Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 47



கீதையில் சில சொற்றொடர்கள் - 47

पद्म पत्रमिवान्भसा ... (अध्याय ५ - श्लोक १० )
பத்ம பத்ரமிவாம்பஸா ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 10)
Padma Patramivaambhasaa ...  (Chapter 5 - Shlokam 10)

அர்தம்  :  நீரில் தாமரை இலையைப் போல ...

ஹிந்து தர்மத்தை விளக்கும் புஸ்தகங்களில் மிக அழகான உவமைகள்  பலவற்றில் இது ஒன்று ..  பத்ம பத்ரம் என்பது  தாமரை இலை .  தாமரை இலை தண்ணீரில் இருக்கும் .  தண்ணீரால் சூழப் பட்டிருக்கும் .  ஆனால் , தண்ணீரில் இருந்து விலகி நிற்கும் .  தண்ணீர்  தன்னை நனைக்க விடாது .  தண்ணீர் தன்னை ஓட்ட விடாது .  நாம் உலகத்தில் வாழ்கிறோம் .  உலகம் , ஜனங்கள் , விஷயங்கள் , ஆஶைகள் , வெறுப்புக்கள் , ஸுக து:கங்கள் , ஸாதனைகள் ,  பாராட்டுக்கள் மற்றும் பிற வரவுகள் ,  அமைப்புக்கள் மற்றும் அவற்றில் பதவிகள் ,  என்று பலப்பல விஷயங்களால் சூழப் பட்டிருக்கிறோம் .  இவற்றால் சூழப்படுவதை நம்மால் தவிர்க்க முடியுமா ??  தனிமை , ஏகாந்தம்  இயலாதது .  இங்கிருந்து ஆரண்யத்திற்கு ஓடி விடலாம் என்ற எண்ணம் வரலாம் .  ஆனால், வனங்களில் அல்லது மலை ஶிகரங்களில் , நதிக்கரைகளில் வாழ்தல் அனைவருக்கும் ஸாத்யம் இல்லை .  இன்றைய  காலத்தில் மலை அடிவாரங்களில் (வெள்ளியங்கிரி, ஆனைக்கட்டி போன்ற இடங்கள் ), நகரத்தை விட்டு தூர வனங்களில் (எட்டிமடை போன்ற இடங்களில்) , மலை உச்சிகளில் (ஹ்ருஷீகேஷ் போன்ற இடங்களில்)  அமைதியான, ஏகாந்தமான வாழ்க்கை வாழ்ந்திடலாம் வாருங்கள் என்று அறைகூவலுடன்  ஆன்மீகக் கம்பெனிகள் ஆஷ்ரமங்கள் கட்டி வைத்திருக்கின்றன .  பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும் புள்ளிகளுக்காகவே இத்தகைய இடங்கள் உருவாக்கப் பட்டுள்ளன .  ஆனால் , இவ்விடங்களில் ஒரு நாள் தங்கலும்  பல்லாயிரங்களில் , லக்ஷங்களில் விலை போகிறது .  வர்ஷத்தில் ஒரு ஸில நாட்கள் அங்கு தங்கி, நிம்மதியை, அமைதியை ..  தாற்காலிகமானது, வாங்க வேண்டும் என்றால் உலகத்தில் இருந்து , ஓடி ஓடி பணம் ஸம்பாதிப்பது அவஶ்யமாகிறது .  எனவே , உலகத்தில் இருந்து  ஓடுவது இயலாத ஒன்று .

மாற்று என்ன ?  பத்ம பத்ரமிவாம்பஸா அதாவது நீரில்  பத்ம பத்ரம் போல .. நீரில் தாமரை இலையைப் போல வாழ்தலே ..  நீரால் சூழப்பட்டும் நீருடன் ஒட்டாமல் , வாழ்தல் .  உதாஹரணமாக ... பதவிகள் ... அரஸியல், தொழில் துறை, ஸமுதாய ,  ஸமயப் பதவிகளை  எடுத்துக் கொள்வோம் ..  பதவிகள் நிரந்தரம் அல்லாதவை .  அவற்றில் அமர்த்தப்படும் மநுஷ்யனும் நிரந்தரம் இல்லாதவன் .  எனில் , பதவியில் அமர்ந்திருப்பவன்  தாமரை இலையைப் போல இருப்பதே சிறப்பு .  எவ்வாறு ??  பரத முனி வழிகாட்டுகிறார் .  பரதன் அயோத்யா ராஜ்யத்தை பதினான்கு வருஷங்கள் ஆண்டான் .  அவனே அயோத்யாவின் மஹாராஜா .  ஆனால், அவன் மஹாராஜா இல்லை .  அவன் ஸிஹ்மாஸனத்தில் அமர்ந்திருந்தான் .  ஆனால் அமரவில்லை .  அவன் அயோத்யாவை ஆண்டது ஸ்ரீ ராமனின் ஸார்பாக ..  ஸிஹ்மாஸனம் ஸ்ரீ ராமனுடையது என்பது பரதனின் தெளிவான சிந்தனை ..  "நான் ராஜா என்ற பொறுப்பை ஏற்றிருந்தாலும் நான் ராஜா இல்லை " என்பது அவனது த்ருடமான கருத்து .  இதனால் அவனது ஆட்சித் திறன் குறையவில்லை .. மாறாக மிகச் சிறப்பாக இருந்தது .  தான் செய்திடும்  அல்பமான தவறும் ஸ்ரீ ராமனது பெயருக்கு பங்கம் விளைவித்திடும் என்று நினைத்ததால் .. ஸ்ரீ சத்ரபதி ஶிவாஜி மஹாராஜாவின்  வாழ்க்கையில் அத்புதமான ஸம்பவம் ஒன்று உண்டு .  அவரது குரு ஸமர்த ஸ்ரீ ராமதாஸ் ஒரு முறை அவரிடம் லவலேஶ ஆணவத்தைக் கண்டார் .  "நானே ஆள்கிறேன் .  நானே ஜனங்கள் அனைவருக்கும் உணவிற்குக் காரணம் ." என்ற சிந்தனையின் ஆதாரத்தில் இந்த ஆணவம் தலை தூக்கியது .  ஸ்ரீ சத்ரபதி ஶிவாஜி மஹாராஜா குரு தக்ஷிணை அளிக்க விரும்பி , விரும்புவதைக் கேளுங்கள் என்றார் .  ஸமர்த ஸ்ரீ ராமாதாஸ் ராஜ்யத்தைக் கேட்டார் .  ஸ்ரீ சத்ரபதி ஶிவாஜி உடனே அர்க்யம் அளித்து ராஜ்யத்தை ஸ்ரீ குருவிற்கு வழங்கி விட்டு, நடக்காத தொடங்கினார் .  "எங்கே செல்கிறாய் ?" என்று கேட்டார் ஸ்ரீ ராமதாஸ்.  "வனம் போகிறேன் .  மீத வாழ்க்கையை வனத்தில் கழித்துக் கொள்கிறேன் ", என்றார் சத்ரபதி ஶிவாஜி .  "இல்லை .  என்னுடைய இந்த ராஜ்யத்தை ஆண்டிடு .  இது என்னுடைய ராஜ்யம்.  உன்னுடையது இல்லை .  என் ஸார்பாக நீ ஆள வேண்டும் ." என்றார் ஸமர்த ஸ்ரீ ராமதாஸ் .

அதில் இருந்திடு .  ஆனால் அதை உன்னுள் புகை விடாதே .  அதால் சூழப்பட்டு இரு .  ஆனால் , அது உன்னை மூழ்கடிக்க அநுமதித்திடாதே .  இது மிகக் கஷ்டமானது .  பயிற்சி , கடுமையான பயிற்சி ... மற்றும்  நித்ய ஸ்வ ப்ரக்ஞை . இவை இரண்டும் பத்ம பத்ர அதாவது தாமரை இலையைப் போன்ற வாழ்க்கையை ஸாத்யமாக்கிடும் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...