Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 61


கீதையில் சில சொற்றொடர்கள் - 61


दुःख संयोग वियोगम योग  ....  (अध्याय ६ - श्लोक २३)
Du:kha Samyog Viyogam Yoga  ...  (Chapter 6 - Shloka 23)
து:க ஸம்யோக வியோகம் யோக  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 23)

அர்தம் :  து:கத்தின் பிணைப்பில் இருந்து விடுபடுவதே யோகம் ...

அத்புத யோஜனை .  து:கத்தின் பிணைப்பில் இருந்து விடுபடுதல் .  து:கம் நம்மைக் கட்டிப் போடுகிறதா ?  இல்லை .  நாம் தான் அதைக் கட்டிப் பிடித்து உள்ளோம் .  விட மறுக்கிறோம் .  மேலும் து:கங்கள் வர வர , அவற்றை எல்லாம் ஶேகரித்து , பெரிய மூட்டைகளாக்கி , அனைத்தையும் கட்டிப் பிடித்து வைத்துள்ளோம் , அந்த தெருவோர பைத்யம் மூட்டை மூட்டையாக குப்பையைச் சேர்த்து வைத்திருப்பதைப் போல .  அவனுக்கும் நமக்கும் பெரிய வித்யாஸம் இல்லை .  அவனிடம் இருப்பது கண்களுக்குத் தெரிந்திடும் மூட்டை .  நம்மிடம் இருப்பது பிறர் கண்களுக்குத் தெரியாத மூட்டை .  அந்த மூட்டையை விட இந்த மூட்டை அதிக பாரமானது .

பிறர் கண்களுக்குத் தெரியாத மூட்டை என்பதும் தவறு .  நாம் தான் , எவர் கிடைத்தாலும் அவரிடம் புலம்பிக் கொண்டிருக்கிறோமே ?  "சின்ன வயஸில் நான் ரொம்ப கஷ்டப் பட்டேன் தெரியுமா ?"  "அம்மா என்னைக் கொடுமைப் படுத்தினாள்" ;  "மும்பை வந்த புதுஸில் , ஒரு வேளை சாப்பாட்டிற்கு எவ்வளவு அலைந்தேன் தெரியுமா ?"  "அப்பப்பா !  எனக்கு வந்த மாதிரி கஷ்டங்கள் வேறு எவருக்கும் வந்திருக்காது" :  "எனக்கு ரெண்டு லக்ஷம் ரூபாய் நஷ்டம் ஆகி விட்டது" ;  "ஒரு முறை ரயிலில் வடக்கே சென்றேன் .  என்ன கஷ்டம் தெரியுமா ?  ஸரியான கூட்டம் , காற்றில்லை , ஒரு பிடி சோறு தின்ன முடியவில்லை" ;  "நேற்று ராத்ரீ முழுவதும் மின்சாரம் இல்லை .  ரொம்பக் கஷ்டப் பட்டு விட்டேன் ஸார்" ;  இன்னம் எத்தனை எத்தனையோ புலம்பல்கள் நாம் அடிக்கடி கேட்பதே .  அநுபவிக்கும் முன் "இவ்வாறெல்லாம் நடந்து விடுமோ" ? என்ற பயம் அல்லது சந்தேஹத்தினால் து:கம் .  அநுபவித்திடும் போதும் து:கம் .  அநுபவித்த பின்னர் பல வர்ஷங்கள் வரை அதை மீண்டும் மீண்டும் நினைத்து து:கம் .  து:கத்தை எதிர்பார்த்து , து:கத்தில் திளைத்து , து:கத்தை ஸுமந்து ..  வாழ்க்கையே து:க மயம் .

"து:கம் இல்லாது வாழ்வது ஸாத்யமா ?"  ஒரு ஆன்மீகவாதி கேட்டார் .  "து:கம் என்று கருதாமல் , து:கம் என்ற முத்ரை குத்தாமல் இருந்தால் ஸாத்யமே" , என்றேன் .  தான் அநுபவித்த து:கங்களே பிற்காலத்தில் தன் குற்ற நடவடிக்கைகளுக்குக் காரணம் என்று கூறும் பலரைக் காண்கிறோம் .  கர்ணன் ஒரு சிறந்த உதாஹரணம் .  அதர்மத்தின் பக்ஷத்தில் ஏனடா நின்றாய் ?  அதர்மத்திற்குத் தூண்டுகோலாய் ஏனடா நடந்து கொண்டாய் ? என்று கேட்டால் , "பெற்ற அம்மா என்னைத் தூக்கி எறிந்து விட்டாள் .  பரஶுராமன் ஶாபம் கொடுத்து விட்டார் .  பஶுவைக் கொன்று விட்டேன் என்று வ்யவஸாயியின்  ஶாபம் வேறு .  வாழ்க்கையின் இறுதியில் அன்னை குந்தி என்னிடம் வந்து உண்மைகளைக் கூறினாள் ,  ஆனால் , தன் மற்ற மகன்களின் உயிர்க் காத்திடவே வந்தாள் .  எல்லாம் கோணல் .  எல்லா வகையிலும் நான் வஞ்ஜிக்கப் பட்டேன்" என்பான் .

யாருக்குத்தான் து:கம் இல்லை ?  யாருக்குத்தான் கஷ்டம் இல்லை ? ஏதோ நமக்கு மாத்ரமே வருவதாக நினைத்துக் கொள்கிறோம் . நேற்று நடந்தது .  நேற்றே முடிந்தது .  இது வேறு நாள் .  வேறு நேரம் . நேற்றைக் கட்டிப் பிடித்து வைத்து இருப்பது ஏன் ?  விட்டு விடு . நேற்றின் பிணைப்பை அறுத்து விடு.  து:கத்தை என்று ஏன் கூறுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ?  ஸுகமான அநுபவங்களை நாம் ஸுமப்பதில்லை என்பதால் .

ஸமத்வம் யோகம் என்றார் .  கௌஶல்யத்துடன் (திறனுடன்) கர்மங்களில் ஈடுபடுவது யோகம் என்றார் .  இங்கு ஸுலபமான ஒரு வழியைச் சொல்கிறார் .   து:க ஸம்யோக வியோகம் யோக ... து:கத்தின் பிணைப்பில் இருந்து விடுபடுவதே யோகம் என்கிறார் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...