பட வேண்டும்..  இவ்விரண்டு  வழிகளில் மட்டுமே இந்த்ரியங்களின் கார்யம் தடுக்கப்பட முடியும்.  மனஸின்  ஸமநிலையைக்  கெடுப்பதில் புலன்களின் பங்கு மஹத்தானது.   ஆனால்,  ஸமநிலை / ஸமத்வம் ஏற்படுத்துவதில் புலன்களின் பங்கு  அல்பமானது.  இந்த  பின்னணியில்தான் ஸ்ரீ க்ருஷ்ணனின் மேற்கூறிய  யோஜனை  வருகிறது.  இந்த்ரியங்களை ஒழுங்கு படுத்திடு. கட்டுப் படுத்திடு என்று சொல்லவில்லை.  ஒழுங்கு படுத்துதல் என்றால் இந்த்ரியங்களை Block செய்தலோ  Censorship  செய்தலோ இல்லை.  தம் இஷ்டத்திற்கு  வெளி உலகில்  திரிய விடாமல், அவை ஒழுங்கான முறையில், புத்தியின்  ஸ்வய நினைவுடன்  வெளியே விஷயங்களைத் தேடி இணைய வேண்டும்.  அதுவே  இந்த்ரியங்களை ஒழுங்கு படுத்துதல் என்பதன் தாத்பர்யம்.   ஸ்ரீ க்ருஷ்ணனின்  கூற்றுப்படி அப்யாஸம்  (இடையறாத  பயிற்சி ) மற்றும்  வைராக்யம்  (பற்றின்மை)  மூலம்  இதை  ஸாதிக்கலாம்.

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...