Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 79



கீதையில் சில சொற்றொடர்கள் - 79


मूढोऽयं नाभिजानाति माम्  ।  (अध्याय ७ - श्लोक २५)
மூடோயம் நா பி ஜானாதி மாம்  ...  (அத்யாயம் 7 - ஶ்லோகம் 25)
Moodhoyam NaaBhiJaanaathi Maam ...  (Chapter 7 - Shloka 25)

அர்தம் :  மூடர்கள் என்னை அறிவதில்லை ...

மூடர்கள் என்னை அறிவதில்லை ...  என்னை அறியாதவர்கள் மூடர்கள் ...

உலகம் மூடன் என்று சொல்வது யாரை ?  உலகத்து விஷயங்களை அறியாதவன் மூடன் .  ஸம்பாதிக்கத் தெரியாதவன் மூடன் .  பள்ளி , கல்லூரி படிப்பில் ஈடுபடாதவன் மூடன் ... உலக வ்யவஹாரங்கள் அறியாதவன் மூடன் ... உலகத்து மூடன் எப்படியோ வாழ்ந்து விடுகிறான் ...  அவனுக்கேற்ற வட்டம் அவனுக்கும் சேர்கிறது .  அவன் அறிந்த ஏதோ ஒன்றை வைத்து அன்றாட சோற்றை ஸம்பாதித்து விடுகிறான் .  ஒரு நாள் இறந்து போகிறான் .  அவனுக்கும் , உலகத்தில் பெரும் ஸாதனை செய்ததாக தன்னையே மெச்சிக் கொள்ளும் அறிவாளிகளுக்கும் பெரிதாக வித்யாஸம் ஏதுமில்லை .  அரஸியல்வாதிகள் , ஸமூஹ சீர்திருத்தவாதிகள் , விஶேஷ கலைத் திறன் கொண்ட கலைஞர்கள் , மெத்தப் படித்த டாக்டர்கள் , எஞ்ஜினியர்கள் , ஆடிடர்கள் , பெரும் தொழில்அதிபர்கள் , வ்யாபாரிகள் , திறமையாக தொழில் பழகி பணம் ஸம்பாதிக்கும் வகீல்கள் , தரகர்கள் , கட்டிடங்கள் கட்டுபவர்கள் , போன்ற பலரும் பணத்தைத் தம்மிடம் வரவழைக்கும் கலையைப் பயிற்சி செய்து , வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .  அவ்வளவுதானே ?  இவர்கள் பெரும் பணம் ஸம்பாதித்து , செலவழிக்கிறார்கள் .  சொத்து சேர்க்கிறார்கள் .  மூடன் குறைவான பணம் .சேர்க்கிறான்   இவர்களைச் சுற்றி அதிகக் கூட்டம் கூடுகிறது .  மூடனை சுற்றி சிறிய கூட்டம் சேர்கிறது .  இவர்களின் பெயர் பத்ரிகைகளில் வருகிறது .  முகம் டீவியில் தெரிகிறது .  கொஞ்ஜம்  போராடி சில பதவிகளை அடைகின்றனர் இவர்கள் .  மூடனுக்கு இவை கிடைப்பதில்லை .  மூடன் என்று கருதப் படுபவனும் குடும்பம் சேர்க்கிறான் .  குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறான் .  இறுதியில் அறிவாளி , பெரும் ஸாதனையாளன் ,  பணக்காரன் , படிப்பில் முதலிடம் வந்தவன் , ஃபெயில் ஆனவன் , மூடன் , வாழ்க்கையில் எதுவுமே செய்யாதவன் ...  அனைவரும் எல்லாவற்றையும் இங்கு விட்டு விட்டு செத்துப் போகின்றனர் .  சில நாட்களில் அவன் வாழ்ந்ததற்கான எந்த சுவடும் இல்லாது போகிறது .

உலகத்தில் வாழ்வதற்கு , வயிற்றை நிரப்புவதற்கு , அவரவர் திறமைக்கு ஏற்ப எதையோ செய்யுங்கள் .  அதல்ல முக்யம் .  அவனை அறிய முயலுங்கள் .  அதுவே நாம் செய்யக்கூடியது .  அதுவே புத்திஶாலித்தனம் .  இதைச் செய்யாதவர்கள் மூடர்கள் .  செய்ய வேண்டியதை விட்டு விட்டு , வேறு ஏதேதோ செய்பவன்தானே மூடன் .  இதுதான் ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்வது .

மநுஷ்யன் இந்த திஶையில் ஏன் முயற்சிகள் செய்வதில்லை ?  உலகக் கவர்ச்சிகளே காரணம் .  பணம் , பெயர் , புகழ் , பதவி , செல்வாக்கு , பரிஸு , பாராட்டு , போன்ற வெற்று விஷயங்கள் , அல்ப விஷயங்கள் பெரும் கவர்ச்சிகரமாகத் தெரிகின்றன .  பளபளப்பாக மின்னிடும் இவ்வுலகம் கண்களைக் கூஸ வைக்கிறது .  அக்கண்களுக்கு வேறெதுவும் தெரியாது .  கவர்ச்சிகள் சிந்தனையை மழுங்க அடிக்கிறது .  சிந்தனை இழந்த இவன் ஒரு வகை போதையில் வாழ்க்கையைக் கழித்து விடுவான் .  இவனையே மூடன் என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...