Skip to main content

கீதையில் ஸில சொற்றொடர்கள் - 39


கீதையில் ஸில சொற்றொடர்கள் - 39

प्रणिपादेन .... (अध्याय ४ - श्लोक ३४)
ப்ரணி பாதேன .... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 34)
PraNi Paadena .... (Chapter 4 - Shloka 34)

அர்தம் :  காலில் விழுந்து வணங்கி ...

நமஸ்காரம், நமஸ்தே, வணக்கம், நமஸ்காரா, நமஸ்கரிக்குன்னு, நமஸ்காரமண்டி, பாய் லாகூ,, சரண் சூ, ஜய ஸ்ரீ கிருஷ்ண, ராம் ராம், இவை எல்லாம் பாரத நாட்டில் வெவ்வேறு ப்ரதேஶங்களில் ஒருவர் மற்றவரை ஸந்திக்கும் போது சொல்லப் படும் வார்தைகள்.  இவை அனைத்தின் அர்தமும் ஒன்றேதான்.  தேவ ரூபமான உன்னை வணங்குகிறேன் என்பதுதான் அது.  வெவ்வேறு மொழிகளில் வார்தைகள் மாறுபட்டாலும், மனுஷ்யன் பரமாத்மாவின் ஸ்வரூபம் என்பதும் அதனால் வணங்கப்பட வேண்டும் என்பதும் நம் பாரத நாடு முழுவதும் ஏற்கப்படும் பொதுவான பார்வை.

இவ்வார்தைகளுடன் இணைந்து வரும் செயல்கள் எத்தகையவை ? ஶிரம் தாழ்த்துதல், ரெண்டு உள்ளங்கைகளையும் சேர்த்தல், குனிந்து பாதத்தைத் தொடுதல், ஸாஷ்டாங்கமாக பூமியில் விழுதல், ஐரோப்ப, ஆஃப்ரிக்க, அமெரிக கண்டங்களில் வணங்குதல் என்ற வழக்கம் கிடையாது,  எனவே, அங்குள்ள மொழிகளில் அதற்கான வார்தையும் கிடையாது.  பௌத்த மதம் அனுஷ்டிக்கப்படும் தேஶங்களில் இந்த பழக்கமும் உண்டு.  அங்குள்ள பாஷைகளில் அதற்கான வார்தையும் உண்டு .. ஆனால், பாரதத்தில் மாத்ரமே காலைத் தொட்டு வணங்குதல், காலில் விழுதல், ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் என்ற பழக்கம் வேரூன்றி இருக்கிறது.  நான் பாரதம் என்று சொல்லும் போது, இந்தியா எனப்படும் துண்டிக்கப்பட்ட  இன்றைய பூமியுடன் சேர்த்து, நம்முடன் இணைந்திருந்த நேபாளம், ஸ்ரீ லங்கா, தாயலாந், ப்ரஹ்மதேஶம், திபெத், பாகிஸ்தான், பங்க்ளாதேஶம்,  ஆகிய பூ ப்ரதேஶங்களையும் குறிப்பிடுகிறேன்.  அதாவது, அகண்ட பாரதத்தைக் குறிப்பிடுகிறேன்.

காலில் விழுவதற்கு மனஸில் விநயம் வேண்டும்.  மனஸ் விறைத்து நின்றால் காலில் விழுந்து வணங்க முடியாது.  அப்படியே விழுந்தாலும் அது வறட்டு ஷடங்காக மாத்ரம் இருந்திடும்.

தன் கால் அல்லது காலில் உள்ள செருப்பை அவனது தலையில் வைப்பதோ அல்லது அவ்வாறு வைப்பதாகச் சொல்வதோ தான் ஒருவனை அபமானப் படுத்துவதற்காக, அவனுடைய 'நானை' புண்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் உபயோகப் படுத்தப் படும் செய்கைகள்..  இதற்கு நேர் எதிர் மாறாக, தன் தலையை ஸ்வயமாக அடுத்தவனுடைய காலடியில் வைப்பது தன்னுடைய நானை அழிக்க உதவும் அல்லவா ?

காலில் விழுதல் ..இதற்கு மற்றும் ஒரு கோணமும் உண்டு. ஶரணடைதல் என்பதே அது.  ஶரணடைதலும் ஸுலபமானதல்ல. 'என்னுடைய ஸ்வய முயற்சி எதுவும் இல்லை, எல்லாம் உன் விருப்பப்படி' என்ற பாவமே ஶரணடைதல்.  ஆற்றல், அதிகாரம், பலம், செல்வம் ஆகியவற்றால் தன்னை விட பன்மடங்கு உயர்ந்தவனை ஶரணடைதல் ஸுலபம்.  இந்த அனைத்து ஶரணடைதல்-களிலும் பயம் அல்லது ஸ்வயநல எதிர்ப்பார்ப்பு காரணமாக இருந்திடும் வாய்ப்பு மிக அதிகம்.  ஆனால், குணம் மற்றும் வித்யை இவற்றை மாத்ரம் பூஷணமாக அணிந்து, எவ்வித அதிகாரமும், செல்வமும், பலமும் இல்லாத ஆசார்யனிடம் ஶரணடைதல் -- ஸ்ரீ க்ருஷ்ணன் இந்த சொற்றொடர் மூலம் ப்ரகடனப் படுத்தும் கருத்து இதுதான்.

ப்ரணி பாதேன மூலம் நான் அற்றுப் போக வேண்டும்.  ஶரணடைதல் விளைய வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...