Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 49


கீதையில் சில சொற்றொடர்கள் - 49


विद्या विनय सम्पन्ने ब्राह्मणे। . (अध्याय ५ - श्लोक १८)
வித்யா விநய ஸம்பன்னே ப்ராஹ்மணே ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 18)
Vidyaa Vinaya Sampanne Braahmane .. (Chapter 5 - Shlokam 18)

அர்தம் :  வித்யையும் விநயமும் நிறைந்த ப்ராஹ்மணன் ...

ரெண்டு வார்தைகளின் ப்ரயோகம் உள்ளது .  வித்யை மற்றும் விநயம் .  வித்யை என்றால் அறிந்து கொள்ள வேண்டியவை . நம் உலகம் , உலகத்தைத் தாண்டி உள்ள படைப்பு , உலகத்தில் உள்ள பல்வேறு வகை ஜீவன் ஜந்துக்கள் , ஸ்தாவரங்கள் , அவற்றின் ஶரீரங்கள் , மனஸ் , குணங்கள் , பல்வேறு செயல்கள் , அவற்றைச் செய்திடும் முறைகள் , என்று எதை எல்லாம் அறிந்து கொள்ள முடியுமோ அவை எல்லாம் வித்யை .  வேதம் என்பதே மூல வார்தை .  வேதமே அறிந்து கொள்ள வேண்டியது .  அறிந்து கொள்ள வேண்டியவை அனைத்தும் வேதத்தில் உள்ளது .  ஒரு ஸமயத்தில் வேதம் (என்ற அந்த புஸ்தகம்) மாத்ரமே என்றும் இருந்தது .

அறிந்து கொண்டால் ஞானம் பிறக்கும் என்பது நிஶ்சயம் இல்லை .  ஞானம் லபிப்பதற்குத் தடையாக இருப்பது விறைத்து நிற்கும் அந்த நான் .  அஹங்காரம் ஞான மார்கத்தில் உள்ள கடைஸி தடை .  நம்மைத் தடுத்து நிறுத்திடும் வாஸல் .  மூடி இருக்கும் கதவு .  அந்த வாஸலைத் தாண்டி அநஹங்கார நிலையை அடைதல் ஞான ப்ராப்திக்கு , பரமனின் ப்ராப்திக்கு அதி அவஶ்யம் .  அநஹங்காரம் அல்லது அஹங்காரம் அற்ற நிலை உள் நிலை .  விநயம் அந்நிலையின் வெளிப்பாடு .  அநஹங்காரம் தெரியாதது ,  நம் கண்களுக்குப் புலப்படாதது .  புலப்படுவது விநயம் .  ஶரீரம் மற்றும் வாக் மூலம் வெளிப்படும் .  விறைப்பு இல்லாத ஶரீரம் , மென்மையான வாக் இவை விநயத்தின் வெளிப்பாடு .  அறிந்தவன் நான் , விஶேஷமானவன் நான் என்ற உணர்வு அஹங்காரம் என்றால் அறிந்தவன் என்பதையே மறந்திருப்பது விநயம் .  இவ்விரண்டையும் ஒருங்கே பெற்ற ப்ராஹ்மணன் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் இந்த ஶப்தாவலீயில் ....

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...