Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 62


கீதையில் சில சொற்றொடர்கள் - 62


शनैः शनैः उपरमेत्  ...  (अध्याय ६ - श्लोक २५)
ஶனைஹி  ஶனைஹி உபரமேத்  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 25)
Shanaih Shanaih Uparameth  ... (Chapter 6 - Shloka 25)

அர்தம் :  மெதுவாக , மெதுவாக அமைதி அடைதல் ...

மெதுவாக , மெதுவாக , அமைதி அடைதல் ... மெதுவாக , மெதுவாக உலகத்தில் இருந்து , உலக வாழ்க்கையில் இருந்து , உலகத்தைப் பற்றிய ஆர்வத்தில் இருந்து விடுபட்டு உள்ளடங்குதல் ... இதில் முக்யமான வார்தை ஶனைஹி  ஶனைஹி ..  அதை உச்சரிக்கும் பொழுதே அதன் பாவத்தை உணரலாம் .  பொறுமை , மிக அதிக பொறுமை அவஶ்யம் .

பொறுமை இன்மைக்கு , பொறாமைக்கு என்ன காரணம் ? ஶீக்ரமாக இதை முடித்து விட வேண்டும் என்பது பொறாமை . இதை முடித்து விட்டால் வேறு ஒரு விஷயத்தில் ஈடுபடலாம் என்ற எண்ணம் , இதை முடித்து விட்டால் ஓய்வெடுக்கலாம் என்ற எண்ணம் , இதை முடிப்பதால் கிடைக்கக் கூடிய ஃபலன் மீது ஆர்வம் ஆகியன பொறாமைக்குக் காரணம் .  வலுக்கட்டாயமாக ஓரு விஷயத்தில் ஈடுபட வைத்தால் பொறுமை இருந்திடாது . இந்த்ரியங்களின் ஆதிக்யம் அதிகம் ஆனாலும் மனஸின் பொறுமை வற்றிப் போகும் .

பரீக்ஷை முடித்த பிறகு ஸினிமா போகலாம் என்று சொல்லப்பட்ட மாணவன் பரீக்ஷையை ஶீக்ரமாக எழுதி முடித்து விட என்று எண்ணுவான் .  முழுத் திறனுடன் எழுத முடியாது .  களைத்து இருக்கும் டாக்டரிடம் இந்த ஒரு சிகித்ஸையை முடித்து விட்டு ஒய்வு எடுக்கலாம் என்ற எண்ணம் வந்தால் , அவரது மனஸு சிகித்ஸையில் முழுவதுமாக ஈடுபடாது .  ஹோமம் நடத்திக் கொண்டிருக்கும் புரோஹிதர் வேறொரு கார்யத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் , ஹோமத்தை முறையாக முடித்திடும் பொறுமையை இழந்திடுவார் .  மற்ற இடத்தில் இருந்து மீண்டும் மீண்டும் மொபைல் அழைப்பு வந்தாலோ பொய் பேசுவார் .  குறுக்கு வழியில் ஹோமத்தை முடிக்க நினைப்பார் .  கையில் இருக்கும் இந்தக் காரியத்தை விட அதிக மஹத்வமான கார்யம் உலகத்தில் வேறொன்றும் இல்லை என்ற பாவனையுடன் செய்தால் , பொறுமை , உச்ச கோடி பொறுமை மனஸில் நிலைத்திடும் .

இன்று பொறுமை இன்மை மிகக் கொடூரமான நோயாகப் பரவி வருகிறது .  சிறு குழந்தைகளையும் இந்நோய் தாக்கி உள்ளது .  பயிற்சிக்குப் பொறுமை அவஶ்யம் .  ஆழமான திறமை வளர்த்திட பொறுமை அவஶ்யம் .  ஸ ரி க ம .. என்ற ஸரளி வரிஸை கற்றுக் கொள்ள பொறுமை இல்லை என்றால் ஸங்கீத வித்வான் ஆக முடியாது .  தா தை தக தை  என்று பாதங்களுக்கு அடிப்படைப் பயிற்சி கொடுக்க பொறுமை இல்லை என்றால் , பரத நாட்யத்தின் நிபுணன் ஆக முடியாது .  அனா , ஆவன்னா என்று அக்ஷர ரூபங்களையும் அவற்றின் ஸ்பஷ்ட உச்சரிப்பையும் பொறுமையாகக் கற்பதே உயர்ப் படிப்புகளுக்கு அடித்தளம் .

ஸமுதாய காரியங்களில் உள்ளவர்கள் , ஸமுதாயத்தில் மாற்றம் வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயலில் இறங்கியவர்கள் , தேஶம் முன்னேற வேண்டும் என்ற ஆவேஶத்தில் முயல்பவர்கள் , மதம் மாற்றம் தடுக்கப் பட வேண்டும் என்று போராடுபவர்கள் , பஶு பாதுகாக்கப் பட வேண்டும் என்று விரும்புபவர்கள் , பொறுமை இழந்து , உணர்ச்சி வஶப் படுவதைக் காண்கிறோம் .  வேகமாக செயல் பட வேண்டும் .  ஆனால் , பொறுமை இழக்கக் கூடாது .  பொறுமை என்பது செயலின்மை இல்லை .  தானே சரியாகும் என்ற பொய்யான ஆன்மிகம் இல்லை .  செயல் , வேகமான செயல் , ஆனால் பொறுமை .  அஸாத்யப் பொறுமை .

பொறுமை ஶ்ரத்தையின் வெளிப்பாடு .  பொறுமை இருந்தால் வார்தைகளில் உத்வேகம் இருக்காது .  வெற்று கோஷங்கள் இருக்காது .  வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை செயல்பாடு இருந்திடும் .  தமிழகத்தில் ஸ்ரீ ராம கோபாலன் உத்தமமான ஒரு உதாஹரணம் .  உணர்ச்சி வஶமாகப் பேசுபவர்கள் , தொண்டைக் கிழிய கோஷம் போடுபவர்கள் குறுகிய காலத்தில் களத்தை விட்டு ஓடி விடுவர் அல்லது திஶை மாறி பண வஸூல் , அதிகாரக் குவிப்பு , காமக் களியாட்டம் போன்ற ஈனச் செயல்களில் ஈடுபடத் தொடங்குவர் .

உலக விஷயங்களுக்குப் பொறுமை .  ஆன்மீக ஸாதனைகளிலும் பொறுமை .  அவஸரப் பட்டால் முடியுமா ?  நான் இத்தனை லக்ஷம் நாம ஜபம் செய்து விட்டேன் ,  இத்தனை ஆலயங்களுக்கு நடந்திருக்கிறேன் , இத்தனை வ்ரதங்கள் இருந்திருக்கிறேன் , இத்தனை ஹோமங்கள் நடத்தி இருக்கிறேன் .  ஆனால் , எனக்கு ஒன்றும் நிகழவில்லை .  பகவத் ப்ரஸாதம் எதுவும் கிடைக்கவில்லை .  பல லக்ஷ யோனிகளின் வழியே (கர்பங்களின் வழியே) ப்ரயாணித்த பின் , இறுதியில் நமக்கு மனுஷ்ய ஜன்மம் கிடைத்திருக்கிறது .  இத்தனை லக்ஷ வர்ஷங்கள் பொறுமைக் காத்தவனுக்கு இன்னம் சில வர்ஷங்கள் , இன்னம் சில ஜன்மங்கள் காத்திட முடியாதா ? ஆன்மீக ஸாதனைகளை பொறுமையாக , அஸாத்யப் பொறுமையுடன் பயில வேண்டும் .  அடுத்த க்ஷணத்தைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் பயில வேண்டும் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...