Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 72


கீதையில் சில சொற்றொடர்கள் - 72


धर्माविरुद्धो भूतेषु कामोs स्मि भरतर्षभ  ।  (अध्याय ७ - श्लोक ११)
தர்மாவிருத்ததோ பூதேஷு காமோ(அ)ஸ்மி பரதர்ஷப  ...  (அத்யாயம் 7 - ஶ்லோகம் 11)
DharmaAviruddho Booteshu Kaamo(a)smi Bharatarshabha  ...  (Chapter 7 - Shloka 11)

அர்தம் :  பரதர்ஷபனே !  தர்மத்திற்கு முரண் இல்லாத காமம் நானே ...

பூதேஷு காம அஸ்மி ...  தர்ம அவிருத்தஹ் ...  உயிர்களில் காமமும் நானே ...  தர்மத்திற்கு விரோதம் இல்லாத (காமம்)  ...

காமத்தில் என்ன தர்மம் இருக்கிறது ?

காமம் படைப்பில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது . காமம் என்ற வார்தை விருப்பம் என்ற பொதுவான அர்தம் கொண்டது .  ஆண் - பெண் மத்தியில் ஏற்படும் ஸம்போகத்திற்குக் காரணமான உணர்வும் காமம் தான் .  தர்மத்திற்கு உட்பட்ட காமம் எது ?  பஸி வந்தால் உணவு வேண்டும் என்ற விருப்பம் இயற்கையானது .  தாஹம் ஏற்பட்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையான விருப்பம் .  களைப்பு வந்தால் உறக்கம் வேண்டும் என்று விரும்புவதும் இயற்கையானதே .  ஶரீரத்தில் ரோகம் வந்தால் அது ஸரி ஆக வேண்டும் என்று விரும்புவதும் இயற்கையான காமமே .  இவ்வகை விருப்பங்களை பூர்தி செய்து கொள்ள செய்யப்படும் முயற்சிகளும் இயற்கையானவை .  இயற்கையானது எதுவும் தர்மத்திற்கு உட்பட்டதே .  தர்மத்திற்கு விருத்தமானது இல்லை .

ஆண் - பெண் ஸம்போகத்தைத் தூண்டும் காமமும் இயற்கையானது .  படைப்பு என்ற மாயா ஸ்ருஷ்டி தொடர்ந்திட , காமம் அவஶ்யமானது .  காமம் மறைந்து விட்டால் படைப்பு நின்று விடும் .  எனவே , ஸந்ததி உத்பத்தி என்ற ஹேதுவிற்காக மலர்ந்திடும் காமம் தர்மத்திற்கு உட்பட்டது .  மாறான காமம் தர்மத்திற்கு முரணானது .

ஸ்ரீ பரமாத்மனை அறிந்திட , ஸாதகர்கள் செய்திடும் ஸாதனைகளின் விளைவாக காமம் அழிக்கப் பட வேண்டும் என்றும் ஆதலால் குடும்ப வாழ்க்கையை விட்டு வெளியேறி ஆன்மீக ஸாதனைகளில் ஈடுபட வேண்டும் என்றும் பரவலான கருத்து நிலவுகிறது .  ஸ்ரீ க்ருஷ்ணனும் பதினாறாவது அத்யாயத்தில் காமத்தை நரகத்திற்கான நுழைவாஸல் என்கிறார் .  பதினெட்டாம் அத்யாயத்தில் , "காமத்துடன் கூடிய கர்மங்களைத் துறப்பவன் ஸந்யாஸீ" என்கிறார் .  காமம் இயற்கையானது என்றால் கர்மங்கள் அனைத்தும் காமத்துடன் கூடியவை என்றும் எனவே , கர்மங்கள் துறக்கப்பட முடியாதவை என்றும் நாம் நினைக்கலாம் .  ஸ்ரீ க்ருஷ்ணனும் இக்கருத்தினை ஏற்றுக் கொள்கிறான் .  கர்மத்தை அல்ல , கர்மத்தினால் விளையக் கூடிய ஃபலன் மீதுள்ள விருப்பத்தையும் கர்மம் மீது உள்ள பற்றையும் தவிர்க்கச் சொல்கிறான் .  எனவே , குடும்ப வாழ்க்கை ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல .  நம் ஆஶ்ரம அமைப்பில் ஆன்மீக ஸாதனைக்கான ஸந்யாஸ ஆஶ்ரமம் , க்ருஹஸ்தாஶ்ரமத்தில் இருந்த பின்னர் , வாழ்க்கையின் இறுதி பர்வத்தில் தான் சொல்லப் பட்டிருக்கிறது .

தர்மம் , அர்தம் (பொருள்) , காமம் மற்றும் மோக்ஷம் , இவை நான்கு வித புருஷார்தங்கள் .   அர்தமும் காமமும் தர்மம் மற்றும் மோக்ஷம் என்ற ரெண்டு கரைகளுக்கு அடங்கி இருக்க வேண்டும் .  எனவே , (தர்மத்திற்கு உட்பட்ட) காமம் தவிர்க்கப் பட வேண்டியது இல்லை . வெறுக்கப் பட வேண்டியது இல்லை .  (அதே போல , அர்தமும்) தர்மத்திற்கு முரண்படாத காமம் ஸ்ரீ பரமனின் ஸ்வரூபமே .  "தர்ம அவிருத்த காமஹ அஸ்மி" என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...