Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 57


கீதையில் சில சொற்றொடர்கள் - 57

सम बुद्धिर्विशिष्यते  ...  (अध्याय ६ - श्लोक ९ )
ஸம புத்திர் விஶிஷ்யதே  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 9)
Sama Buddhir Vishishyate  ...  (Chapter 6 - Shloka 9)

அர்தம் :  ஸமத்வம் கொண்ட புத்தி விஶேஷமானது  ...

ஸமத்வம் , ஸமத்வம் ... ஸ்ரீ க்ருஷ்ணன் கீதையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் கருத்துக்களில் இது ப்ரதானமானது .

மநுஶ்யனின் புத்தி மூன்று ப்ரதான விஷயங்களால் ஸமத்வத்தை இழக்கிறது .  வஸ்துக்கள் , அநுபவங்கள் மற்றும்  மநுஶ்யர்கள் .

உலக வாழ்க்கை என்றாலே அநுபவங்களின் ஶேகரிப்பு தான் . குழந்தைப் பர்வம் முதல் இறுதி மூச்சு வெளியேறும் வரை அநுபவங்கள் பெறுகிறோம் .  அநுபவங்கள் தவிர்க்க முடியாதவை .  அநுபவங்களைப் பெற்று அவற்றில் இருந்து கற்றுக் கொண்டு நாம் வளர்ந்தால் சிறப்பு .  ஆனால் அவ்வாறு நடப்பதில்லை .  நம் மனஸ் அநுபவங்களை ஸ்தரம் பிரிக்கிறது .  அநுகூலமானவை , ப்ரதிகூலமானவை , இனிப்பானவை , கசப்பானவை , ஹிதமானவை , கொடூரமானவை , என்று பட்டியல் இடுகிறது .  சிலவற்றை நாடுகிறது .  மற்றவற்றைத் தவிர்க்க விழைகிறது .  இவை ரெண்டும் நிஶ்சயம் தோல்வி தரப் போகும் முயற்சிகள் என்பதால் மனஸின் ஸமத்வம் அழிகிறது .

அதே போல , பொருட்களையும் மதிப்பில்  உயர்ந்தது , தாழ்ந்தது , என்று பாகுபடுத்தி , உயர்ந்தவற்றைப்  பெற்றிட வேண்டும் என்ற தீவிர காமம் மனஸில் உதித்து விடுவதால் , மனஸின் ஸமத்வம் அழிந்து போகிறது .

உயர்ந்தது என்று கருதுவதை அடைந்திட வேண்டும் என்ற பேரவாவினால் உந்தப்பட்டு தம் ஶக்தியை மீறி அலைவதால் நிம்மதி இழந்த மனஸ் ஸமத்வம் இழக்கிறது .

உயர்ந்தது என்று கருதப்படுவது அழிந்தோ தொலைந்தோ விடுவதால் மனஸின் ஸமத்வம் அழிந்து விடுகிறது .

அந்யரிடம் உள்ளதைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவதால் , பொறாமைக் கொள்வதால் மனஸின் ஸமத்வம் அழிகிறது .

தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதால் மனஸின் ஸமத்வம் அழிகிறது .

மதிப்பெண் கொடுத்து அந்யரை மதிப்பிட்டு, ஒப்பிட்டு ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பதால் மனஸின் ஸமத்வம் அழிகிறது .

தனக்குக் கிடைக்கத் தகுதி உண்டு என்று கருதி , அதைக் கொடுக்காதவர் , தாராளமாகக் கொடுப்பவர் , குறைவாகக் கொடுப்பவர் என்று அந்யரைப் பாகுபடுத்தி , அதன் விளைவாக மனஸின் ஸமத்வத்தை இழந்து போகிறது .

ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்வது , "அநுபவங்களை உள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டுமே அன்றி வகைப் பிரிக்கக் கூடாது .

பொருட்களை மண் , பொன் , விலை உயர்ந்தவை , அல்பமானவை என்றெல்லாம் பாகுபடுத்தாது மனஸின் ஸமத்வத்தைப் போற்றிக் காக்க வேண்டும் .

மநுஷ்யர்களை ஸாது , துஷ்டன் , நண்பன் , எதிரி , நலன் விரும்புபவன் , நடு நிலை வஹிப்பவன் , கண்டு கொள்ளாதவன் , வெறுப்பவன் என்றெல்லாம் பாகுபடுத்தாது மனஸின் ஸமத்வத்தைப் போற்ற வேண்டும்" .

ஸம புத்தி விஶேஷமானது .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...