Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 74


கீதையில் சில சொற்றொடர்கள் - 74


ज्ञानी विशिष्यते  ।  (अध्याय ७ - श्लोक १७)  ज्ञानी तु आत्मैव  ।  (अध्याय ७ - श्लोक १८) 
க்ஞானி விஶிஷ்யதே ... க்ஞானி து ஆத்மைவ ... (அத்யாயம் 7 - ஶ்லோகம் 17 , 18)
Gyaani Vishishyate  ...  (Chapter 7 - Shloka 17) ...  Gyaani Tu Aatmaiva ...  (Chapter 7 - Shloka 18)

அர்தம் :  க்ஞானி விஶேஷமானவன் ...  க்ஞானி எனது ஸ்வரூபமே ...

க்ஞானி விஶேஷமானவன் ... ஸ்வயத்திற்கு எதுவும் தேவை இல்லை . அவனது சிந்தனை , செயல் எல்லாம் ஸ்ரீ பரமனுக்காக , பரமனின் படைப்பிற்காக .  எது கிடைத்தாலும் , எவ்வாறு கிடைத்தாலும் அதை ஸ்ரீ பரமனின் ப்ரஸாதமாக ஏற்று வாழ்ந்து விடுபவன் .

தேஶம் முழுவதும் நாஸ்திகம் பரவி உள்ளதை அறிந்து , அதற்குக் காரணமான பௌத்த மதத்தின் ப்ரபாவத்தைத் தணித்து , வைதீக மதத்தை மீண்டும் தழைக்கச் செய்ய வேண்டும் என்று ஸங்கல்பம் செய்த ஒன்பது வயஸு பாலகன் ஶங்கரன் ... ஹிந்து தர்மத்தில் ஸந்ந்யாஸம் வாழ்க்கையின் இறுதியில் தான் என்பதை மாற்றி , "இன்று காலத்தின் அவஶ்யம் .  இது ஆபத் தர்மம்" என்று கூறி ஸந்ந்யாஸம் ஏற்க ஸங்கல்பம் செய்த பாலகன் ஶங்கரன் ...  அதற்கு தாயாரின் அனுமதி கிடைத்திட 'முதலை நாடகம்' நடத்திய காலடி பாலகன் , ஸந்ந்யாஸம் ஏற்று , முப்பத்து ரெண்டு வர்ஷங்கள் மாத்ரம் வாழ்ந்த ஸ்ரீ ஆத்ய ஶங்கரன் , பாரத தேஶம் முழுவதும் மீண்டும் மீண்டும் ப்ரதக்ஷிணம் வந்து , பௌத்த மதத்தை நிர்மூலமாக்கி , ஜனங்கள் அனைவரையும் வைதீக மதத்திற்கு மாற்றி , புத்த விஹாரங்கள் அனைத்தையும் ஆலயங்களாக மாற்றி , வேத உபநிஷதங்கள் , பகவத் கீதை , ப்ரஹ்ம ஸூத்ரம் , ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்  போன்ற அநேக கரந்தங்களுக்கு பாஷ்யம் எழுதி , தெய்வ ஸ்வரூபங்கள் மீது பஞ்சகம் , அஷ்டகம் எழுதி , எதிர்க்காலத்தில் ஹிந்து தர்மம் தழைத்து விளங்க வேண்டும் என்பதற்காக தேஶத்தின் நான்கு திஶைகளிலும் மடங்களை ஸ்தாபித்து , ஸ்ரீ காஞ்சியில் வந்து உயிர் நீத்த யுக புருஷன் ஸ்ரீமத் ஶங்கரன் ...

யவன ராஜா மாபெரும் ஸேனை எடுத்து தேஶத்தைத் தாக்க வரும் நேரத்தில் , தம் கடமையைச் செய்திடாமல் போகத்தில் மூழ்கி இருந்த நந்த மஹாராஜாவை எதிர்த்து , சந்த்ரகுப்தனின் தலைமையில் அநேக ராஜகுமாரர்களை இணைத்து , பயிற்சி அளித்து , மகத ராஜ்ய ஸிஹ்மாஸனத்திற்கு சந்த்ரகுப்தனை உரியவனாக்கி , யவன ஸேனையைத் தோற்கடித்து , நம் தேஶத்தின் பொற்காலம் என்று வர்ணிக்கப் பட்ட குப்த ஸாம்ராஜ்யத்திற்கு வித்திட்ட சாணக்யன் ...

"என்னுடையது எது ?  எல்லாம் உன்னுடையது" என்று வாழ்ந்த பாலகன் நானக் , ஜனங்களை வாள் முனையில் முஸ்லிமாக மதம் மாற்றிட முயலும் முகலாய ராஜ்யத்தை எதிர்த்து நின்று தன்னை நிவேதனம் ஆக்கிய ஸ்ரீ குரு தேக் பஹதூர் , தேஶத்தின் எல்லை ப்ரதேஶங்களில் வீர ஸமுதாயம் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காக முனைந்த ஸ்ரீ குரு கோவிந்த ஸிஹ்மன் ...

பாரத தேஶத்தின் மத்யத்தில் முகலாய ராஜ்யம் செய்து வரும் அராஜகத்தைக் கண்டு மனஸ் வருந்தி , "தர்ம ராஜ்யம் ஸ்தாபனம் ஆக வேண்டும் , ஆலயங்கள் பாதுகாக்கப் பட வேண்டும் , ஜனங்கள் பாதுகாப்பாக , நிம்மதியாக வாழ வேண்டும்" என்று ஸங்கல்பம் செய்த எட்டு வயஸு பாலகன் , 'ஏனடா மெளனமாக அமர்ந்திருக்கிறாய் ?' என்று கேட்டால் "சிந்தா கரிதோ விஶ்வாசி ... உலகத்தைப் பற்றி சிந்தனை செய்கிறேன்" என்று பதில் அளித்து வந்த சிறுவன் , பெற்றோர் நிஶ்சயம் செய்த விவாஹத்தில் தாலி கட்டும் நேரத்தில் மண்டபத்தில் இருந்து வெளியேறி , வனம் புகுந்து , தபஸ் இயற்றி , ஸ்ரீ ராமதாஸனாக , ஸமர்த ராமதாஸனாக மாறி , க்ராமந்தோறும் ஹநுமான் ஆலயங்கள் நிறுவி , ஊர் இளைஞர்களை உடற்பயிற்சி செய்ய வைத்து , சத்ரபதி ஸ்ரீ ஶிவாஜி மஹாராஜாவின் தலைமையில் ஹிந்து ஸாம்ராஜ்யம் ஸ்தாபனம் ஆவதற்கு அடித்தளம் அமைத்த ஸ்ரீ ஸமர்த ராமதாஸன் ...  ஸம காலத்தில் தோன்றிய ஸ்ரீ நாமதேவர் , ஸந்த துகாராம் , ஸ்ரீ ஞானேஶ்வர் , கபீர் தாஸ் போன்ற அநேகானேக ஸாதுக்கள் ...

தென் பாரதத்தில் முகலாய ராஜ்யமும் அராஜக அதர்ம இஸ்லாமும் வேர் விடாமல் தடுத்து அரணாக நின்ற விஜயநகர ஸாம்ராஜ்யத்திற்கு வித்திட்ட ஸ்ரீ வித்யாரண்யர் ...

பக்தி தழைத்திட , தர்மம் ஓங்கிட , ஜனங்கள் தூய வாழ்க்கை வாழ்ந்திட காரணமான ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் ...

பதினான்கு வயஸில் ஞானம் பெற்று , திருவண்ணாமலை குஹையில் வாழ்ந்த கௌபீனத் துறவி ஸ்ரீ ரமண மஹர்ஷீ ... வழிபடும் காளி விக்ரஹத்தை ஜகன்மாதாவாகக் கண்டு , தனக்கு விவாஹம் செய்து வைக்கப் பட்ட சிறுமி ஶாரதாவை ஜகன்மாதாவின் ஸ்வரூபமாகக் கண்டு வாழ்ந்த யுக அவதாரம் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸ ...

சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஸ்ரீ ராம தீர்த , ஸ்ரீ தயானந்த , ஸ்ரீ ஷீர்டி பாபா , ஸ்ரீ காஞ்சி பரமாசார்ய , ஸ்ரீ Dr ஹெட்கேவார் , ஸ்ரீ குருஜி கோல்வால்கர் , ஸ்ரீ ராம ஸுக தாஸ் , ஸ்வாமி விவேகானந்த , போன்ற அநேகானேக ஸாதுக்கள் ...

பல்லாயிர வர்ஷங்களாக நம் தேஶத்தின் அனைத்து ப்ரதேஶங்களிலும் தோன்றி வாழ்ந்த லக்ஷோப லக்ஷ ஸாதுக்கள் , இன்றும் க்ராமந்தோறும் அமைதியாக , தூய வாழ்க்கை வாழ்ந்து , ஞான வாழ்க்கை வாழ்ந்து , ஹிந்துக்கள் தர்ம வாழ்க்கை வாழ்ந்திட ஸத்ப்ரேரணை அளித்து வரும் பல்லாயிர அநாமதேய ஸாது புருஷர்கள் , ஞானி பக்தர்கள் ...

அவன் மேல் பூர்ண ஶ்ரத்தையுடன் , அவன் மேல் ஆழ்ந்த அன்பு வைத்து , தன் மனக்குறைகளை , தன் ஶரீரக் கஷ்டங்களை , தன் கோரிக்கைகளை அவனிடம் எடுத்துச் செல்லாமல் , அவனது ஸ்ருஷ்டியை போஷித்திடவே வாழ்ந்து மறைந்திடும் ஸாதுக்கள் நமக்கு விஶேஷமானவர்கள் .  "எனக்கும் விஶேஷமானவர்கள் !" என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .  அதற்கும் மேலே , "இத்தகைய ஞானிகள் என் ஸ்வரூபமே !" என்கிறான் .

ஸ்ரீ பரமாத்மாவின் ஸ்வரூபமான இத்தகைய ஸாதுக்கள் நடமாடிய புண்ய பூமி பாரதத்தில் ஜனித்தது நம் பாக்யம் .  இத்தகைய ஞானிகளின் வாழ்க்கையை படித்து அறிபவர்கள் , கேட்டு அறிபவர்கள் பாக்யஶாலிகள் .  ஞானிகளின் ஸத்ஸங்கம் , ஞான ஸம்வாதம் , ஞான ஶ்ரவணம் ,  ஞானத் தேடல் (முமுக்ஷு) , வாழ்க்கையில் பெரும் பாக்யம் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...