Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 73


கீதையில் சில சொற்றொடர்கள் - 73


आर्तो जिज्ञासु अर्थार्थी ज्ञानी  ।  (अध्याय ७ - श्लोक १६)
ஆர்தோ ஜிக்ஞாஸு அர்தார்தி க்ஞானி  ...  (அத்யாயம் 7 - ஶ்லோகம் 16)
Aartho Jigyaasu Arthaarthi Gyaani  ...  (Chapter 7 - Shloka 16)

அர்தம் :  அழுபவன் , ஆராய்பவன் , வேண்டுபவன் , க்ஞானி  ...

என்னை வழிபடும் பக்ர்கள் நான்கு விதம் .  நான்கு வகையினரும் நல்லவர்களே .  (ஸுக்ருதினஹ)  .  அவர்கள் முறையே 1.  ஆர்த ... அழுபவன் , குறைகளைச் சொல்லிப் புலம்புபவன் ...  2.  ஜிக்ஞாஸு ...  ஆராய்பவன் , கேள்வி கேட்பவன் ...  3.  அர்தார்தி ... வேண்டுபவன் , கோரிக்கைகள் வைப்பவன் ...  4.  க்ஞானி ...  தன் போக்கில் ஆனந்தமாக இருப்பவன் ...

நம் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வருகிறார் .  தன் ஊரில் இருந்து பற்பல பொருட்களும் , துணிமணிகளும் , இனிப்புகளும் வேறு தின்பண்டங்களும் எடுத்து வந்திருக்கிறார் .  வீட்டில் நான்கு மகன்கள் .  அதிதி கொண்டு வந்த பொருட்களையும் இனிப்புகளையும் பார்த்து ஒருவன் , அம்மாவிடம் சென்று அழுகிறான் .  "அந்த பொம்மை என்னிடம் இல்லை .  இந்த வகை ஆடை நான் அணிந்ததில்லை .  அந்த வகை இனிப்பு நான் சாப்பிட்டதில்லை ." என்றெல்லாம் புலம்புகிறான் ..  இவன் ஆர்த வகை .

மற்றொரு மகன் , வந்த விருந்தாளியை ஆர்வத்துடன் அணுகுகிறான் .  "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ?"  "உங்கள் ஊர் எப்படி இருக்கும் ?"  "எப்படி வந்தீர்கள் ?"  "இத்தனையும் வாங்கி வருகிறீர்கள் !  வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் ?"  "நீங்கள் எங்களுக்கு எந்த வகையில் உறவு ?" .. போன்று பற்பலக் கேள்விகள் கேட்கிறான் .  அவனுக்குப் பொருட்களில் ஆர்வம் இல்லை .  ஆனால் , அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் .  (Curiosity) .  இவன் ஜிக்ஞாஸு வகை .

மற்றொரு மகன் அவரிடம் சென்று , "எனக்கு இந்த பொம்மையைக் கொடுப்பீர்களா ?"  "அடுத்த முறை வரும் போது எனக்கு இந்த வகை ஆடை வாங்கி வருவீர்களா ?" போன்ற கோரிக்கைகள் வைத்து அவருடன் பேசுகிறான் .  அவர் கொடுப்பதை வாங்கிக் கொள்கிறான் .  இவன் அர்தார்தி வகை .  (பொருளுக்காக வழிபடுபவன்) .

நான்காமவன் அவர் வந்தவுடன் அவரை நமஸ்கரிக்கிறான் .  மற்றவர்கள் அவரை வரவேற்று , குஶலம் விசாரித்துப் பேசும் போது , மர்யாதை நிமித்தம் கொஞ்ஜ நேரம் அங்கு இருந்து விட்டு , அங்கிருந்து அகன்று விடுகிறான் .  தான் ஈடுபட்டிருந்த புஸ்தகத்திலோ , விளையாட்டிலோ மீண்டும் நுழைந்து விடுகிறான் .  இவன் க்ஞானி வகை .

நம்மை நாமே அறிந்து கொள்ள இந்த ஶப்தாவலீ நமக்கு உதவுகிறது . நாம் பரமாத்மனை ஏன் வழிபடுகிறோம்  என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும் .  நம் வழிபாட்டின் த்வனி எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் .  புலம்பல் வழிபாடா , கோரிக்கை வழிபாடா , ஆய்வு மேலோங்கிய வழிபாடா அல்லது அன்பு மேலோங்கிய வழிபாடா ?  குறைகளை முன் வைத்த புலம்பல் , வேண்டும் , வேண்டாம் என்ற பட்டியலை முன் வைத்த கோரிக்கைகள் , தர்கம் மற்றும் கேள்விகளை முன் வைத்த ஆய்வு , இவை மூன்றும் அல்லாமல் வழிபாடாக மாத்ரம் , நம் ஹ்ருதயத்தில் அவன் பால் உள்ள அன்பின் வெளிப்பாடாக அமைந்திடும் வழிபாடாக இருத்தல் சிறப்பு .  No Inquiries , No complaints and No demands .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...