Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 64


கீதையில் சில சொற்றொடர்கள் - 64


चँचलम् हि मनः कृष्ण प्रमाथि बलवद् दृढम  ...  (अध्याय ६ - श्लोक ३४)
சஞ்சலம் ஹி மனஹ க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம் ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 34)
Chanchalam Hi Manah Krishna Pramaathi Balavad Drudham  ...  (Chapter 6 - Shloka 34)

அர்தம் :  ஹே க்ருஷ்ண !  மனஸ் பிடிவாதம் நிறைந்ததாக , சஞ்சலம் கொண்டதாக இருக்கிறதே ...

இது அர்ஜுனனின் ப்ரஶ்னை மாத்ரம் இல்லை .  நம் அனைவரின் ப்ரஶ்னையும் இது .  மனஸ் சஞ்சலமானது .  நிலையில்லாதது .  பிடிவாதம் கொண்டது .  சிந்தனை செய்தால் ஒரு விஷயத்தில் தொடர்ந்து இருந்திடாது .  கை வஶம் உள்ள கார்யத்தில் தொடர்ந்து ஈடுபட விடாது .  ஒரு ப்ரஸங்கம் கேட்டுக் கொண்டிருந்தாலோ , ஒரு நாடகம் பார்த்துக் கொண்டிருந்தாலோ , ஒரு கார்யம் செய்து கொண்டிருந்தாலோ ,  நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலோ ,  அதில் தொடர்ந்து ஈடுபடாமல் , அலுத்துக் கொண்டு வேறு பக்கம் தாவி விடும் .  தனியாக இருக்கும் போது கை , தொடையை ஆட்டிக் கொண்டும் , நகத்தைக் கடித்துக் கொண்டும் , சொறிந்து கொண்டும் , தலை மயிரைக் கோதிக் கொண்டும் , மீசையை முறுக்கிக் கொண்டும் , மீசை நுனியை வாயில் சப்பிக் கொண்டும் இன்னம் இவை போன்ற ஏதேனும் ஒரு அர்தம் அற்ற பழக்கம் கொண்ட பலரை நாம் காண்கிறோம் .  இப்பழக்கங்கள் அனைத்தும் சஞ்சல மனஸின் வெளிப்பாடுகள் .  ''நாய்க்கு செய்ய கார்யம் எதுவும் இல்லை .  ஆனால் நிற்க நேரமும் இல்லை'' என்று சொல்லப் படுவது மனஸிற்குப் பொருந்தும் .

சஞ்சல மனஸ் நம்மை நிர்ணயம் எடுக்க விடாது .  நாற்சந்தில் ஒரு பாதையை , துணிக்கடையில் ஒரு துணியை , ஹோடலில் ஒரு தின்பண்டத்தை , டைல்ஸ் கடையில் ஒரு டிஸைனை , ஏன் ! காலி பஸ்ஸில் ஒரு ஸீட்டைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தவித்திடும் பலரும் மனஸின் சஞ்சலத் தன்மைக்கு பலி ஆனவர்கள் .  மாற்றுக்கள் (சாய்ஸ்) அதிகமாக அதிகமாக மனஸின் சஞ்சலத் தன்மையும் அதிகமாகிடும் .  "இது ஒன்றுதான் .  வேறு வழி இல்லை' எனும் போது வாலைச் சுருட்டிக் கொண்டு ஏற்றிடும் .

மனஸின் மற்றொரு தன்மை அதன் பிடிவாதம் .  வேண்டாம் என்று மறுக்க மறுக்க , அதையே மீண்டும் மீண்டும் நாடும் .  மனஸின் பழக்கத்தை மாற்றுவது மிகக் கடினம் .

கிருமிகள் இல்லாது வரும் பல்வேறு நோய்களுக்கு சஞ்சல மனஸே காரணம் என்றும் மனஸ் அமைதியாக வேண்டும் என்றும் தன் இஷ்டத்திற்கு அலையாமல் , நம் நிர்ணயத்திற்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நவீன கால மருத்துவம் சொல்லத் தொடங்கி இருக்கிறது .  உலகத்தில் மிக மிகக் கஷ்டமான கார்யம் ஒன்று உண்டென்றால் அது மனஸை ஸ்திரப் படுத்துவதுதான் .   அதனால் தான் இன்று வீதிக்கு வீதி யோக வகுப்புகளும் , த்யான , ப்ராணாயாம வகுப்புகளும் புற்றீஸல் போல் கிளம்பி இருக்கின்றன .  வனப்பகுதிகளில் , மலை அடிவாரத்திலும் நிலத்தை வளைத்துப் போட்டு , எல்லா வஸதிகளுடன் கூடிய கூடங்கள் (Cottages) கட்டிப் போட்டு , ஆயிரங்களில் , லக்ஷங்களில் கட்டணம் வஸூலித்து வகுப்புகள் நடத்திடும் கார்பொரேட் ஸ்வாமியார்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது .  இவ்வகுப்புகளில் வருவோரின் பாக்கெட்டுகளில் இருந்து பணம் தான் கை மாறிப் போகிறதே அன்றி , அவர்களது மனஸின் சஞ்சலத்தன்மை இம்மி அளவும் குறையாமல் இருக்கிறது .

ஸ்ரீ க்ருஷ்ணனின் உபாயம் என்ன ?  அர்ஜுனனின் கேள்விக்கு அவன் பதில் வழங்கும் பதில் என்ன ?  அடுத்த ஶ்லோகத்தில்  ....

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...