Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 56


கீதையில் சில சொற்றொடர்கள் - 56

आत्मैवात्मना  जितः बन्धुः  ।  (अध्याय ६ - श्लोक ६)
ஆத்மைவாத்மனா ஜிதஹ்  பந்துஹு  ... (அத்யாயம் 6 - ஶ்லோகம் 6)
Aatmaivaatmanaa jitah  Bandhuhu ...  (Chapter 6 - Shloka 6)

அர்தம் :  தன்னைத் தானே ஜயித்தவனே  தனக்கு நண்பன் ...

பந்துஹு ஆத்மைவாத்மனா  ஜிதஹ்  ...  பந்து என்றால் மித்ரன் அல்லது நண்பன் .  ஜிதஹ்  என்றால் ஜயித்தவன் , வஶப்படுத்தியவன் ...  ஆத்மைவாத்மனா  என்றால்  தன்னைத்தானே ...

தன்னைத்தானே ஜயித்தவன் என்றால் ஶரீரத்தை ஜயித்தவன் ?  ஶரீரத்தை வஶபடுத்தியவன்  ?  நம்மிடம் உள்ள ஶரீரம் நாம் விரும்பும் வகையில் நடந்து கொள்கிறதா ?  நாம் நிர்ணயத்திடும் கார்யங்களைச் செய்திடுகிறதா ?  ஒரு இடத்தில் இருந்திடு  என்றால் இருக்கிறதா ?  அவஶ்யம் அற்ற அஸைவுகள் வேண்டாம் என்றால் கேட்கிறதா ?  கனத்த ஶரீரமாக இருப்பத்தால் மாடிப்படி ஏற முடியவில்லை .  கீழே உட்கார முடியவில்லை .  பெரும் தொப்பை இருப்பதால் கீழே குனிய முடியவில்லை .  மூச்சு முட்டுவதால் கார்யங்களைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை .  கை தன் இஷ்டத்திற்கு அரிப்பு இல்லாமலே சொறிந்து கொள்கிறது .  மூக்கையோ பல்லையோ நோண்டுகிறது .  தலை மயிறுடன் விளையாடுகிறது .  பாதமும் தொடையும் தம் இஷ்டத்திற்கு ஆடுகின்றன .  டீ வீயில் ஆன்மீக ப்ரஸங்கம் செய்திடும் ஒருவரது மிக வேகமாக ஆடிடும் பாதம் நம் கவனத்தை அவரது ப்ரஸங்கத்தில் இருந்து திஶை மாற்றிடும் .

ஶரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் .. (शरीरं आद्यं खलु धर्म साधनम् )  ஶரீரம் ஒரு கருவி .  தர்ம மய வாழ்க்கையை நாம் வாழ்ந்திட , தர்மத்தைக் காப்பதற்கு நம் ஶரீரம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கருவி ஆகும் .  கருவி நம் வஶத்தில் இருக்க வேண்டும் .  நாம் விரும்பும் கார்யங்களை , நாம் கட்டளையாக அதற்குப் பணித்திடும் கார்யங்களை  முழுத் திறனுடன் செய்திடும் கருவி ஆக வேண்டும் .

பந்துஹு ஆத்மைவாத்மனா  ஜிதஹ் .  தன்னைத்தானே ஜயித்தவன் , வஶப்படுத்தியவன் .  தன்னைத்தானே என்றால் இந்த்ரியங்களை  ஜயித்தவன் ?  இந்த்ரியங்களை வஶபடுத்தியவன்  ?  கண்கள் நாம் விரும்பிய விஷயத்தை மாத்ரம்  பார்க்கின்றனவா ?  காதுகள் நாம் புரிந்து கொள்ள விரும்பும் விஷயத்தை மாத்ரம் கேட்கின்றனவா ?  நாக்கு நமக்கு ஹிதம் தரும் ருசிகளை மாத்ரம் நாடுகிறதா ?  இந்த்ரியங்கள் நாம் விரும்பாத விஷயங்களை , நமக்கு நலன் பயக்காத விஷயங்களை புறக்கணிக்கின்றனவா ?

ஆறாவது இந்த்ரியமான மனஸ் இங்கங்கு அலைந்திடாமல் இருக்கிறதா ?  நாம் விரும்பும் விஷயத்தில் குவிகிறதா ?  பயம் , காமம் , க்ரோதம் போன்ற உணர்வுகளில் திளைத்து , அலைக்கழிக்கப்பட்டு நம்மை கை வஶக் கார்யத்தில் இருந்து , திஶை திருப்புகிறதா ?

சிந்தனை நம் வஶப்பட்டுள்ளதா ?  உபயோகமான சிந்தனையில் இருந்து தடம் மாறி , கனவு காணுதல் , கவலைக் கொள்ளுதல் , வருத்தம் அடைதல் போன்றவற்றில் மூழ்கி விடுகிறதா ?

இவை நமக்கு வஶப்பட்டால் , அவைற்றின் மீது நாம் பூர்ண வெற்றி பெற்றால் , நாம் ஆத்மைவாத்மனா ஜிதஹ ...  இத்தகையவனே தனக்கு நண்பன் .  

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...