Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 33


கீதையில் சில சொற்றொடர்கள் - 33

कर्मण्यकर्म यः पश्येद् अकर्मणि च कर्म यः  स बुद्धिमान् मनुष्यः |  (अध्याय ४ - श्लोक १८)
கர்மண்யகர்ம யஹ் பஶ்யேத் அகர்மணி ச கர்ம யஹ் ஸ புத்திமான் மனுஷ்யஹ்  ...(அத்யாயம் 4 - ஶ்லோகம் 18)
Karmanyakarma Yah Pashyed Akarmani cha Karma yah Sa Buddhimaan Manushyah ... (Chapter 4 - Shlokam 18)

அர்தம் :  கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் காண்பவனே புத்திஶாலி..

கர்மம், அகர்மம் பற்றி இதற்கு முந்தைய குறிப்பில் சிந்தனை செய்திருக்கிறோம் அல்லவா..  எனவே, இந்த சொற்றொடரில் வேறெதையேனும் காண முயல்வோம் வாருங்கள்.. அப்பால் நோக்கிடச் சொல்கிறது கீதையின் இந்தச் சொற்றொடர். அப்பால் நோக்குதலின் மஹத்வத்தினைச் சொல்கிறது. ஐம்புலன்களால் அறியக்கூடியதற்கு அப்பால்..  நம் புத்தியினால் க்ரஹிக்கக் கூடியதற்கு அப்பால்...  தத் க்ஷணத்திற்கு அப்பால்.. நமக்குப் பழகிய நமது குறுகிய சிந்தனை ஓட்டத்திற்கு அப்பால்.. அப்பால் நோக்குதல் ஒரு சிறப்பான பழக்கம் அல்லது தன்மை. (பயிற்சியினால் உருவாவது பழக்கம்.  ஜன்மத்தின் போது நம்முடன் வருவது தன்மை.)  பரமனின் திட்டப்படியோ அல்லது விதியின் நிர்ணயத்திலோ எல்லாம் நடக்கும் என்று கருதுபவர்கள் தன்மை அல்லது ஸ்வபாவம் என்று அழைத்துக் கொள்ளுங்கள். ஸ்வய நிர்ணயம் அல்லது என் கையில்தான் எல்லாம் என்று கருதுபவர்கள் பழக்கம் என்று கொள்ளுங்கள்.

பாரம்பர்யமான வழிமுறைகள் மற்றும் இந்நாள் வரை அவர் பின்பற்றிய வழிமுறைகளுக்கு அப்பால் யோஜித்திடும் வ்யாபாரி, தன் வ்யாபாரத்தை மற்றத் துறைகளிலும் மற்ற ப்ரதேஶங்களிலும் விஸ்தரிக்கிறான்.  இயற்கையை நுட்பமாக கவனித்திடும் மாணவன் கண்களுக்கு நிதர்ஶனமாகத் தெரியக் கூடியதற்கு அப்பால் நோக்கினால் ஆழங்களை அடைகிறான்.  இயற்கையின் ரஹஸ்யங்களைக் காண்கிறான்.  விக்ஞானியாக மலர்கிறான்.  விக்ஞானத் துறையில் பெரும் பங்கு செலுத்துகிறான்.  ஒரு ஸமூஹ ஆர்வலர் வடிக்கப் பட்ட பாதைக்கு அப்பால் சிந்தித்தால் புரட்சியாளன் ஆகிறான்.  ஒரு யுக புருஷன் ஆகிறான்.  காணும் காக்ஷீ,, கேட்ட ஶப்தம்,  படித்த வார்த்தைக்கு அப்பால் நோக்குபவன் ஓவியனாக, ஸங்கீதக் கலைஞனாக,  ஸாஹித்ய கர்தாவாக மலர்கிறான்.  தத்காலத்தைத் தாண்டி, தற்போதைய தலைமுறையைத் தாண்டி நோக்குபவன் ர்ஷீ ஆகிறான்.  ஸ்தூலமான இந்தப் படைப்பிற்கு அப்பால் நோக்குபவன் பரமனுடன் ஒன்றுகிறான்.

அப்பால் நோக்குதல் குழப்பங்களைத் தகர்த்து, தெளிவான முடிவு எடுப்பதில் நமக்குத் துணை புரிகிறது.  அப்பால் நோக்குதல் நம்மை ஸமத்வம் உள்ளவனாக, பாரபக்ஷம் அற்றவனாக மாற்றுகிறது.  அப்பால் நோக்குதல் நம்முள் மண்டிக் கிடக்கும் பகை என்ற களையைக் களைந்து  நம்முள் க்ஷமா அல்லது மன்னிக்கும் தன்மையை வளர்த்து விடுகிறது..  அப்பால் நோக்குதல்  நம்முள் தழைத்திடும் பயத்தைக் கொன்று சூழ்நிலைகளை வெற்றி கொள்ளும் ஸாமர்த்யத்தை  வளர்த்து விடுகிறது.

அப்பால் நோக்குவோம்.  குறைந்த பக்ஷம் அப்பால் நோக்க முயலுவோம்.  எதையேனும் காணலாம்  காண முடியாமல் போகலாம்.   அப்பால் நோக்குதல் என்ற முயற்சி தன்னில் ஒரு சிறப்பான முயற்சி..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...