Skip to main content

பஶுவுடன் ஒரு உரையாடல் .....


பஶுவுடன் ஒரு உரையாடல் ...

அகோரம் : என்னம்மா ?? நாள் முழுவதும் என்ன பண்ணின ? சாப்பிட்டாயா ??
லக்ஷ்மீ : என்ன பண்ணுவேன் ? என்னைக் கட்டிப் போட்டிருக்கிறாயே, அந்தக் கம்பத்தைச் சுற்றிச் சுற்றி வந்தேன்.. சாப்பிட்டாயா ? என்ன கேள்வி இது ? நீ கொடுத்தால்தானே சாப்பாடு ?
: ஏன் ? நான் கொடுப்பதில்லையா ? வைக்கோல், புண்ணாக்கு, புட்டு, சோளம், அரிஸிக் கஞ்ஜி என்று வேளாவேளைக்குத் தீனி வைப்பதிலாலையை ?? மேலும் கடலை மிட்டாய், தேங்காய் போன்ற விஶேஷ தீனிகள் .. ஏன் ஶோகமாக இருக்கிறாய் ??
: ஶோகம் இல்லை. எனக்கு விதிக்கப்பட்டது இதுதான் ...என் மூக்கினுள் இவ்வளவு தடிக்கயிற்றை நுழைத்து விட்டு ஏன் ஶோகம் என்கிறாயே .. நாள் முழுதும் என்னைக் கட்டிப் போட்டிருக்கிறாய் .. ஹும்..

: உண்மைதான். நான் அன்றே பால் கறக்க வரும் பாலு யாதவிடம் சொன்னதைக் கேட்டாயல்லவா ? மூக்கணாங்கயிறு வேண்டாமே என்று நான் சொன்னவுடன் அவர், "மாடு நம் கட்டுப்பாட்டில் எப்படி இருக்கும் ?" என்று அவர் பதில் சொன்னதையும் கேட்டிருப்பாய் .. வேறு வழியில்லை. கட்டிப்போடாமல் என்ன செய்வது ? அவிழ்த்து விட்டால் நீ எந்தெந்த கதிக்கு ஆளாவாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா ? அன்றைக்கு வாஸல் பக்கம் கட்டிப் போடலாம் என்று அழைத்துச் சென்றேன். சாலையில் ஒவ்வொரு வண்டி போகும்போதும் அரண்டு நடுங்கினாய் ..
: ஆம் .. ஆம் .. என்ன ஶப்தம் .. அப்பப்பா ! ராக்ஷஸ ஶப்தம் .. குலை நடுங்க வைத்தது .. என்ன செய்வது !! இங்கு வரும் வரை, நான் க்ராமத்தில், வயல்காட்டில் வாழ்க்கையைக் கழித்திருக்கிறேன் .
: நானும் அதையே சொல்கிறேன் .. வெறும் ஶப்தத்திற்கே இப்படி என்றால் ... .. இந்த ராக்ஷஸ ஶப்தத்தை எழுப்பும் ராக்ஷஸ வண்டிகள் நிமிஷத்திற்கு நூறு போகும் சாலைகளில், மனுஷ்யனே தடுமாறும் சாலைகளில் நீ என்ன செய்வாய் ?
: ஆம் .. நினைத்தாலே வயிற்றைக் கலக்குகிறது . பார் ! பயத்தில் சாணி போட்டு விட்டேன் ...சாணி என்றவுடன் ஞாபகம் வந்தது .. நீங்கள் எல்லோரும் எங்களுக்குப் பெரும் கஷ்டம் கொடுக்கிறீர்கள் அப்பா ! நீங்கள் வீடு கட்டி முடித்து, க்ருஹ ப்ரவேஶம் என்று நடத்தும் போது, என்னை இழுத்துக் கொண்டு போய் !!.. சுற்றிலும் நீங்கள் போடும் கூச்சல் , வழுக்கும் க்ரானைட், மார்பிள் தரை, .. பயத்தில் வயிறு கலங்கி, சாணம் போட்டால் "மங்கலம் நடந்தது .. நல்ல ஶகுனம் "" என்ற பாராட்டு வேறு .. உங்கள் ஸஹவாஸமே வேண்டாம் அப்பா !! என்னை அவிழ்த்து, காட்டில் விட்டு விடு.. நான் பாட்டிற்கு வேண்டியதைத் தின்று, ஸ்வயமாக வாழ்ந்து கொள்கிறேன் ..
: இதோ பாரம்மா ! புரியாமல் பேசுகிறாய் .. காட்டில் வேட்டையாடும் மிருகங்கள் .. முதல் விஷயம் .. காடு எங்கே இருக்கிறது ?? எல்லாம் தான் அழித்தாகி விட்டதே ! நான் பாட்டிற்கு வாழகிறேன் என்கிறாயே .. உனக்கு வனத்துறை பூமி எது, அரஸுக்குச் சொந்தமான புறம்போக்கு எது, தனியொரு வ்யவஸாயியின் பூமி எது என்றெல்லாம் தெரியுமா ? இதெல்லாம் தெரியாமல் நீ பாட்டிற்குச் சுற்றினால் சாட்டையடி, முள் வேலி, மின்ஸாரம் பாயும் வேலி, துப்பாக்கிச்சூடு .. நினைத்தால் எனக்கே பயமாக இருக்கிறது ..
: அம்மம்மா ! இவ்வளவு பயங்கரமா ?? ஹும் .. ஹும் .. ((பெருமூச்சு ..))
: இன்னம் கேள் .. உன் ஶரீரத்தின் மாமிஷத்தைச் சாப்பிட அலையும் கூட்டம் .. காட்டுப்ராணிகளின் கூட்டம் இல்லை .. மனுஷ்யர்களின் கூட்டம் ..... உன்னைப் பிடித்து, கொடுமையான நரக வேதனைகளைக் கொடுத்து, தோலினுள் நீராவி பாய்ச்சி, தோலை உரித்து, ரக்தத்தை உறிந்தெடுத்து, கழுத்தை அறுத்து, வெட்டி .. விற்கும் வ்யாபாரிகளின் கூட்டம் ... ஒரு நாள் கூட உன்னால் "உன் பாட்டிற்கு" வாழ முடியாது ..
: ஶோகத்தில் மௌனமானாள் ... பெருமூச்சு ஶப்தம் மாத்ரம் கேட்டது ..
: நானும் மௌனமாக அவளது கழுத்தைச் சொறிந்து கொடுத்தேன் ..
: அப்போ நீ எனக்கு உபகாரம் தான் செய்கிறாய் என்கிறாயா ??
: அதில் என்ன ஸந்தேஹம் ? உபகாரம் இல்லை .. ஸம்ரக்ஷணம் செய்கிறேன் .. காப்பாற்று்கிறேன் ... கோவை, மாதாவாகக் கருத வேண்டும் என்று எங்கள் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்களே ...
: உண்மையில் நீ எங்களை மாதாவாகக் கருதுகிறாயா ? உன் குடும்பத்தில் ஒருத்தியாக என்னைக் கருதுகிறாயா ?

: அதில் என்ன ஸந்தேஹம் ? நிஶ்சயமாக என் மாதாவிற்கு ஸமமாக உன்னைக் கருதுகிறேன் ..
: மாதா என்றெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. முன்னொரு காலத்தில் அவ்வாறு இருந்திருக்கலாம். இப்பொழுது அவ்வாறில்லை .. நீ பொய் சொல்கிறாய் ..
: ஏன் அவ்வாறு சொல்கிறாய் ? உனக்காக நேரம் கொடுக்கிறேன் உன்னுடன் பேசுகிறேன் .. உனக்காக ஶரீரத்தால் உழைக்கிறேன் உனக்காகப் பணம் செலவழிக்கிறேன் .. உன் பாலை விற்றுக் கிடைக்கும் மாஸ வருமானம் 1,000 - 1,500 ரூபாய்தான் ஆனால், உனக்கு ஆகும் தீவனச் செலவு மாத்ரம் ஐந்து முதல் ஆறாயிரம் வரை ..
: பார்த்தாயா .. பார்த்தாயா !!! நானும் இதையே சொல்கிறேன் .. உன் வீட்டுப் பெண் அல்லது உன் அம்மாவிற்கு நீ பணக்கணக்குப் போடுவாயா ?? அது மாத்ரமா ? உனக்கு ஆண் குழந்தைப் பிறந்தால் நீ ஸந்தோஷப் படுகிறாய் .. ஆனால் எனக்கு ??? பெண் குட்டி பிறந்தால் தான் உனக்கு ஸந்தோஷம் ... உங்கள் வீட்டுப் பெண் ப்ரஸவம் ஆகிய பின் வெகு ஶீக்ரம் தாய்ப்பால் ஸுரப்பது நின்று விட வேண்டும் என்று நினைக்கிறாள் .. அதற்காக ஊஸி, மருந்துகள் ஏற்கிறாள் .. ஆனால் நான் ?? எப்பொழுதும் பால் ஸுரந்து கொண்டே இருக்க வேண்டும் .. அதிகம், இன்னம் அதிகம் பால் ஸுரந்திட மருந்துகள் . தீவனங்கள் .. உன் பால் பேராஶைக்காக .. வெறும் புல் தின்னும் எனக்கு ஆட்டுக் கொழுப்பும் மீன் கருவாடும் கலந்த தீவனம் .. விக்ஞான ஆராய்ச்சிகள் செய்து, கர்பமாய் இதுக்கும் பொழுதும் புருஷனுடன் படுக்கலாம் என்றெல்லாம் ப்ரசாரம் செய்கிறீர்கள் நீங்கள் .. .. ஆனால் என்னை காளையுடன் சேர விடாமல் .. ஊஸி மூலம் கர்பம் தரிக்க வைக்கிறாய் .. குட்டி பிறந்தவுடன் பால் அருந்த அதை அநுமதிக்காமல் தடுக்கிறாய் .. என்னிடம் இருந்து பிரிக்கிறாய் .. இதெல்லாம் தான் நீ செய்திடும் ஸம்ரக்ஷணமா ...
: சற்று நேரம் நான் வாயடைத்துப் போனேன் .. ம் ம் உன்னுடையக் கேள்விகளுக்கு என்னால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை .. நான் ஏன் உன்னைக் கட்டிப் போட்டிருக்கிறேன், ஏன் பால் கறக்கிறேன், ஏன் கன்றுக்குட்டியை உன்னிடம் இருந்து பிரித்துக் கட்டுகிறேன் .. என்பதெல்லாம் எனக்குப் புரியவில்லை எனபது ஸத்யமே .. .. மனுஷ்ய ஸமுதாயத்தில் பணி புரிந்திடும் பல்வேறு ஸமூஹ, அரஸியல் அமைப்புகளில் எனக்குப் பொறுப்பேதும் இல்லாததாலா,... செய்வதற்கு வேறு வேலை ஏதும் இல்லாமல் நேரம் நிறைய இருப்பதாலா, Selfie எடுத்து, வெளியிட்டு தற்புகழ்ச்சி தேடுவதற்காகவா .. அஹங்கார த்ருப்திக்காகவா ... ஏதோ சாகிற காலத்தில் புண்யம் ஸம்பாதித்துக் கொள்வதற்காகவா .. ஆனால் செய்கிறேன் .. ஒவ்வொருத்தனும் அவனவன் ஸ்வபாவப் படி எதையோ செய்தாக வேண்டும் .. ஶ்வாஸம் ஓடும் வரைச் செய்தாக வேண்டும் ... நானும் செய்கிறேன் .. இதனால் உனக்கு நன்மையா, கேடா என்பது தெரியாது ,.. எனக்கு நன்மையா கேடா என்பதும் தெரியவில்லை .. என் செயலால் உனக்கு ஏற்படும் வலி, வேதனை, கஷ்டங்களுக்கு மன்னிப்புக் கோருவதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை ...என்னை மன்னித்து அருள் புரிந்திடு !!!

Comments

  1. बहुत बढ़िया आत्म विचार

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...