Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் -53


கீதையில் சில சொற்றொடர்கள் -53


सुहृदं सर्व भूतानाम्   |  (अध्याय ५  - श्लोका २९)
ஸுஹ்ருதம் ஸர்வ பூதானாம்  ...  (அத்யாயம் 5 - ஶ்லோகம் 29)
Suhrudam Sarva Bhootaanaam  ...  (Chapter 5 - Shloka 29)

அர்தம்  :  நல்ல ஹ்ருதயம்  ...  ஹ்ருதயத்தில் நல்ல பாவனை கொண்டவன் ..  அனைத்து ஜீவன்களைப் பற்றியும்  ...

ஹ்ருத் ....  ஹ்ருதயம்  .. ஸுஹ்ருத்  .... நல்ல ஹ்ருதயம் ... ஹ்ருதயம் லப் டப் என்று அடித்துக் கொண்டு , விரிந்து ரக்தத்தை வெளியே தள்ளி ஶரீரத்திற்குள் பாய்ச்சி , ஸுருங்கி ரக்தத்தை ஶரீரத்தில் இருந்து உள்ளிழுத்து , மநுஷ்யனின் கடைஸீ ஶ்வாஸம் வரை தொடர்ந்து கார்யத்தில் லயித்திருக்கும் ஒரு கருவிதான் .  தஸைகளாலும் ரக்தக்குழாய்களாலும் செய்யப்பட்ட ஒரு கருவிதான் .  நம் கை விரல் , கண் , குடல் ... போன்று ஶரீரத்தின் மற்ற பல உறுப்புக்களைப் போன்றதொரு உறுப்புதான் .  ஸந்தேஹம் இல்லை .  அதே ஸமயம் , உணர்ச்சிகளின் இருப்பிடம் என்றும் ரஹஸ்யங்களின் குஹை என்றும் கருதப் பட்டு வருகிறது .  ஸர்வ ஸாமாந்யனுக்குப் புரியும் வகையில் ஒரு விளக்கம்  இதற்கு  உண்டு .  நம் மனஸில் பயம் , குற்ற உணர்வு , கோபம் , லஜ்ஜை , காமம் போன்ற உணர்வுகள்  எழும் போது ஹ்ருதயத் துடிப்பது வேகமாவதை கவனித்திருப்போம் .  எனவே ஹ்ருதயம் உணர்ச்சிகளின் உறைவிடமாகக் கருதப் படுகிறது .  ஸுஹ்ருத அதாவது நல்ல ஹ்ருதயம் என்பது இந்த ஸந்தர்பத்தில் சொல்லப் பட்டுள்ளது .  நல்ல ஹ்ருதயம் கொண்டவன் .  ஹ்ருதயத்தை  ஸ்நேஹம் , கருணை , பொறுமை , க்ஷமா அதாவது மன்னிப்பு ,  போன்ற நல்ல உணர்வுகளால் நிரப்பியவன் .

இந்த சொற்றொடரில் ஸ்ரீ க்ருஷ்ணன் பரமாத்மனை வர்ணிக்கும் போது இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துகிறான் .  பகவான் அனைத்து ஜீவராஶிகளைப் பற்றியும் நல்ல பாவனைக் கொண்டவர் என்ற அர்தத்தில் இந்தச் சொற்றொடர் வருகிறது ...  கீதையில் வேறொரு இடத்தில் பரமாத்மனை ஹ்ருத்ஸ்த என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .  ஜீவன்களின் ஹ்ருதயத்தில் நிலைத்திருப்பவர் .  ஹ்ருதயமே ஸ்ரீ பரமாத்மனின் வாஸஸ்தலம் .  பகவானின் நிலையான வாஸ ஸ்தலம் என்றாலும் பல ஜன்மங்களில் ஶேகரித்த  வாஸனைகளால் பிணைக்கப் பட்டிருக்கும் ஜீவனின் ஹ்ருதயம் ஸுஹ்ருதமாக இருப்பதில்லை .  ஸுஹ்ருதமாக இருந்தாலும் ஸர்வ பூதானாம் ..  அனைத்து ஜீவன்களைப் பற்றியும் ஸுஹ்ருதமாக இருப்பதில்லை ...  ஸம்ஸாரக் கவர்ச்சியில் மயங்கி , காமம் , க்ரோதம் , எனது - உனது என்ற உணர்ச்சிகளில் தோய்ந்திருக்கும் நம் ஹ்ருதயம் நூறு ஶத விஹித ஸுஹ்ருதமாக இருப்பதில்லை .

லோகத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை பரமாத்மனை நோக்கிய ப்ரயாணமாகவே  கருதப் படுகிறது ..  மெதுவாக ... மெதுவாக நம் ஹ்ருதயத்தை ஸுஹ்ருதமாக பரிணமிக்க வைப்பதே ,  மலர வைப்பதே  நம் பூலோக  வாழ்க்கையின் லக்ஷ்யம் .  பாவனைகளை நல்ல பாவனைகளாக மாற்றுவதே ... கீழான பாவனைகளை  அழித்து நல்ல பாவனைகளால் நம் ஹ்ருதயத்தை நிரப்புவதே  ... நம் இஹ லோக வாழ்க்கையின் லக்ஷ்யம் .  இன்று ஓரிரு நபர்களைப் பற்றியோ , ஒரு குடும்பத்தைப் பற்றியோ . ஒரு ஸமூஹத்தைப் பற்றியோ , ஒரு ஊர் அல்லது  ப்ரதேஶம் அல்லது ஒரு தேஶம் பற்றியோ ஒரு மொழி  அல்லது மதம் பற்றியோ ஸுஹ்ருதமாக இருக்கும் நம் ஹ்ருதயத்தை மெது மெதுவாக  விஸ்தரித்து   ஸர்வ பூத --  ஸுஹ்ருதமாக மாற்றுவதே  நம் லக்ஷ்யம் ..  இதுவே  நாம் பகவானுக்கு எவ்வளவு ஸமீபம்  வந்தடைந்திருக்கிறோம் என்பதற்கான அளவுகோல் ..... 

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...