Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 38


கீதையில் சில சொற்றொடர்கள் - 38

यज्ञ शिष्टामृतभुजो ...   (अध्याय ४ - श्लोक ३१)
யக்ஞ ஶிஷ்டாம்ருத புஜோ  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 31)
Yagya Shishtaamruta Bhujo .... (Chapter 4 - Shloka 31)

அர்தம் :  யக்ஞத்தின் ஶேஷமான அம்ருதத்தை பூஜிப்பவன், உட்கொள்பவன் எவனோ ....

உலக வ்யவஹாரங்களில் கொடுத்தல் - வாங்கல்  பரிந்துரைக்கப் படுகிறது ...  கொடுத்தல்..- கொடுத்த பிறகு எடுத்துக் கொள்ளல். என்பதே கீதையின் இந்த ஶ்லோகத்தின் தாத்பர்யம்.  யக்ஞ ஶிஷ்டாம்ருத புஜோ ,  யக்ஞத்தின் ஶேஷத்தை, யக்ஞத்தின் மிச்சத்தை, எடுத்துக் கொள்.  அக்னீயில் ஆஹுதி  ஆக்குவதே யக்ஞம் என்றால், யக்ஞத்தின் ஶேஷம் வெறும் ஸாம்பல் மாத்ரமே ..  ஸாம்பலை புஜித்திடு என்பது கீதையின் யோஜனை ஆக முடியுமா ??  யக்ஞம் என்பது வெறும் அக்னீ கர்மம் இல்லை..  த்யாக பாவமே யக்ஞம். கொடுத்தல், ஸ்வய-நலமற்ற நோக்கத்திற்கு, உயர்ந்த நோக்கத்திற்கு கொடுத்தாலே யக்ஞம்.

நாம் அனைவரும், இங்குள்ள உயிர்கள் அனைத்தும் தாம் உயிர் வாழ்வதற்கே  எடுத்தாக வேண்டும்.  யக்ஞ ஶேஷத்தை எடுத்துக் கொள் என்ற பதத்திற்கு இரண்டு விளக்கங்கள் இருக்க முடியும்.. ஒன்று...கொடுத்தல், கொடுத்து விட்டு எடுத்துக் கொள்ளல்.. பிறருக்குக் கொடுத்தல்.. பின்னர் ஸ்வயத்திற்கு எடுத்துக் கொள்ளல். இரண்டு .. கொடுத்தல் இயலலாம், இயலாமல் போகலாம் ...  ஆனால், ஸ்வயத்திற்காக குறைந்த பக்ஷம் எடுத்துக் கொள்ளல் ..  உயிர் வாழ்ந்திட குறைந்த பக்ஷம் அவஶ்யம் எதுவோ, அதை மாத்ரம் எடுத்துக் கொள்ளுதல்..  போக பாவத்துடன் அல்லாமல் த்யாக பாவத்துடன் எடுத்துக் கொள்ளல் ...இவ்விரண்டு நிலைகளுக்கும் உருவகம் கொடுத்தால் அங்கு நம் தாய் தோன்றுவாள்...  அவள் கொடுக்கிறாள்.. கொடுக்க மட்டும் செய்கிறாள் ...  அவள் கார்யங்களைச் செய்வதும், போஜனம் ஸமைப்பதும், பாடல் பாடுவதும், பிரார்தனை செய்வதும், திட்டம் போடுவதும், சிந்தனைச் செய்வதும்..  அவள் எதைச் செய்தாலும் அவை அனைத்தும் பிறருக்காகவே ..  தன் குழந்தைகளுக்காக மாத்ரம் அல்லாமல், 'என்னுடையவர்' 'என் குடும்பத்தவர்' என்று அவள் எவரை எல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிறாளோ அவர்கள் அனைவருக்காகவும் ...செய்கிறாள்.. அவளது ஆற்றல், அவளது உழைப்பு, அவளது புத்தி, அவளது திறமைகள், அவளது நேரம் .. அவளிடம் வேறு என்னென்ன இருக்கிறதோ அவை அனைத்தும் .. 'என்னவர்கள்' என்று அவள் கருதிடும் பிறருக்காக ... அதே ஸமயம், அவளது வேதனை, அவளது வலி, அவளது து:க்கம், அவளது கவலைகள்..  இவற்றில் எதுவும் பிறருக்கு இல்லை .. இவற்றை அவள் தன்னுள், ஆழத்தில் மறைத்து வைத்துக் கொள்கிறாள் .. 

இங்கு ஒரு கேள்வி எழுகிறது ..  இது நான்-எனது என்ற மமதை அல்லவா ?  ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் ...  அன்பினால், தூய, ஸ்வய-நலமற்ற அன்பினால் மாத்ரமே கொடுக்க வைக்க முடியும் ..  என்னுடைய என்ற மமதையால் உரிமைக் கொண்டாட வைக்க முடியுமே அன்றி,  எதிர்ப்பார்க்க வைக்க முடியுமே அன்றி கொடுக்க வைக்க முடியாது ...
ப்ரக்ருதி அல்லது இயற்கையும் இவ்வகையிலேயே அமைந்துள்ளது ... கொடுத்தல் அதிக-பக்ஷம்... எடுத்துக் கொள்ளுதல் குறைந்த-பக்ஷம்..

இதை ஸ்வய-நலம் என்றும் கூறலாம்...  ஆனால், இங்கு ஸ்வயம் என்பது குறுகிய, நான் மாத்ரம் இல்லை.  விரிந்த நான்.. விஸ்தாரமான நான் ... பிறரை தன்னுள் ஐக்யமாக்கிக் கொண்ட நான்... அன்பு செலுத்துதல், கொடுத்தல் என்னும் போது, அதில்  த்வைத பாவம்   உள்ளது.இரண்டு உள்ளன.  அன்பு செலுத்துபவர், அன்பு செலுத்தப் படுபவர்... கொடுப்பவர், வாங்குபவர் ... அதை விட உன்னதமானது அத்வைத பாவம் உள்ள நிலை... இங்கு கொடுப்பவரும் வாங்குபவரும் வெவ்வேறு இல்லை.. இங்கு அன்பு செலுத்துதல் இல்லை, கொடுத்தாலும் இல்லை...  ஸ்வய-நலம் மாத்ரமே ...  ஆனந்த மயமான ஸ்வய-நலம்...  ப்ரஹ்ம-மயமான ஸ்வய-நலம்...

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...