Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 27

கீதையில் சில சொற்றொடர்கள் - 27

भक्तोsसि में सखा चेति  .... (अध्याय ४ - श्लोक ३ )
பக்தோsஸி மே ஸகா சேதி  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 3)
Bhakto(a)Si Me Sakhaa Chethi ... (Chapter 4 - Shlokam 3)

அர்தம் :  என் பக்தன்..  மற்றும் என் நண்பன் (நீ)...

ஸ்ரீ  கிருஷ்ணன்  சொல்வதைக்  கேளுங்கள்..  "நீ  என் பக்தன் மற்றும்  ஸகா (நண்பன்) ... என்பதால்  ரஹஸ்யமயமான  இந்த யோகத்தை உனக்குக்  கூறுகிறேன்.  ஸக்யத்திற்கு,  நட்பிற்கு  எவ்வளவு  அத்புதமான,  மஹத்தானதொரு  அன்பளிப்பு  பாருங்கள்..  கீதை  அர்ஜுனனிடம்,  பேசப்பட்டது,  யுதிஷ்டிரனிடமோ பீமனிடமோ அல்ல.. பஞ்ச (ஐந்து)  பாண்டவர்களுமே  ஸ்ரீ கிருஷ்ணனின்  அன்பிற்குப் பாத்ரமானவர்களே..  இந்த்ரப்ரஸ்தத்திற்கு  ஸ்ரீ கிருஷ்ணன்  வந்த ஒவ்வொரு முறையும்  பாண்டவர்களின்  அன்புக் கட்டளைக்கு இணங்கி  அவரது தங்கல் சில நாட்கள்  நீண்டது.  அங்கு  சில நாட்கள் தங்கி விட்டு,  கிளம்பும்  ஒவ்வொரு  ப்ரஸங்கமும்  உணர்ச்சி  ததும்பும்  தருணங்களாகவே  இருந்தன.  இத்தருணங்கள் மஹாபாரதத்தில்  மிக அழகாக  வர்ணிக்கப் பட்டுள்ளன. பெரும்  ஆபத்துக்கள்  நெருங்கிய  ஸமயங்களில், பாண்டவர்களை, அதிலும்  திரௌபதியை  ஸ்ரீ கிருஷ்ணன்  காத்த  ஸம்பவங்கள்  இக்குடும்பத்தைப் பற்றி அவர் மனஸில்  ஊறி இருந்த அன்பு  மற்றும்  அக்கறையை  வெளிப்படுத்துகின்றன.  எனினும், அர்ஜுனன்  விஶேஷமானவர்களிலும்   விஶேஷமானவன்.  பக்தோ(அ)ஸி. ஸகாசேதி  ... பக்தன்  மாதரம் அல்ல.  மித்ரனும்..கூட.  ஒரு  மித்ரனுக்கு  கீதையை விட  மஹத்தான  பரிஸு  வேறு என்ன  இருந்திட முடியும்??   அர்ஜுனன்  பாக்கியம்  நம் ஸௌபாக்கியம்..  அர்ஜுனன் மூலம்  முழு  மனுஷ்ய  ஸமுதாயத்திற்கும்  விலை மதிப்பிற்கு அப்பாற்பட்ட  இந்தப்  பரிஸு  கிடைத்திருக்கிறது.

நமக்கும்  நண்பன்  இருக்கிறானா..?   பக்தனாகவும்  நண்பனாகவும்  நாம்  எவருக்கு  இருக்கிறோமோ  அத்தகைய  அரிய  நண்பன்  இருக்கிறானா?  வலைதளத்தில்  நண்பன் என்ற  பதக்கம் ஏந்திய  பலரும் உள்ளனர்.   ஆனால்,  உண்மையான  நண்பர்கள் உள்ளனரா??  அதிலும் ஸ்ரீ கிருஷ்ணனைப் போன்றதொரு நண்பன்  நமக்கு  வாய்த்து விட்டால்...  பின் வாழ்க்கையில்  வேறு என்ன வேண்டும்?

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...