Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 90


கீதையில் சில சொற்றொடர்கள் - 90


पुनरावर्तिनः  ...  (अध्याय ८ - श्लोक १६)
புநராவர்தினஹ  ...  (அத்யாயம் 8 - ஶ்லோகம் 16)
Punaraavartinah ...  (Chapter 8 - Shloka 16)

அர்தம் :  அனைத்தும் மீண்டும் மீண்டும் வருவதே ...

ஸ்ரீ க்ருஷ்ணனின் அத்புத வாக்குமூலம் .  இந்த வாக்யத்தையே ஸ்ரீ க்ருஷ்ணன் கீதையில் பலமுறை மீண்டும் மீண்டும் சொல்லி இருப்பார் .

ரெண்டு சிந்தனைகள் வழியாக உலக அநுபவங்களைப் பார்க்கலாம் .  நேர்க்கோடு என்றிடும் சிந்தனை ...  வட்டம் என்றிடும் மற்ற சிந்தனை ...

முதல் வகை அனைத்தையும் நேர்க்கோடாகப் பார்க்கிறது . இது அனைத்திற்கும் ஒரு ஆரம்பம் மற்றும் முடிவை இணைத்திடும் . அநுபவங்கள் அனைத்தும் , 'இந்த ஒரு முறைதான்' என்ற முத்ரையுடன் வரும் .  "இதை நீ நழுவ விட்டால் , மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காது" .  எனவே , அநுபவத்துடன் பரபரப்பு இருந்திடும் .  அநுபவத்தை இழக்கும்போது ஏமாற்றம் , ஶோகம் மற்றும் மனத் தளர்ச்சி ஆகியவை இருந்திடும் .  குறுகிய நோக்கு , அறியாமை மற்றும் ஒருங்கிணைந்த பார்வை இல்லாததால் பிறந்தது இந்த சிந்தனை .  மேற்கத்திய தேஶங்களில் இந்த சிந்தனையின் தாக்கம் பரவலாக உள்ளது .  இன்று , சில சிந்தனையாளர்கள் , விக்ஞானிகள் மற்றும் ஆன்மீக வாதிகள் இதன் பிடியில் இருந்து மெதுவாக விடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் .

மற்றது ஸ்ரீ க்ருஷ்ணன் கூறிடுவது .  வட்டமாகப் பார்ப்பதற்கு இந்த சிந்தனையே ஆதாரம் .  இதன் படி அநுபவங்கள் அனைத்தும் ஒரு வட்டத்தைப் போல ஆதியும் அந்தமும் அற்றவை .  மீண்டும் மீண்டும் வருபவை .  எனவே , இந்த முறை இழந்தால் ,  இழப்பும் இல்லை .  மீண்டும் வரும் .  காலம் ஒரு வட்டப் பாதையில் உள்ளது .  நம் வாழ்க்கை ஒரு வட்டப் பாதை .  அநுபவங்களும் வட்டப் பாதையில் மீண்டும் மீண்டும் நிகழக் கூடியவை .  அமைதி , பொறுமை , வருவதை அதன் போக்கில் ஏற்றுக் கொள்வது , புரக்ஷி கரமான கண்ணோட்டம் இல்லாமை , பரபரப்பு மற்றும் பதட்டம் இல்லாமை ஆகியவை இந்த சிந்தனையின் விளைவுகள் .  உலகத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தேஶங்களில் , குறிப்பாக பாரத தேஶத்தில் இந்த சிந்தனையின் தாக்கம் ப்ரதானமாக உள்ளது .

'அனைத்தும் வட்ட மயமானவை' என்பதே ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்வது .  நம் வாழ்க்கையை நாம் திரும்பிப் பார்த்தால் , பல அநுபவங்கள் பல முறை மீண்டும் மீண்டும் நிகழ்ந்திருப்பதைக் காணலாம் .  நாம் பேசும் வார்த்தைகளும் அவையே மீண்டும் மீண்டும் .  நான் உரை நிகழ்த்தச் செல்லும் இடங்களுக்கு என்னுடன் எவராவது வந்தால் , இதை உணரலாம் .  அதிகம் படித்தவர் வெவ்வேறு விஷயங்கள் பேசினாலும் , அவர் திரும்பத் திரும்பப் பேசுவது குறைவாக இருந்தாலும் , இது உண்மை .  புழுக்கள் அன்றாடம் பிறக்கும் .  ஹிரண்யகஶிபு அல்லது  ராவணன் யுகங்களில் ஒரு முறை பிறந்திடுவான் .  ஸாதாரணமானவை அடிக்கடி நிகழ்ந்திடும் .  விஶேஷமானவை அரிதாக நடந்திடும் .  அனைத்தும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்திடும் என்பதே ஸத்யம் .

நமது நினைவு குறுகிய கால நினைவு .  நமது வாழ்க்கையும் குறுகியதே .  அதனால் நாம் மறந்து விடுகிறோம் .  காலம் வட்டமய ப்ரயாணத்தில் உள்ளது .  அதனால் ஜன்மமும் மரணமும் மீண்டும் நிகழ்பவை .  மரணம் ஒரு முற்றுப்புள்ளி அல்ல .  கமா தான் .  மரணத்திற்குப் பின்னரும் வாழ்க்கைத் தொடரும் .

பாரதத்தில் ஹிந்துக்கள் மத்தியில் முனைப்புடன் புதிய முயற்சி செய்யும் தன்மை குறைவாகக் காணப்படுவதற்கு இந்த சிந்தனையே காரணம் என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப் படுகிறது .  இது உண்மையாக இருக்கலாம் .  ஆனால் , அனைத்தும் வட்டமயம் , மீண்டும் மீண்டும் நிகழ்பவை என்பது ஸத்யம் .  ஸத்யத்திற்கு எதிராக போராடுவது வ்யர்தமானது .  வெற்று முயற்சி .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...