Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 55


கீதையில் சில சொற்றொடர்கள் - 55


उद्धरेदात्मनात्मानं नात्मानं अवसादयेत्  ।  (अध्याय ६ - श्लोक ५)
உத்தரேதாத்மனாத்மானம்  நாத்மானம் அவஸாதயேத்  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 5)
Udhdharedaatmanaatmaanam Naatmaanam Avasaadayet ...  (Chapter 6 - Shloka 5)

அர்தம்  :  உன்னை நீயே உயர்த்திக் கொள் .  உன்னை நீ  வீழ்த்திக் கொள்ளாதே .

உயர்த்திக் கொள்ளுதல் , ஒரு படி முன்னேறுதல் ,  இதுவே நாம் நம் வாழ்க்கையில் தொடர்ந்து செய்ய வேண்டியது .  பொதுவாக , நாம் நம்மை மற்றவருடன் ஒப்பிட்டுக் கொள்கிறோம் .  விளைவாக , அவருடன் போட்டியில் இறங்குகிறோம் .  போட்டி பஹிரங்கமானதாக இருக்கலாம் .  சாலையில் மற்ற வாஹனங்களுடன் ஒப்பிட்டு , வேகப் போட்டியில் இறங்குவதைப் போல ... போட்டி ஸூக்ஷ்மமானதாக இருக்கலாம் .  மனஸினுள் நடக்கக் கூடியதாக இருக்கலாம் .  மற்றவருடைய தோலின் நிறம் , ஸமூஹ அந்தஸ்து , செல்வம் , வீடு , இளமையான தோற்றம் போன்று எதுவும் ஒப்பிடுதலுக்கான விஷயம் ஆகலாம் .  அதை நாமும் அடைந்து விட வேண்டும் என்ற ஆவேஶத்துடன் போட்டியில் நம் மனஸ் இறங்கி விடும் .  இத்தகைய  போட்டியால் தூண்டப்பட்ட நம் செயல்கள் நாட்கணக்கில் , மாஸக்கணக்கில் ஏன் , வர்ஷக்கணக்கிலும் தொடர்ந்திடும் வாய்ப்பு உண்டு . நமக்குக் கிடைத்துள்ள காலம் என்ற பொக்கிஷத்தை , நம் வாழ்க்கையை  அல்பமான போட்டிகளில் தொலைத்து விடுகிறோம் .  நம் வாழ்க்கை ஸ்வய  ஸாதனைகள்  மையமானதாக அமையாமல் , ஒப்பிடுதல் - பொறாமை - போட்டி - பரபரப்பு - தோல்வி - இயலாமை - து:கம் என்ற ஸுழற்சியில் ஸிக்கித் தொலைந்து விடுகிறது .

ஒப்பிடுதல் இருந்தால் அது தன்னுடன் (ஸ்வயத்துடன்) மாத்ரம் இருக்க வேண்டும் . தன்னுடைய தற்போதைய நிலையுடன் ஒப்பிட வேண்டும் .  போட்டி அவஶ்யம் என்றால் , அது ஸ்வயத்துடன் மாத்ரமே இருக்க வேண்டும் .  ஸ்வய வளர்ச்சிக்கு , ஒரு அடி முன்னேற்றத்திற்கு இவை ப்ரேரணையாகி விட வேண்டும் .  "சென்ற முறை செய்ததை விட , இம்முறை சிறப்பாகச் செய்திட வேண்டும்" .  "இந்த க்ஷணத்தில் என் நிலையை விட நான் ஒரு அடி முன்னேற வேண்டும்" .  இதில் புறத் தூண்டுதல் இல்லாததால் , தொடர்ச்சியான வளர்ச்சிக்கு வாய்ப்பு உண்டு .  வாழ்நாள் முழுவதும் ஸ்வய வளர்ச்சிக்கான முயற்சிகள் தொடர்ந்திடும் வாய்ப்பு உண்டு .

அந்யருடன் ஒப்பிடுதலும் போட்டியும் நடந்திடும் போது , மனஸில் பொறாமை , படபடப்பு , பயம் , தாழ்வு மனப்பான்மை , தோல்வியின் வருத்தம் , போன்ற கீழான உணர்வுகள் உதித்திடும் .  ஆனால் , ஒப்பிடுதல் ஸ்வயத்துடன் இருந்தால் இத்தகைக் கீழான உணர்வுகளுக்கு இடம் இல்லை .

ஸ்தூல - சூக்ஷ்ம , லௌகீக - ஆன்மீக .. என்று அனைத்து விஷயங்களிலும் நம் ஸ்வய வளர்ச்சிக்கு  ஸ்வயத்தால் மாத்ரமே முயற்சி செய்ய முடியும் .  மற்றவர்களின் பங்கு ஏதும் கிடையாது .  செல்வம் , செல்வாக்கு , கல்வி , பதவி , ஆற்றல் , குணம் , ஸங்கீதம் போன்ற கலைகளில் நிபுணத்வம் , பேச்சுத்திறன் போன்ற திறன்கள் , போன்ற எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும் .  ஸ்ரீ க்ருஷ்ணனும் இதையே சொல்கிறார் .  "உன்னை ...  நீயே வளர்த்துக் கொள்" என்கிறார் .  ஒவ்வொரு சிறு வளர்ச்சியும் , ஒவ்வொரு படி முன்னேற்றமும் உன் வாழ்க்கையில் நீ படைத்திடும் ஸாதனைகள் .

ஸ்ரீ கிருஷ்ணன் , 'உன்னை நீ வீழ்த்திக் கொள்ளாதே' என்று சொல்லும்போது , 'அந்யருடன் ஒப்பிடுதல் மற்றும் போட்டி - பொறாமையில் இறங்காதே .  பொன்னான காலத்தை வெற்று முயற்சிகளில் விரயம் ஆக்காதே .  கீழான உணர்வுகளுக்கு உன் மனஸில் இடம் கொடுக்காதே .' என்றெல்லாம் சொல்கிறார் .

'வளர்த்துக் கொள்ள முயற்சிகள் செய்வதும் , வீழ்ச்சிப் பாதையில் இறங்குவதும் , உன்னால் மாத்ரமே செய்ய முடியும் .  உன் நிலைக்கு நீ மாத்ரமே பொறுப்பு .  அந்யருக்கு எந்தப் பங்கும் இல்லை' , என்றும் சொல்கிறார் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...