Skip to main content

கீதையின் சில சொற்றொடர்கள் - 35

-: ॐ :-
கீதையின் சில சொற்றொடர்கள் - 35

कर्मण्यभिप्रवृत्तोsपि  ... (अध्याय ४  - श्लोक २०)
கரமண்யபி ப்ரவ்ருத்தோsபி ... (அத்யாயம்  4 - ஶ்லோகம்  20)
Karmanyabhi Pravrutto(a)pi ... (Chapter 4 - Shloka 20)

அர்தம் :  தன்னை மறந்து, செயலில் மூழ்கி  ஈடுபட்டும் ... 

இது ஒரு அழகான சொற்றொடர் .  அந்தச் சொற்றொடர் விவரித்திடும்  அந்நிலையும்  அழகான ஒரு நிலை.  இது ஒரு பூர்ணமாகாத  சொற்றொடர் என்று  தோன்றுகிறது.  தன்னை மறந்து, செயலில் மூழ்கி  ஈடுபட்டும் ...  ஆம்.  உண்மைதான்.  இது  பூர்ணமானது இல்லை.  ஆனால்,  இதை பூர்ணமாகிடும் பகுதியையும்  இச்சொற்றொடரே யூஹிக்க  வைக்கிறது.  "அவர் இந்தச் செயலிலும்  ஈடுபடவில்லை".  "அவர் செயலில் இருந்து  விலகியே நிற்கிறார்"...

ஈடுபாடு பூர்ணமானது.  மூழ்குதல் முழுமையானது.  ஶரீரம்,  மனஸ் மற்றும் புத்தி என்றனைத்தும்,  ஆளுமையின் அணு அணுவும்  ஈடுபட்டிடும்.  முழுமையாக ஈடுபட்டிடும்.  ஶரீரத்தில்  வேறு எந்தச் செயலுக்காகவும் ஆற்றல் மீதம் இருந்திடாது.  மனஸில்  வேறு எந்தச் செயலுக்காகவும்  ஆர்வமும் மிச்சம் இருந்திடாது.  புத்தியில்  வேறு எந்தச் செயலைப் பற்றிய சிந்தனையும் இருந்திடாது.  ஶரீரத்தில் எவ்வித  அஸைவும் ஆட்டமும் இருந்தாலும் அது ஈடுபட்டிருக்கும் செயலின் பூர்திக்காகவே இருந்திடும்.  மனஸில்  எவ்விதக் கனவு அல்லது ஆர்வம் மலர்ந்தாலும் அது ஈடுபட்டச் செயலைப் பற்றியதாகவே இருந்திடும்.  புத்தியில்  எவ்வித திட்டம் அல்லது யோஜனை  எழுந்தாலும் அது ஈடுபட்ட அச்செயல் மேன்மேலும் உன்னதமாகி விடுவதற்காகவே  எழுந்திடும்.  ஓய்வும் உறக்கமும் கூட அச்செயல் திறம்பட நடந்திட உதவிடும் வகையில் மாத்ரம் இருந்திடும்.

விலகி நிற்பதும் முழுமையானதாகவே  இருந்திடும்.  ஶரீரம்  களைத்திடும்.  எவ்வித ப்ரயத்னமும் இல்லாமல் உறக்கத்தில் ஆழ்ந்து விடும்.  படுத்த தத்க்ஷணம் உறங்கி விடும்.  ஶரீரம்  களைத்திருப்பது  உண்மைதான்.  ஆனால், களைத்திருக்கிறேன் என்பது இவனுள் பதிவாகாது.

மனஸ் அலுத்துக் கொள்ளாது.  மனஸ் உத்ஸாஹம் இழந்திடாது.  மனஸ் பரபரப்பும் அடையாது.  சோர்ந்து குலைந்தும் விடாது.  செயல் மற்றும் அதனால் விளையும் என்று எதிர்பார்க்கப்படும் பலன் மீது ஏற்படும் பற்று மனஸை மேற்கூறிய நிலைகளுக்குத் தள்ளும்.  இவரோ  செயலில் ஈடுபடுகிறார்.  செயலில் தொடர்ந்து மூழ்குகிறார்.  அவ்வளவுதான்.  செயலில் இருந்து தத்க்ஷணம் விலகியும் விடுகிறார்.  பிறர் கையில் ஒப்படைத்து விட்டு, அவர் எவ்வாறு செயகிறார் என்று காணும் ஆர்வமும் இல்லாமல், தன்னுடைய வழிகாட்டுதல் அல்லது யோஜனையை அவர் நாட வேண்டும் என்ற ஆஶையும் இல்லாமல் செயலில் இருந்து பூர்ணமாக விலகி விடுகிறார்.

நான் ஸந்தித்துப் பழகிய மனுஷ்யருள் என் தாயார்  இந்நிலையில் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்,  அநுபவித்திருக்கிறேன்.  அவள்  செயலில் ஈடுபட்டாள்.  ஒவ்வொரு க்ஷணமும் ஈடுபட்டாள்.  பூர்ணமாக ஈடுபட்டாள்.  பல்வேறு செயல்களில் ஈடுபட்டாள்.  கையில் இருக்கும் செயலில் மூழ்கி ஈடுபட்டாள்.  அவள் குற்றம், குறை கூறி புலம்பியதை நான் கேட்டதில்லை.  சோர்ந்து, முகம் வாடி அமர்ந்திருப்பதை நான் கண்டதில்லை.  ஒரு செயலின் மீது அவள் விஶேஷ ஆர்வம் கொண்டு  அதை நாடியதையும் நான் கண்டதில்லை.  அதே ஸமயம், வெறுப்பு கொண்டு ஒரு செயலை அவள் தவிர்த்திட முயல்வதையும்  நான் கண்டதில்லை.  செயலில் இணைந்திட எந்நேரமும் தயார்.  செயலில் மூழ்கித் தொடர்ந்திடத் தயார்.  செயலில் இருந்து ஒரே க்ஷணத்தில் விலகிடவும் தயார்.  இவ்வுலகத்தில் இருந்தும் அவள் எவ்வித பிரயாஸையும் இல்லாமல் விலகி விட்டாள்.

அவளிடம் இருந்து பெற்ற ப்ரஸாதம் ... இத்தகைய நிலையை முழு நேரம் ஸங்க (RSS) கார்யத்தில்  ஈடுபட்டிருந்த காலத்திலும்,  மனைவி அகிலா நோயால் பீடிக்கப்பட்டிருந்த காலத்திலும், ஸமீபத்தில் ஸ்ரீ ஶங்கர மடத்தின் நிர்வாஹத்தில் கவனம் செலுத்தும் கழிந்த மூன்று நான்கு மாஸ காலத்திலும் நான் அநுபவித்திருக்கிறேன்.  நானும் அநுபவித்திருக்கிறேன்.  ஸ்வய நினைவுடன் கூடிய சீரான, திட்டமிட்ட ப்ரயத்னங்களால் இந்நிலையை எய்திட முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை.  ஆனால்,  ஒரு ஸில க்ஷணங்களேனும் இந்நிலையை அநுபவித்தவன் பாக்யஶாலீ, பரமனின் அநுக்ரஹம் பெற்றவன் என்பதில் லவலேஶமும்  ஸந்தேஹம் இல்லை.

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...