Skip to main content

கீதையில் ஸில சொற்றொடர்கள் - 46


கீதையில் ஸில சொற்றொடர்கள் - 46

इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त .. (अध्याय ५ - श्लोक ९)
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 9)
Indhriyaaneendhriyaartheshu Vartanta ... (Chapter 5 - Shlokam 9)

அர்தம் :  இந்த்ரியங்கள் இந்த்ரியங்களுக்காக ..  செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன .....

நம் ஶரீரத்தில் பல்வேறு  இந்த்ரியங்கள் தத்தம் கார்யத்தைச் செய்கின்றன .  ஶரீரத்தின் ஒட்டு மொத்த இயக்கம் என்ற ஹேதுவில் இந்த்ரியங்கள் செயல்படுகின்றன.  கண் பார்க்கிறது.  காது கேட்கிறது .  மூக்கு நுகர்கிறது.  கை தூக்குகிறது.  கால் நடக்கிறது.  நாக்கு ஸுவைக்கிறது .  ஹ்ருதயம் துடிக்கிறது.  நுரை ஈரல் விரிந்து ஸுருங்குகிறது .  குடல் ஜீர்ணிக்கிறது .  பெருங்குடல் மலத்தை வெளியே தள்ளுகிறது .  தொண்டை பேஸுகிறது .  நகம் வளர்கிறது . மயிர் விழுகிறது .  ஸிறுநீரகம் ரக்தத்தை ஶுத்தம் செய்கிறது .  ரக்தம் ஓடுகிறது .  மூளை சிந்திக்கிறது .  புத்தி நிர்ணயம் செய்கிறது. மனஸ் அனுபவிக்கிறது .  கண் இமை சிமிட்டுகிறது .  ஶரீரத்தின் இத்தகைய பல உறுப்புக்கள் தத்தம் கார்யத்தைச் செய்கின்றன . செயல் படுவது இந்த்ரியங்களே .

ஆனால் மனுஷ்யன் அறியாமை வஶமாகியோ அல்லது அஹங்கார வஶமாகியோ அல்லது பழக்க தோஷத்தாலோ.. "நான் செய்கிறேன்", என்று கருதுகிறான் .  "நான் பார்க்கிறேன்" என்கிறான் .  "நான் கேட்கிறேன் " என்கிறான் .  "நான் ஸுவைக்கிறேன்" என்கிறான் .  "நான் சிந்திக்கிறேன்", "நான் தூக்குகிறேன்", "நான் நடக்கிறேன்", "நான் ஓடுகிறேன்", "நான் பேஸுகிறேன்", "நான் பாடுகிறேன்", என்றெல்லாம் கருதுகிறான் .  கீதையில் வேறு ஒரு ஸந்தர்பத்தில் ஸ்ரீ க்ருஷ்ணன், "நானே செய்பவன் என்று கருதுபவன் அஹங்காரம் கொண்ட மூடன் " என்கிறான் .  இவ்வாறு கருதுபவன் மூடனே .  இவனுடைய மூடத்தனத்தில் இவனால் அதே ஶரீரத்தில் நடக்கும் ஸூக்ஷ்மமான வேறு பல கார்யங்களைப் பார்க்க முடிவதில்லை, புரிந்து கொள்ள முடிவதில்லை என்பதால் "நான் செய்கிறேன்" என்று சொல்வதில்லை .  "அது நடக்கிறது" என்கிறான் .  "உணவு ஜீர்ணம் ஆகிறது" என்கிறான் .  "வியர்வை கொட்டுகிறது" என்கிறான் .  "ஹ்ருதயம் துடிக்கிறது", "நகம் வளர்கிறது", "கிட்னீ வேலை செய்கிறது", "ரக்தம் ஓடுகிறது", "மயிர் விழுகிறது", "மலம் வெளியேறுகிறது", என்றெல்லாம் சொல்கிறான் .  இக்கார்யங்களை "நான் செய்வதாகக்" கருதுவதில்லை .  ஸ்தூலமான கார்யங்களை இவனால் உணர முடிவதால் அவற்றை "நான் செய்கிறேன்" என்கிறான் .

எனக்கு அறிமுகமான ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை, "தொப்பைக்குப் பஸிக்கிறது" என்று சொல்லும் .  அக்குழந்தை வெளிப்படுத்துவது இயற்கையான ஞானம்.  அக்குழந்தையால் தொப்பையில் எழும் பஸியை உணர முடிகிறது. பஸித்திடும் தொப்பைக்குள்  உணவு இட வேண்டும் என்பதை அறிந்திருக்கிறது .  நாமும் வயிற்றைத் தட்டியபடி சொல்கிறோம் .  ஆனால் "எனக்குப் பஸிக்கிறது" என்கிறோம் .  தொப்பைக்குப் பஸிக்கிறது .  கை, வாய், நாக்கு, பல், தொண்டைக்குழி, எல்லாம் தொப்பைக்காகத் தத்தம் கார்யத்தைச் செய்கின்றன . மனஸ் வருந்துகிறது .  கண் கண்ணீர் விடுகிறது .  மனஸிற்காக கண் தன் கார்யத்தைச் செய்கிறது என்பதுதான் உண்மை .  இந்த்ரியங்கள் இந்த்ரியங்களுக்காக செயல் படுகின்றன .

இதே போல், "நான் பள்ளியில் பாடம் கற்றுத் தருகிறேன்", "நான் இந்த கம்பெனியில் வேலை செய்குறேன்" "இந்த தொழிற்கூடத்தை நான் நடத்துகிறேன்" என்கிறான் .  இவ்வாறு கருதுவதும் அறியாமையே .  தான் அறிந்த, தன்னால் புரிந்து கொள்ள முடிந்த கார்யங்களை மாத்ரம் "நான் செய்"வதாக நம்புகிறான் .  இவனால் புரிந்து கொள்ள முடியாத, இவன் அறிந்திடாத, ஏதோ ஒரு தொலைதூர இடத்தில் நிகழ்ந்திடும் ஒரு நிகழ்வினால் இவன் செய்வதாகக் கருதும் கார்யம் நின்று விடும் போது , "அது முடிந்து விட்டது ", என்கிறான் .  துபாயில் ஒரு தொழிற்சாலை.  "நான் நடத்துகிறேன்" என்று சொல்கிறான் .  அமெரிக்காவில் எழும் ஒரு அஸாதாரண சூழ்நிலை காரணமாக இவனுக்கு நஷ்டம் ஏற்பட்டு, தொழிற்சாலை மூடப்படுகிறது.  "நஷ்டம் ஏற்பட்டு விட்டது, தொழிற்சாலை நின்று விட்டது" என்கிறான் .  வோல்க்ஸ் வேகன் என்ற மிகப்பெரிய கார் கம்பெனியில் பாரதப் பொறுப்பாளன் ஒருவன் .  "நான் Country Operation Head என்கிறான் . அமெரிக்காவில் வோல்க்ஸ் வேகன் கம்பெனியில் ஒரு மாபெரும் ஊழல் நடவடிக்கை கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், இவனுக்கு ரெண்டு மூன்று வருஷங்கள் ஸம்பளம் கிடைக்கவில்லை.  பைத்தியம் பிடித்து, நோய் வாய்ப்பட்டு இறந்து போனான் .  "நான் செய்வதாக" நம்பிடும் ஒரு கார்யம் தொலைதூரத்தில் நிகழ்ந்திடும் ஒரு நிகழ்வினால் நின்று போகிறது.  நான் செய்வதை எவ்வாறு வேறு எவனோ ஒருவனால், வேறு ஏதோ கண்காணாத ஶக்தியால் நிறுத்த முடியும் ?

நான் செய்கிறேன் என்று நினைப்பது அறியாமை .  அது நடக்கிறது.  இந்த்ரியங்கள் தம் கார்யத்தைச் செய்கின்றன .  இந்த்ரியங்கள் செய்வதை நான் செய்வதாகக் கருதுவது, மெஷின் செய்திடும் வேலையை நான் செய்வதாகக் கருதுவது போல அறியாமையே . 

இந்த உண்மையை உணர்ந்து விட்டால் ஶரீர பாவனை மறைந்து விடும் .  தேஹ உணர்வு நீங்கி விடும் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...