Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 75



கீதையில் சில சொற்றொடர்கள் - 75


उदाराः सर्व एवैते  ।  (अध्याय ७ - श्लोक १८)
உதாராஹ ஸர்வ ஏவைதே  ...  (அத்யாயம் 7 - ஶ்லோகம் 18 )
Udaaraah Sarva Evaihi  ...  (Chapter 7 - Shloka 18)

அர்தம் :  நான்கு வகையினரும் (நான்கு வகை பக்தர்களும்) உயர்ந்தவர்களே  ...

ஸ்ரீ க்ருஷ்ணன் க்ஞானி பக்தனை 'விஶேஷமானவன்' என்று ஶ்லோகம் 17'ல் சொல்கிறான் .  மேலும் , 'க்ஞானி எனக்கு ப்ரியமானவன்' என்கிறான் .  ஶிகரம் வைத்தாற்போல் , "நானே அவன் ...  எனது ஸ்வரூபமே அவன்" என்கிறான் 18'ம் ஶ்லோகத்தில் .

மற்ற மூன்று வகை பக்தர்களைப் பற்றி ஸ்ரீ க்ருஷ்ணன் என்ன சொல்கிறான் ?  அதே ஶ்லோகம் 18'ல் , "எனது நான்கு வகை பக்தர்களும் உதாராஹ் அல்லது உயர்ந்தவர்கள் !" என்கிறான் . நமக்கு இது புதிராகத் தோன்றலாம் .  க்ஞானி பக்தனை இவ்வளவு உயர்வாக போற்றிய பிறகு , மற்ற வகையினரையும் உயர்ந்தவர்கள் என்று கூறுவது ஏன் ?  இந்தக் கேள்வியை கீதை சர்சையில் எழுப்பினார் ஸ்ரீ மோஹன ரங்கன் என்ற ஸ்ரீ ரங்க நிவாஸீ .

ஸ்ரீ க்ருஷ்ணன் கூற்றில் குதர்கம் அல்லது முரண்பாடு இருக்க முடியாது .  நமக்கு அவ்வாறு தோன்றினால் நமது புரிதலின் குறையாக இருக்கலாமே அன்றி அவனது கூற்றில் அல்ல .

ஹிந்துக்களில் மிகப்பெரும்பாலோர் ஸ்ரீ க்ருஷ்ணன் குறிப்பிட்ட முதல் மூன்று வகைகளில் , இல்லை ரெண்டு வகைகளில் பொருந்தக் கூடியவர்கள் , அதாவது ஆர்த (குறைகளைக் கூறிப் புலம்புபவன்) மற்றும் அர்தார்தி (பொருட்கள் , வஸதிகள் , அநுகூலங்கள் வேண்டுபவன்) .  (பொருந்துகிறாற்போல தோன்றுகிறது .)

அழுது புலம்புபவன் ...  மநுஷ்ய வாழ்க்கையில் துயரங்களுக்கும் கஷ்டங்களுக்கும் பஞ்ஜம் இல்லை .  தெய்வ ஸந்நிதிகளில் தம் ஶரீரக் கஷ்டங்களை , மன து:கங்களைக் கூறி அழுபவர்கள் பலரை நம்மை ஸுற்றிக் காண்கிறோம் .  ஆயின் , இவர்கள் தெய்வத்துடன் தம் புலம்பலை நிறுத்திக் கொள்வதில்லை .  எதிரில் எவர் வந்தாலும் , ரெண்டு நிமிஷம் காது கொடுக்கத் தயாராக இருந்தால் , இவர்களது புலம்பல் தொடங்கி விடும் .  மறு பேச்சு இல்லாமல் இவர்களது புலம்பலைக் கேட்போரில் கடவுளும் ஒருவர் .  அவரும் தன் குறைகளைக் கூறி , இவர்களது புலம்பலைத் தடுத்திடாதவர் என்பதால் அவரிடம் புலம்பல் .  ஆர்த வகை பக்தனுக்கும் இவர்களுக்கும் பெரும் வித்யாஸம் உண்டு .  ஸ்ரீ பரமாத்மன் மீது பரிபூர்ண ஶ்ரத்தை கொண்டவன் ஆர்த பக்தன் .பரமனுக்கு ஸமர்பணமானவன் இவன் . ஒரு குழந்தைக்குத் தாய் எப்படியோ , அப்படியே இவனுக்கு ஸ்ரீ பரமாத்மன் .  குழந்தை தாயிடம் தன் குறைகளைக் கூறி அழுதிடும் .  தாயிடம் மாத்ரம் .  அந்நேரத்தில் அந்யன் ஒருவன் வந்தால் , கண்களைத் துடைத்துக் கொண்டு , "ப்ரஶ்னையா ?  எனக்கா ?  ஒரு ப்ரஶ்னையும் இல்லையே !" என்பது போல சிரித்திடும் .  அதே போல , ஆர்த வகை பக்தனும் .  இவனுக்கு "உலகக் காதுகளில்" ஆர்வம் இல்லை .  மிக ஸூக்ஷ்மமான , மிகச் சிறந்த இறைவனின் காது மாத்ரமே அவனுடைய ஶ்ரத்தைக்குப் பாத்ரமானது .  தன் குறைகள் தீர்ந்தனவா என்பதிலும் இவனுக்கு ஆர்வம் இல்லை .  "அவனிடம் சொல்லி விட்டேன் .  அவன் பார்த்துக் கொள்வான் " என்ற பூர்ண த்ருப்தியுடன் , ஆனந்தமாக இவன் ஆலயத்தில் இருந்து திரும்புவான் .

அதே போல , அர்தார்தி வகை பக்தனும் .  நம்மில் பெரும்பாலோர் கோரிக்கைப் பட்டியலுடன் ஆலயத்திற்குச் செல்வர் .  இவர்களை பக்தர்கள் என்றோ , ஸந்நிதியில் இவர்களது பேச்சினை ப்ரார்தனை என்றோ சொல்ல முடியாது .  இவர்களுக்கு இறைவன் ஒரு ஏஜண்ட் . தாம் கோரிடும் பொருட்களை அனுப்பி வைக்கும் ஒரு ஏஜண்ட் . கோரும் மற்ற வஸதிகளைச் செய்து வைக்கும் ஒரு ஸர்விஸ் ப்ரொவைடர் (Service Provider) .  ஆனால் , ஒரே ஏஜெண்ட் இல்லை .  பல ஏஜண்ட்களில் ஒருவன் .  ஶக்தி வாய்ந்த ஏஜண்ட் .  இவர்கள் அரஸியல்வாதிகளிடம் , அரஸாங்க அமைப்புகளிலும் முட்டி மோதுவர் .  சட்டத்திற்குப் புறம்பான வேறு முயற்சிகளும் செய்து பார்ப்பர் .  "இறைவன் ஶக்தி வாய்ந்தவன் .  நாம் நாடுபவை நமக்குக் கிடைத்திட உதவிடுவான்" என்று நினைப்பதால் அவனிடம் செல்கின்றனர் .  மேலும் , "அவனை ஸந்தோஷப் படுத்தவில்லை என்றால் நமக்குக் கிடைக்காமல் தடுத்து விடுவான் " என்று பயம் கொள்வதாலும் அவனிடம் செல்கின்றனர் .  அர்தார்தி வகை பக்தன் முற்றிலும் மாறுபட்டவன் .  ஸ்ரீ பரமாத்மன் மேல் , அவன் மேல் மாத்ரம் , இவனது ஶ்ரத்தை .  தன் கோரிக்கைகளுக்காக இவன் லௌகீக முயற்சிகளில் ஈடுபடுவதில்லை .  உலக ஶக்திகள் மீது இவனுக்கு நம்பிக்கை இல்லை .  பரமன் தான் இவனுக்கு ஶக்தி .  ஆர்த வகை பக்தனைப் போல , இவனுக்கும் கோரிக்கைகள் நிறைவேறினவா என்பதில் கருத்து இல்லை .  ஒரு குழந்தைக்கு தந்தை எவ்வாறோ , அவ்வாறே இவனுக்கு இறைவன் .  தந்தையிடம் கோரிக்கை வைக்கும் குழந்தை , அடுத்த அகத்தில் உள்ள பணக்காரனையோ , பெரும் ஶக்தி வாய்ந்தவர் போல தோற்றம் அளிக்கும் பிறரையோ நாடுவதில்லை .  கோரிக்கைப் பட்டியலுடன் பகவானிடம் பேரம் பேசும் ஏனையோர் , தம் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் , ஆலயத்திற்குச் செல்வதை நிறுத்தி விடுவர் அல்லது இறை வடிவங்களை உடைத்துத் தூக்கி எறிந்து விடுவர் அல்லது வேறு 'இறைவனிடம்' சென்று விடுவர் .

வாக்கு வாதங்கள் செய்திடும் புத்திஶாலிகளும் சிலர் உண்டு .  ஆனால் அவர்கள் ஜிக்ஞாஸு வகை பக்தர்கள் இல்லை .  தம் அஹங்கார த்ருப்திக்காகவோ , அல்ப மநுஷ்யர்களின் பாராட்டைப் பெறுவதற்காகவோ , பட்டிமன்றத்தில் ஜயிப்பதற்காகவோ , கல்லூரியில் பட்டம் வாங்குவதற்காகவோ இறைவனைப் பற்றி ஆராய்வரே அன்றி அவனை அறிவதற்காக அல்ல .  ஜிக்ஞாஸு பக்தன் அவ்வாறில்லை .  அவன் மேல் பரம ஶ்ரத்தையுடன் , அவனை அறிந்திடும் ஆர்வத்தில் ஆராய்கிறான் , கேள்விகள் கேட்கிறான் .  வேறு எதற்காகவும் அல்ல .

அதனால்தான் ஸ்ரீ க்ருஷ்ணன் தம் பக்தர்களை , நால்வகை பக்தர்களையும் உதாராஹ் - மிக உயர்ந்தவர்கள் என்கிறான் .  ஸுக்ருதினஹ - தூய்மையானவர்கள் என்கிறான் .  எனது பக்தன் என்று அவன் குறிப்பிடுவது , 'ஆலயங்களுக்கு வருவோரையும் , பக்தி என்ற பெயரில் வெற்று ஷடங்குகள் செய்வோரையும் அல்ல .  பின்னர் கீதையின் பன்னிரெண்டாம் அத்யாயத்தில் பக்தனையும் பக்தியையும் விவரிக்கும் போது , ஆலயம் , தீர்த யாத்ரை , நதி ஸ்நானம் , ப்ரதக்ஷிணம் , நைவேத்யம் , மாலை உருட்டுதல் , பஜனை , வ்ரதம் ஸஹஸ்ரநாமம் போன்ற வார்தைகளை ஒரு முறையும் உச்சரிக்கவில்லை ஸ்ரீ க்ருஷ்ணன் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...