Skip to main content

கீதையில் ஸில சொற்றொடர்கள் - 42


கீதையில் ஸில சொற்றொடர்கள் - 42

श्रद्धावाँल्लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः  ...  (अध्याय ४ - श्लोक ३९) 
ஶ்ரத்தாவா(ன்) லபதே க்ஞானம் தத்பரஹ ஸம்யதேந்த்ரியஹ ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 39) 
Shraddhaavaa(n) Labhate Gyaanam Thathparah Samyatendriyah ... (Chapter 4 - Shlokam 39)

அர்தம் :  ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவனும் புலன்களைக் கட்டுப்படுத்தியவனும் ஆன அந்த ஶ்ரத்தை உள்ளவனுக்கு க்ஞானம் ப்ராப்தி ஆகும்..

மஹாபாரத காலத்தில் ஏகலவ்யன் முதல் ஸமீப காலத்து டாக்டர் அம்பேத்கர் வரை இந்த வாக்யத்தினை ப்ரகடனப் படுத்துகின்றனர். ஶ்ரத்தை இருந்தால் க்ஞானம் கிடைத்திடும்.  க்ஞானம் கிடைப்பதற்கான மார்கம் கிடைத்திடும்.  இந்த ஶப்தாவலியில்,இந்தச் சொற்றொடரில் அதிகமான ஒரு விஷயம் சொல்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  ஈடுபாட்டுடன் கூடிய முயற்சி இருக்க வேண்டும்.  இந்திரியங்கள் வஶமாகி இருக்க வேண்டும்.

ஒரே விக்ஞானியிடம் பல மாணவர்கள் பயில்கின்றனர் ...  ஆனால், எவரோ ஒருவர்தான் அப்துல் கலாம் ஆகிறார் ..  ஒரே ஸங்கீத வித்வானிடம் பல ஶிஷ்யர்கள் பயில்கின்றனர்.  எவரோ ஒருவர்தான் MS ஆகிறார் .  ஒரே டாக்டர் ஹெட்கேவாருடன் பல இளைஞர்கள் பழகினர்.  அனைவரும் குருஜி கோல்வால்கர் ஆகவில்லை .  ஒரே ஸங்கத்தில் அநேகர் பயிற்சி பெற்றனர் .  அனைவரும் தீனதயாள உபாத்யாய ஆகவில்லை .  இவர்களிடம் என்ன விஶேஷம் ?   தீவ்ரமான ஈடுபாட்டுடன் தீவ்ரமான முயற்சி மற்ற பலரும் செய்திருப்பர் என்பதில் ஸந்தேஹம் இல்லை ,  இந்த்ரியங்களை வஶமாக்குதல் என்பதில் பின்னடைந்திருக்கலாம்.  வஶமான இந்த்ரியங்கள் என்பதிலும் ஒரு ஸிலர் வெற்றி அடைந்திருக்கலாம் .  அவர்களாலும் ஶிகரத்தைத் தொட முடியவில்லை .  மற்ற அனைத்தும் இருந்தும்  ஶ்ரத்தையில் குறை இருந்தால் வெற்றி, க்ஞானம், முழுமை வஞ்ஜிக்கப்படும் .  ஶ்ரத்தை முழுமையாக இருந்தால் மற்ற விஷயங்களில் குறை இருந்தாலும் அவை நிவர்தி செய்யப்பட்டு, ஶிகரத்தில் கொண்டு சேர்த்து விடும் .

ஶ்ரத்தை இயல்பாக ஸ்வயமாக ஒருவனிடம் இருந்திடுமா அல்லது முயற்சி செய்து ஶ்ரத்தையை வளர்த்துக் கொள்ள முடியுமா ?  இது பட்டிமன்றத்திற்கான விஷயம் .  ரெண்டிலும் பகுதி உண்மை உள்ளது .  ஶ்ரத்தை இயல்பாக ஸிலரிடம் காணப்படுகிறது, ஜன்மம் எடுக்கும் போதே உடன் வருகிறது .  இதுதான் நம்மைச் சுற்றி உள்ள உலகம் நமக்கு உணர்த்துகிறது .  ஆனால், அது முந்தைய பல ஜன்மங்களில் அந்த ஜீவன் செய்த முயற்சியின் விளைவே அது என்பது நம்  குறுகிய அறிவால் பார்க்க முடியாத உண்மை .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...