Skip to main content

கீதையின் சில சொற்றொடர்கள் - 50


கீதையின் சில சொற்றொடர்கள் - 49

पण्डिताः सम दर्शिनः (अध्याय ५ - श्लोक १८)
பண்டிதாஹ ஸம தர்ஶினஹ (அத்யாயம் 5 - ஶ்லோகம் 18)
Panditaah Sama Darshinah (Chapter 5 - Shlokam 18)

அர்தம் :  ஸமத்வம் நிறைந்த த்ருஷ்டி கொண்டவனே பண்டிதன் .

இந்தச் சொற்றொடரில் மூன்று வார்தைகள் உள்ளன .  ஸம , தர்ஶினஹ மற்றும் பண்டிதாஹ .. 

தர்ஶினஹ ... பார்ப்பவன் ..  பார்ப்பது  என்பது கண்ணின் செயல் அல்ல .  விஞானம் கூறுவதும் அதே .. கண் ஸ்தூலமான காக்ஷீயை மாத்ரமே காண்கிறது .  ஒரே காக்ஷீ ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது ..  இந்த வேறுபாட்டிற்கு அவரவரின் பார்வைதான் காரணம் .  அவரவரின் குணங்கள் , ஸ்வபாவம் , வாழ்க்கைப் பின்னணி ஆகிய பல விஷயங்களை ஸார்ந்து அவரது பார்வை அமைகிறது .

ஸம ... என்பது ஸமத்வம் .. உலகத்துப் புறச் சூழ்நிலை ,  வெளிப்படையான வேறுபாடுகள் , நம்மை பாதித்து விடாமல் , இருப்பது ஸம நிலை அல்லது ஸமத்வம் ..  குறிப்பாக , வெளிப்படையாகத் தெரிந்திடும் வேறுபாடுகள் நம் பார்வையை , கண்ணோட்டத்தை பாதித்து விடாமல் இருப்பது ஸமத்வமான பார்வை ..  ஸமப் பார்வை கொண்டவன் அல்லது  ஸமதர்ஶினஹ .  இத்தகைய ஸமப்பார்வை கொண்டவனே பண்டிதன் என்கிறது இந்த சொற்றொடர் ..

பண்டிதன் .. பண்டிதன் என்ற வார்தை படித்தவனைக் குறிப்பதாகவே நாம் கருதுகிறோம் .  ஒரு வித்யையில் நிபுணத்வம் பெற்றவனைப் பண்டிதன் என்கிறோம் .  தமிழ்ப் பண்டிதன் , ஹிந்தி பண்டிதன் , ஸம்ஸ்க்ருத பண்டிதன் , வேத பண்டிதன் ..   இவரெல்லாம் அந்தந்த விஷயத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் .  ஆனால் , கீதையின் பார்வை அதாவது ஸ்ரீ க்ருஷ்ணனின் பார்வை அலாதியானது .  தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளில் கதி கலங்கிடாமல் இவை எல்லாம் வந்து போகக்கூடியவை , மாறக்கூடியவை , நிரந்தரமானவை அல்ல என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் ஸாம்யத்தில் த்ருடமாக இருப்பவனே பண்டிதன் என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .  அதே போல , உலகத்தில் வெளிப்படையாகக் காணப்படும் வேறுபாடுகளில் மயங்கிடாமல் ,  வேறுபாடுகளின் பின்னணியில் இழைந்தோடும் "ஒன்றை" .. "ஒரே தத்வத்தினை" காண்பவன் பண்டிதன் என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .

வேறுபாடுகளைக் காண்பவன் பிளவு படுகிறான் .  அடிப்படையான ஒன்றைக் காண்பவன் ஒருங்கிணைகிறான் .  பிளந்த பார்வை கொண்டவன் பரபரப்பாகுகிறான் .  ஸமப்பார்வை உள்ளவன் அமைதி அடைகிறான் .  புறத்தைப் பார்ப்பவன் பலவற்றைக் காண்கிறான் .  அகத்தினைப் பார்ப்பவன் ஒன்றைக் காண்கிறான் .  தமிழில் பார்ப்பனன் என்றொரு வார்தை ப்ராஹ்மணனைக் குறித்திடும் .  பார்ப்பவன் , ஸரியாகப் பார்ப்பவன் , ஸமநிலையுடன் பார்ப்பவன் என்றே அர்தம் .  

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...