Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 58


கீதையில் சில சொற்றொடர்கள் - 58


समं काय शिरोग्रीवम  ...  (अध्याय ६ - श्लोक १३)
ஸமம் காய ஶிரோக்ரீவம் ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 13)
Samam Kaaya ShiroGreevam ...  (Chapter 6 - Shloka 13)

அர்தம் :  ஶரீரம் (முதுகெலும்பு) , கழுத்து மற்றும் தலை மூன்றையும் நேர்க்கோட்டில் நிறுத்துதல் ...

இது ஶரீரத்தின் இயல்பான ஒரு நிலை அல்லவா ?  ஒரு யோஜனையாக இதை முன் வைப்பது அவஶ்யமா ?  மநுஷ்யன் உலக விஷயங்களில் மூழ்கும் போது , தன் இயல்பில் இருந்து , இயற்கையில் இருந்து தூர விலகி விடுகிறான் .  அவனுடைய உண்மை இயல்பை , ஞாபகப் படுத்த வேண்டிய அவஶ்யம் உள்ளது என்பதில் ஸந்தேஹம் இல்லை .

ஸ்ரீ க்ருஷ்ணன் வழங்கும் இந்த யோஜனை ஶரீரத்தின் ஒரு நிலை .  குறிப்பாக , த்யானம் செய்திடும் போது தேஹத்தை நிறுத்த வேண்டிய நிலை .  ஆனால் , மற்ற ஸாதாரண ஸமயங்களிலும் இந்நிலை பயன் உள்ளது .  நிமிர்ந்த முதுகெலும்பு , கழுத்து மற்றும் ஶிரத்துடன் நேர்க்கோட்டில் .

முதலில் நாம் இந்நிலை மாறுபட்டு இருந்தால் என்ன விளைவுகள் என்பதைப் பார்ப்போம் .  அதாவது , கூன் விழுந்த முதுகு , தளர்ந்து தொங்கும் தோள்கள் , கழுத்தினுள் புதைந்த தலை , தேஹத்தின் இத்தகைய நிலை என்ன விளைவிக்கும் ?  உடலின் மேல் பகுதி உடலின் கீழ்ப் பகுதியைத் தன் பாரத்தால் அழுத்திடும் .  ஜீர்ண அமைப்பை பாதித்திடும் .  முதுகெலும்பின் அடிப்பகுதியில் வலி ஏற்படுத்தும் .  தொப்பையை அதிகரிக்கும் .  கழுத்து ஶரீரத்தின் மிக முக்யப் பகுதி .  ஶரீரத்தை மூளையுடன்  பாலம் .  அழுத்தப்படும் கழுத்து , நேர் இல்லாத கழுத்து மூளைக்கு அநுப்பப் படும் ரக்த ஓட்டத்தினை பாதிக்கும் .  மார்புப் பகுதி அழுத்தப் பட்டு , நுரை ஈரலில் மூச்சு குறைவாக இழுக்கப் படும் .  ஸூக்ஷ்ம தளத்தில் பார்த்தால் கூன் விழுந்த முதுகு , தளர்ந்து தொங்கும் தோள்கள் , கழுத்தினுள் புதைந்த தலை , தேஹத்தின் இந்நிலை பயம் , நம்பிக்கை இன்மை , மற்றும் தாழ்வு மனப்பான்மையை ப்ரகடனப் படுத்திடும் .

நேர்க் கொண்ட பார்வை என்றான் பாரதி .  அடுத்தவரின் கண்ணை நேராக நோக்கும் பார்வை தன்னம்பிக்கையைத் தூண்டும் . பேசப்படும் வார்த்தைகளுக்கு மதிப்பைப் பெற்றுத் தந்திடும் . நேற்கொண்ட பார்வை என்பதைத் தனியாக விலக்க முடியாது . நிமிர்ந்த ஶரீரத்தின் இயல்பான அங்கமே நேர்க்கொண்ட பார்வை .

நிமிர்ந்த முதுகெலும்பு , விரிந்த மார்பு , திரண்ட தோள்கள் , உயர்ந்த கழுத்து , உயர்த்திப் பிடித்த தலை , இத்தகைய தேஹ நிலை உடல் ஆரோக்யத்திற்கு உகந்தது .  மனவளத்திற்கு மருந்து .  ஆன்மீக முயற்சிக்கும் உபயோகமானது .  த்யானத்தில் குண்டலினி ஶக்தியை மேல் நோக்கி எழும்பிடச் செய்யும் நிலை இது .  அதாவது , குண்டலினி ஶக்தியை முதுகெலும்பின் அடியில் மூலாதாரத்தில் இருந்து உச்சியில் ஸஹஸ்ராரம் நோக்கி எழுந்திடச் செய்யும் .

நான்கு கால் ப்ராணிகளுக்கு இது இயற்கையாகவே அமைந்திருக்கும் நிலை .  ரெண்டு கால் மநுஷ்யனுக்கு இது பயிற்சியாக அளிக்கப்பட வேண்டி உள்ளது .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...