Skip to main content

கீதையில் ஸில சொற்றொடர்கள் - 43


கீதையில் ஸில சொற்றொடர்கள் - 43

योगमातिष्ठोत्तिष्ठ भारत ... (अध्याय 4 - श्लोक ४२)
யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 42)
Yogamaaatthishtotthishta Bharata ... (Chapter 4 - Shlokam 42)

அர்தம் :  யோகத்தில் ஸ்திரமாக நிலைத்து, எழுந்திடு ... பாரத ...

யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத ...  யோகத்தில் ஸ்திரமாக நிலைத்திருந்து எழுந்திடு .. பாரத !!  பரத வம்ஶத்தில் உதித்த அர்ஜுனன் இங்கு பாரத என்று விளக்கப் படுகிறான் .  இந்த வார்த்தைகள் ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனுக்காக விடுக்கும் அழைப்பு .  அதே ஸமயம் பாரத என்று உபயோகப் படுத்தப்படும் பெயர் இது பாரத தேஶத்திற்கே ஸ்ரீ க்ருஷ்ணன் விடுக்கும் அழைப்பு என்றும் நம்மை எண்ணத் தூண்டுகிறது .  விஶேஷமான தேஶம், மிகத் தொன்மையான தேஶம், உன்னதமான தேஶம் என்று அறியப்படும் பாரதம் பல நூற்றாண்டுகளாக தன்னை மறந்த நிலையில், ஆழ்ந்த நித்ரையில் மூழ்கி இருக்கிறாள் என்பதை உணரும் போது ஸ்ரீ கிருஷ்ணன் பாரத தேஶத்திற்கு விடுத்த அறைகூவல் இது என்று கருதுவதில் என்ன தவறு ?  வேதமும் இத்தகைய வார்த்தைகளை ப்ரயோகிக்கிறது.  உத்திஷ்டத !  ஜாக்ருத !!  ப்ராப்யவரான் நிபோதித !!! என்கிறது வேதம் .  எழுந்திடு !  விழித்திடு !!  லக்ஷ்யத்தை எய்திடும் வரை தளர்ந்திடாதே !!!  வேதத்தின் இந்த அறைகூவல் மொத்த மனுஷ்ய ஸமுதாயத்திற்கே என்றால் மிகையாகாது .  நூற்று முப்பது வர்ஷங்கள் முன்னர் ஸ்வாமி விவேகானந்த இதே வேத கோஷத்தை ஹிந்து ஸமுதாயத்தைத் தட்டி எழுப்பிட உபயோகப் படுத்தினார் .  ஐயாயிரம் வர்ஷங்கள் முன்னரே பாரதத்தின் எதிர்க்கால அவல நிலையை தர்ஶித்த ஸ்ரீ க்ருஷ்ணன் கீதையின் இந்த ஶப்தாவலி மூலம் பாரதத்திற்கு இந்த அறைகூவலை விடுத்திருக்கிறார் .

ஒரு தேஶம் வலிமை கொண்டதாக வளர்ந்தால் உலகத்திற்கு நன்மைதான் விளையும் என்பது நிஶ்சயம் இல்லை .  பண்டைய க்ரேக்க நாடு வலிமையுள்ளதாக மாறியது .  உலக நாடுகளின் மீது க்ரேக்க ஸேனையின் தாக்குதல்களும் யுத்தங்களும் விளைந்தன .  வலிமையான அமெரிகா உலக நாடுகளின் மீது ஆதிக்யமும் அங்குள்ள வளத்தின் ஸுரண்டலும் விளைவித்தது .  ஜெர்மனி வலிமையான தேஶம் ஆனது .  உலகத்தையே உலுக்கிய யுத்தம் விளைந்தது .  அரேபியா பொருளாதார வலிமையைப் பெற்றது .  பயங்கரவாதத்தை, உலகெங்கும் வன்முறையின் கோர தாண்டவத்தை விளைவித்தது .  அதனால்தான் ஸ்ரீ கிருஷ்ணன் பாரதத்தை யோகமாதிஷ்ட - உத்திஷ்ட என்கிறார் .  "பாரதமே !  எழுந்திடு !  வலிமை பெற்றிடு !  யோகத்தை உறுதியாகப் பற்றியவாறு வலிமை வளர்த்திடு !" என்கிறார் .  யோகம் அற்ற வலிமை ராக்ஷஸனாக வளர்ந்திடும் .  இத்தகைய தேஶம் உலகத்தில் நாஶமும் மனுஷ்யக் கூட்டத்திற்கு வலியும் வேதனையும் விளைவித்திடும் .  இந்த ஸந்தர்பத்தில் தொன்று தொட்டு நம் ஹிந்து தேஶத்தில் ராஜாவாக பட்டாபிஷேகம் செய்யப் படும் போது பின்பற்றப்படும் ஒரு வழக்கம் நினைவிற்கு வருகிறது .  ராஜாவாகப் போகிறவன் "ந தண்டோஸ்மி" என்பான் .  (நான் தண்டனைக்கு அப்பாற்பட்டவன் என்று அர்தம் .)  அருகில் நிற்கும் ராஜகுரு ஒரு தர்பைப்புல்லால் அவனது தோளில் அடித்து, "தர்மம் தண்டோஸி" என்பார் .  (நீ தர்மத்தின் தண்டத்திற்கு கட்டுப்பட்டவனே .)    

யோகம் என்பது ஸமத்வம் .  ஶரீரமும் வலிமை அடையணும் .  உள்ளமும் பண்படணும் .  வெளிப்படையான வளர்ச்சியும் வேண்டும் .  நுட்பமான ஸ்தரமும் வேண்டும் .  அரஸியல் அதிகாரம், ஆயுத ஶக்தி, பொருளாதார வலிமை ஆகியவை தர்மத்தின் கரங்களை உறுதியாகப் பற்றிய வண்ணம் வளர வேண்டும் .  இவ்வாறு இருந்ததால்தான் நாம் அறிந்த பத்தாயிர வர்ஷ வரலாற்றில் வலிமையான பாரதம் ஒரு முறை கூட அன்ய தேஶங்களின் மீது ஸேனைத் தாக்குதல்கள் நடத்தியதில்லை .  அன்ய தேஶங்களின் இயற்கை வளத்தினை ஸுரண்ட முயற்சித்ததில்லை .  வலிமையான பாரதம் உலக தேஶங்களுக்கு வழிகாட்டும் களங்கரை விளக்கமாகவே இருந்தது .  விஶ்வ குருவாகவே விளங்கியது .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...