Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 54


கீதையில் சில சொற்றொடர்கள் - 54

अनाश्रितः कर्म फलम  ।  (अध्याय ६ - श्लोक १) 
அனாஶ்ரிதஹ கர்ம ஃபலம்  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 1)
Anaashritah Karma Phalam  ... (Chapter 6 - Shlokam 1)

அர்தம்  :  கர்ம ஃபலனை ஸார்ந்திராமல்  ...

அனாஶ்ரிதஹ கர்ம ஃபலம்  ...  கர்ம ஃபலனை ஸார்ந்திராமல்  ... இந்த ஶப்தாவலீயைப் பார்த்த உடன் இதற்கு பிற்பகுதி உண்டு என்பது புலனாகிறது .  ஆம் .  உண்டு .  கார்யம் கர்ம கரோதி யஹ  ... ஸ ஸந்ந்யாஸீ ...  எவர் கர்மங்களைச்  செய்கிறாரோ  .. அவர் ஸந்ந்யாஸீ .

கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணனால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டக் கருத்து இது .  பகவத் கீதையின் ஸாரம் இதுவே என்று சொன்னாலும் மிகையாகாது .

இது கடினமானது என்பதில் ஸந்தேஹம் இல்லை .  ஆனால் , இது தான் ஸத்யம் .  இது நடைமுறைக்கு இயலாதது என்பதால் கடினம் இல்லை .  நாம் பலஹீனமானவர்கள் என்பதால் கடினம் ..  நம்மை இதற்கேற்ற வகையில் தயார் செய்து கொள்ள மூன்று நிலைகள் உண்டு .  (1) ...  கர்மஃபலனைப் பற்றிய சிந்தனை கார்யத்தை பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் .  இது புத்தி ரீதியான முயற்சி .  (2) ...  திட்டமிட்டு , முறையானப் பயிற்சிகள் செய்ய வேண்டும் .  (3) ...  இது ஶ்ரத்தையாகப் பரிணமித்து நம்முள் ஆழமாகப் பதிந்திட வேண்டும் .  இந்த ஸத்யம் நம் அந்தராத்மாவால் உணரப்பட வேண்டும் .  முதல் ரெண்டு நிலைகளால் மூன்றாவது நிலை தன்னால் விளைந்திடும் .

கர்ம ஃபலனைப் பற்றிய சிந்தனை கர்மத்தின் மீது எத்தகை பாதிப்பு ஏற்படுத்திடும் ?  கார்யம் மெதுவாகி விடும் .  கார்யத்திறன் குறைந்து விடும் .  கார்யம் கெட்டு விடும் அல்லது நின்று விடும் .  ஸில உதாஹரணங்கள் மூலம் புரிந்து கொள்ள முயல்வோம் .

குழந்தையை சீராட்டிப் பாராட்டி வளர்த்தல் பெற்றோரின் கடமை ஆகும் .  குழந்தை நல்லபடி வளர்தல் , நன்கு படித்து உயர்ந்த பதவியில் அமர்ந்து கை நிறைய ஸம்பாதித்தல் , தாய் தந்தையரைக் காப்பாற்றுதல் ... இவை அனைத்தும் இக்கடமையின் கர்ம ஃபலன்கள் .  கடமையைச் செய்து கொண்டிருக்கும் போது , ஃபலனைப் பற்றிய சிந்தனை வந்தால் என்ன ஆகும் .?  தாய் தொட்டிலை ஆட்டியபடி தாலாட்டு பாடிக் கொண்டிருக்கும் போது , ஃபலனின் சிந்தனை அவளுள் முளைத்தால் , தொட்டிலை ஆட்டும் கரங்கள் நின்று விடும் .  தாலாட்டுப் பாடிடும் வாய் மூடி மௌனமாகி விடும் .  குழந்தை பால் அருந்திக் கொண்டிருக்கும் போது இத்தகைச் சிந்தனை வந்தால் , குழந்தையின் வாய் முலையை விட்டு அகன்றதையும் அறியாமல் இருப்பாள் .  பால் கிடைக்காத குழந்தை , கத்தி அழுது அவளது நினைவை மீட்க வேண்டி வரும் .

மாணவன் கற்கிறான் .  படித்தும் எழுதியும் பயிற்சிகள் செய்கிறான் .  மன:பாடம் செய்கிறான் .  புரிந்து கொள்ள முயல்கிறான் .  இவை அனைத்தும் வித்யா என்ற அவனது கடமையில்  கர்மங்கள் .  பரீக்ஷையை நன்கு எழுதுதல் , அதிக மதிப்பெண்கள் எடுத்தல் ,  நல்ல கல்லூரியில் சேர்ந்து உயர்ப் படிப்பைப் பெறுதல் , கை நிறைய ஸம்பளத்துடன் நல்ல வேலையில் சேருதல் ... இவை அனைத்தும் மாணவனின் கர்ம - ஃபலன்கள் .  அவன் கர்ம ஃபலனை ஸார்ந்திருந்து கர்மங்களை செய்தால் என்ன ஆகும் ?  கர்மங்களைச் செய்திடும் அந்த க்ஷணத்தில் கர்ம ஃபலனைப் பற்றி சிந்தித்தால் , கவலை கொண்டால்  என்ன ஆகும் ?  (இதைச் சிந்தித்தல் என்று கூறுவது ஸரியா ?  சிந்தித்தலில் ஸ்வய நினைவு உயிருடன் இருந்திடும் .  இதைக் கனவில் மூழ்குதல் எனலாம் .  ஸ்வய நினைவு அற்ற நிலை அது .)  கர்ம ஃபலனைப் பற்றிய சிந்தனை அல்லது கனவு அவனது கண்களைப் புஸ்தகத்தில் இருந்து அகற்றி விடும் .  அப்யாஸம் என்ற அவனது கர்மம் நிறுத்தப்படும் .

ப்ரியமானவர் கடும் நோயால் பாதிக்கப் பட்டுள்ளார் .  அவரது ஸேவை ஸுஶ்ருஷையில் ஈடுபட்டிருக்கிறார் இவர் .  இது இவருக்குக் கர்மம் .  நோய் குணமாகி  நோயுற்றவர் ஸஹஜ வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் .  அல்லது மரிக்க வேண்டும் .  இவையே ஸுஶ்ருஷை செய்பவருக்குக் கர்ம ஃபலன்கள் .  எது கிடைத்தாலும் அவருக்கு நிம்மதியே .  அவரால் தன் ஸஹஜ வாழ்க்கைக்குத் திரும்பி ஸ்வந்தக் கனவுகளைத் துரத்தி ஓட முடியும் .  ஆனால் , அவர் இத்தகைய கர்ம ஃபலன்களை ஸார்ந்திருந்தால் உள்ளத்தில் சிடுசிடுப்புத் தோன்றி பதட்ட நிலையை அடைவார் .  நோயாளிக்கு ஸேவை ஸுஶ்ருஷை என்ற அவரது கார்யம் பாதிக்கும் .

இந்த திஶையில் நாம் செய்யக்கூடிய பயிற்சி என்ன ?  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த ஃபலனும் தென்படாத ஏதேனும் ஒரு கார்யம் நம் தினஸரி வாழ்க்கையின் அங்கம் ஆக வேண்டும் .  துலஸீ செடிக்குத் தண்ணீர் ஊற்றுதல் ;  அறிமுகம் இல்லாத அந்யனுக்கு தத்க்ஷணம் தேவைப்படும் உதவியைச் செய்து விட்டு மறந்து விடுதல் ,  பொது இடத்தில் பலருடன் இணைந்து மரம் வளர்ப்பு , கோவில் ஶுத்தம் செய்தல் ; குளம் தூர் வருதல்  போன்ற கார்யத்தில் ஈடுபடுதல் ;  தன்னுடைய அடையாளத்தை அழித்து ஒரு பெரும் அமைப்பில் இணைந்து விடுதல் ;  பஜனை , ஸத்ஸங்கம் போன்றவற்றில் சேர்ந்து பங்கெடுத்தல் ;  ப்ராஹ்மணனுக்கு விதிக்கப்பட்ட த்ரிகால ஸந்த்யா வந்தனம் இத்திஶையில் மிகச்சிறந்த ப்ரயோகம் .   கோஸேவை , ஸூர்யனுக்கு அர்க்யம் விடுதல் போன்றவையும் நல்ல முயற்சி .  முயற்சி எதுவானாலும் , அது திட்டமிட்ட , சீரான முயற்சியாக இருக்க வேண்டும் ..  இடையறாது செய்யப் பட வேண்டும் .  நெடுந்தூரம் வரை எவ்வகை ஃபலனும் கிடைப்பதற்கான வாய்ப்பு தெரியக் கூடாது .

இவ்வாறு செய்யப்படும் இடையறாத முயற்சியின் விளைவாக தன்னுள் ஆழத்தில் , உறுதியாக ஶ்ரத்தைப் பதிந்திடும் .  அதன் பின் ?  ஆனந்தமே .  நாளையைப் பற்றிக் கவலைப் படாமல் , ஃபலன்களை ஸார்ந்திராமல் ,   தத் க்ஷணத்தில் வாழ்ந்திடும் ஆனந்தம் .  கர்மம் செய்வதில் மாத்ரம் லயித்திடும் ஆனந்தம் ..  அதாவது ..  அனாஶ்ரிதஹ கர்ம ஃபலம்  .... கார்யங்களைச் செய்வதன் ஆனந்தம் ..கிடைத்திடும்  இந்த ஆனந்தம் கர்ம ஃபலன் இல்லை .  இது நம் ஸத்ய ஸ்வரூபம் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...