Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 36

கீதையில் சில சொற்றொடர்கள் - 36

द्वन्द्वातीत ... (अध्याय ४ - श्लोक २२)
த்வந்த்வாதீத ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 22)
Dwandwaatheetha  ...  (Chapter 4 - Shloka 22)

அர்ம் :  த்வந்த்வம் என்றால் இருவருக்கு  அல்லது  இரண்டு விஷயங்களுக்கு இடையே போராட்டம் என்று அர்ம்.  அதீத என்றால் அப்பால்...  தாண்டி  என்று அர்தம்.   த்வந்த்வாதீதம்  என்றால்  எதிர்மறையான இருமைகளுக்கு அப்பால் என்று அர்தம் 

நம்மைச் சுற்றிலும்  நாம் பல்வேறு ரெட்டையர்களை,  நேர் எதிர்மறையான ரெட்டையர்களை,  ஒன்றுக்கொன்று முரணான ரெட்டையர்களைப் பார்க்கிறோம்.  வெளிச்சமான பகல் இருக்கிறதென்றால் இருண்ட  ராத்ரீயும் இருக்கிறது.  படு உஷ்ணமான வெய்யில் காலம் உண்டென்றால் கடுங்குளிர்க் காலமும் உண்டு.  மதுரமான தேனும் இளநீரும் உண்டென்றால் கசப்பான கடுக்காயும் பாகற்காயுமுண்டு.  கண்ணுக்கு அழகான தாமரையும் ரோஜாவும் உண்டென்றால் கோணல்மாணலான கற்றாழையும்  உண்டு.  காதிற்கு  மதுரமான குயில் ஶப்தம் உண்டென்றால் கர்ணகடூரமான கழுதைக் கத்தலும் உண்டு.  தொடுதலுக்கு ஹிதமான பட்டும் பட்டாம்பூச்சியும்  உண்டென்றால்  சொறசொறப்பான கம்பளியும் முள்ளும்  உண்டு.  இவை எல்லாம் நம் இந்த்ரியங்கள்  அடையும்  அநுபவங்களில்  உள்ள  முரண்பாடுகள்.

நம் மனஸும்  பற்பல  முரண்பாடான அநுபவங்களைப்  பெறுகிறது.  பாராட்டு  உண்டென்றால் வசைகளும் உண்டு.  வரவேற்பு உண்டு.  எதிர்ப்பும் உண்டு.  ப்ரியம்  உண்டென்றால்  வெறுப்பும் உண்டு.  நட்பு உண்டு.  பகையும் உண்டு.  மனஸிற்கு ஹிதமானவை  உண்டென்றால்  கசப்பானவையும் உண்டு.  நம்பிக்கையுடன்  ஏமாற்றமும்  உண்டு.  லாபத்துடன்  நஷ்டமும்  உண்டு.

இவை அனைத்தும் நம்மைச் சுற்றி  உள்ள  உலகத்துடன்  நாம்  உறவாடும்  போது, தொடர்பு கொண்டிடும் போது  நாம்  பெற்றிடும்  அநுபவங்கள்.  நம்மால் உலகத்துடன் எவ்விதப்  பிணைப்பும்  இல்லாமல் வாழ முடியுமா ?  முடியாதல்லவா ? ராத்ரீயையும் பகலையும் தவிர்க்கிட முடியுமா ?  வெய்யிலையும் குளிரையும் தவிர்க்க முடியுமா ?  புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் தவிர்க்க முடியுமா ?  மான அபமானத்தைதான் தவிர்க்க முடியுமா ?  நம்மைச்  சுற்றிலும் உள்ள  உலகத்துடனும்  உலக  விஷயங்களுடனும் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க  முடியாதென்பதால்,  இந்த  அநுபவங்களும்  தவிர்க்கப்பட  முடியாதவை.  எனில் என்ன செய்யலாம்  ..??  ஸற்று ஸூக்ஷ்மமாக  கவனித்தோம்  என்றால் இவ்வநுபவங்களை  வர்ணித்திட நாம் உபயோகப்படுத்தியப்  பெயர்ச்சொற்களே  பேதங்களுக்கு போராட்டங்களுக்கும் காரணம் என்பதைப்  புரிந்து கொள்ளலாம்.  கடுமையான, கசப்பான, மதுரமான, ஸுகமான, மென்மையான, அருவருப்பான, ஹிதமான,  போன்ற சொற்களே த்வந்த்வங்களுக்குக் காரணம்.  இவற்றை நீக்கி விட்டால் எஞ்ஜி  இருப்பவை வெறும் அநுபவம் மாத்ரமே.  நம் அநுபவங்களை  வர்ணித்திடாமல் வெறும் அநுபவங்களாக  ஏற்றுக் கொண்டால்  நாமும்  த்வந்த்வாதீதன் ஆகி விட முடியும்.

ஆனால், அனுபவங்கள் வெவ்வேறாகத்தானே தெரிகின்றன.  வெவ்வேறாகப் பார்த்திடாமல் ஒன்றாகவே பார்த்திடல்  ஸாத்யமா ?  ஒவ்வொன்றுக்கும் ஸ்வபாவம் வெவ்வேறு என்பதால் அதனுடன் தொடர்பு  கொள்ளும் போது ஏற்படும் அநுபவமும் வெவ்வேறுதான்.  ரோஜாவின் ஸ்வபாவம், பாறையின் ஸ்வபாவம், ஒரு மிருகத்தின் ஸ்வபாவம், ஒரு பறவையின் ஸ்வபாவம், ஒரு மனுஷ்யனின் ஸ்வபாவம்..  ஒவ்வொன்றும் வெவ்வேறு.  ஸ்வபாவத்தை மாற்ற முடியுமா ?  தன்னுடைய ஸ்வபாவத்தை மாற்றிக் கொள்வதுதான் மிக ஸுலபமானது.  பெரும்பாலோரால் அதுவே இயலவில்லை.  பின், அடுத்தவரின் ஸ்வபாவத்தை மாற்றுவதெங்ஙனம் ?  இயலாதது.  அதே ஸமயம், தொடர்பு கொள்ளாமலும் இருக்க முடியாது.  தொடர்பு ஸமயத்தில்  ஏற்படும் அநுபவத்தை வர்ணித்திடாமல்,  அப்படியே ஏற்றுக் கொள்ளத் தனக்குத்தானே பயிற்சி அளித்தல் மாத்ரமே நம்மால் செய்யக் கூடிய ஒன்று.  அநுபவங்கள்  அநுகூலம் - ப்ரதிகூலம், இனிப்பு - கசப்பு, ஹிதம் - கஷ்டம்  போ ன்றவை நம்முள் இறங்கி எவ்வித சலனத்தையும் ஏற்படுத்த அநுமதிக்கக் கூடாது.  நம்மை நாமே மாற்றிக் கொள்ளலாம்.  உலகத்தை மாற்றிட  முயலக்   கூடாது.

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...