Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 77



கீதையில் சில சொற்றொடர்கள் - 77 


महात्मा सुदुर्लभः  ।  (अध्याय ७ - श्लोक १९)
மஹாத்மா ஸுதுர்லபஹ  ...  (அத்யாயம் 7 - ஶ்லோகம் 19)
Mahaatmaa Sudurlabhah  ...  (Chapter 7 - Shloka 19)

அர்தம் :  மஹாத்மா அரிதானவர் ...

பூமியில் நிலக்கரி ஸுரங்கங்கள் எத்தனை ?  அவற்றில் பதுங்கி இருக்கும் நிலக்கரி எவ்வளவு ?  அதே நிலக்கரியின் மாறுபட்ட ரூபமான வைரம் ?  வைரம் கிடைக்கும் ஸுரங்கங்கள் எத்தனை ?  அங்கு பதுங்கி இருக்கும் வைரம் ?  வைரம் அரிதானது ...  நிலக்கரியின் பண்பட்ட ரூபமே என்றாலும் , நிலக்கரி மிகப்பெரும் அளவில் இருக்கிறது என்றாலும் ...  வைரம் அரிதானது .  நிலக்கரி அத்தனையும் வைரமாகப் பண்படுவதில்லை .  வைரமாக மாறுவதற்கு நிலக்கரி கடும் 'தபஸ்' மேற்கொள்ள வேண்டி இருக்கிறது .

கடலில் நத்தைகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ளன . அவற்றின் ஓடான சிப்பிகளின் எண்ணிக்கையும் மிகப்பெரியது . நீர்த்துளிகளை ஏந்திய சிப்பிகளின் எண்ணிக்கையும் மிகப் பெரியது .  ஆனால் , முத்துக்களைத் தாங்கிய சிப்பிக்கள் ? சிப்பிக்களில் அடங்கிய நீர்த்துளியின் பண்பட்ட ரூபம்தான் முத்து . நீர்த்துளிகள் அத்தனையும் முத்தாகப் பரிணமிப்பதில்லை . முத்தாக மிளிர்வதற்கு நீர்த்துளியும் கடும் 'தபஸ்'ல் ஈடுபட வேண்டி இருக்கிறது .

மநுஷ்யர்களில் பண்பட்ட மநுஷ்யன் மஹாத்மா .  மிகக்கடும் தபஸின் விளைவாக மஹாத்மா ஆகிறான் .  பல ஜன்மங்கள் தொடரும் தபஸ் ஒரு மநுஷ்யனை மஹாத்மாவாக மாற்றுகிறது .  ஆரம்பத்தில் மனஸில் துளிர்த்திடும் ஆஶை .  பிறகு , திட்டமிட்ட பயிற்சி .  ஸ்வய நினைவுடன் கூடிய பயிற்சி .  பின்னர் , அதுவே ஸ்வபாவமாக மாறி விட்ட நிலை .  கவர்ச்சிகளில் மயங்கிடாமல் , தடுமாறி விழுந்திடாமல் , ஸ்திரமாக நிலைத்து விடும் ஸ்வபாவத்தின் வெளிப்பாடே 'மஹாத்மா' .

அனைத்து மநுஷ்யர்களும் மஹாத்மாவாக மாறி விட முடியுமா ? ஸத் யுகத்தில் அவ்வாறு இருந்திடும் என்று சொல்கிறார்கள் . ஸமுதாயத்தில் நிலவிடும் சூழ்நிலை , புஸ்தகங்களில் மாத்ரம் அல்லாமல் கண் முன் உலவிடும் மஹாத்மாக்களின் எண்ணிக்கை , ஆகியவை வெகு முக்யம் .  இன்று , நம்மைச் சுற்றி உள்ள உலகம் கவர்ச்சிகள் மிகுந்ததாக உள்ளது .  நம்மைச் சுற்றி உள்ள மநுஷ்யர்களின் வேட்கைகளும் , தேடல் முயற்சிகளும் வெளி நோக்கி , உலகத்தை நோக்கி , ஸுக போகத்தை நோக்கி உள்ளன . புறத்தோற்றத்தைப் பற்றி இருந்திடும் சிந்தனை அளவிற்கு , ஸத்யமான அகத்தோற்றத்தைப் பற்றி இல்லை .  ஸ்ரீ ராமக்ருஷ்ண மடம் , மாதா அம்ருதானந்தமயீ மடம் போன்ற "ஆன்மீக" நிறுவனங்கள் நடத்தும் ஆயிரக்கணக்கான பள்ளி - கல்லூரிகளில் படித்திடும் லக்ஷக் கணக்கான மாணவர்களில் எத்தனை மனங்களில் ...  மஹாத்மா இல்லை .. வெறும் ஸந்நயாஸீ ஆக வேண்டும் என்ற ஆஶை துளிர்க்கிறது ?  வெறும் புறத்தோற்றம் ப்ரேரணை அளித்திடாது .

ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு வெளியிடுவது ஒரு ஸத்ய வாக்குமூலம் .  இதில் வ்ரக்தி இல்லை .  வருத்தம் இல்லை .  It is a factual statement .  மஹாத்மா மிக அரிதானவர் .  துர்லபமானவர் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...