Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 91


கீதையில் சில சொற்றொடர்கள் - 91


सहस्र युग पर्यन्तम् अहर्यद्ब्रह्मणः  ।  (अध्याय ८ - श्लोक १७)
ஸஹஸ்ர யுக பர்யந்தம் அஹர்யத்ப்ரஹ்மணஹ ...  (அத்யாயம் 8 - ஶ்லோகம் 17)
Sahasra Yuga Paryantham Aharyad Brahmanah ...  (Chapter 8 - Shloka 17)

அர்தம் :  ப்ரஹ்மனின் பகல் நமக்கு ஓராயிரம் யுகங்கள் ...  ப்ரஹ்மனின் ஒரு ராத்ரீயும் நமது ஆயிர யுகங்கள் ...


ஸ்ரீ க்ருஷ்ணனின் இந்த வாக்யம் , காலத்தைப் பற்றி ஹிந்துக்களின் அறிவை ப்ரகடனப் படுத்துகிறது .  வேத காலத்திலேயே நாம் காலத்தைப் பற்றி ஆழமாக அறிந்திருந்தோம் .

கீழே , நமது கால கணனத்தைக் கொடுக்கிறேன் .  இது கீதையின் நான்காம் அத்யாயத்தில் விரிவாக சர்சை செய்யப் பட்டுள்ளது .  இன்றைய விஷயத்துடன் ஸம்பந்தம் உள்ளதால் இங்கு கொடுக்கிறோம் .

நமது காலக் கணக்கில் ‘த்ருடி’ மிகச் சிறியது .  ‘கல்பம்’ மிக நீண்டது .
100 த்ருடி                       =                 1 தத்பரம்
60 தத்பரம்                   =                 1 பரம்
60 பரம்                           =                 1 விலிப்தம்
60 விலிப்தம்               =                 1 லிப்தம்
60 லிப்தம்                     =                 1 விநாழி
60 விநாழி                     =                 1 நாழி
60 நாழி                           =                 1 நாள் (24 மணி நேரம்)
(பகலும் ராத்ரீயும் 30 நாழிகள்)

             7 தினங்கள்                 =                 1 ஸப்தாஹம்

(வாரம் .  துவங்குவது ஞாயிறு அன்று .  திங்கள் அல்ல .)

சாந்த்ரமான கணக்கில் அமாவாஸ்யைக்கு அடுத்த நாள் (ப்ரதமை) முதல் அடுத்த அமாவாஸ்யை வரை ஒரு மாஸம் .  ஜைனர்களின் மாஸம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் முதல் அடுத்த பௌர்ணமி வரை) .  பக்ஷம் என்பது அரை மாஸம் .  ரெண்டு பக்ஷங்கள் உண்டு .  க்ருஷ்ண பக்ஷம் - பௌர்ணமி முதல் அமாவாஸ்யை வரை ...  ஶுக்ல பக்ஷம் - அமாவாஸ்யை முதல் பௌர்ணமி வரை ...

சைத்ர , வைஷாக , ஜ்யேஷ்ட , ஆஷாட , ஶ்ராவண , பத்ரபாத , அஶ்வின் , கார்திக , மார்கஷீர்ஷ , புஷ்ய , மாக , ஃபால்குன ... இவை சாந்த்ரமான மாஸங்கள் .  சாந்த்ர மாஸம் ஸௌர மாஸத்தை விட ஏறக்குறைய ஒரு நாள் சிறியது என்பதால் , மூன்று வர்ஷங்களுக்கு ஒரு முறை சாந்த்ர மான வர்ஷத்தில் ஒரு அதிக மாஸம் சேர்க்கப் படுகிறது .  இது ஹிந்துக்களின் வான ஶாஸ்த்ர ஞானத்தை பளிச்சென்று அறிவிக்கும் சுடர் விளக்கு .

ஸௌர காலக் கணக்கில் ஒரு மாஸம் ஸங்க்ராந்தி முதல் அடுத்த ஸங்க்ராந்தி வரை .  பூமி ஸூர்யனைச் சுற்றி ப்ரயாணிக்கும் வட்டப் பாதையை 12 கோணங்களாக வகுத்து , ஒவ்வொன்றும் ஒரு ஸௌர மாஸமாக கணக்கிடப் படுகிறது .  இவை ஸூர்ய ராஶியாகவும் அறியப் படுகின்றன .  இது வட்டக் கணக்கு .  பூமியை மையமாக வைத்து , ஸூர்யனின் நேர்க்கோட்டுப் பாதையை 12 ராஶிகளாகப் பிரிப்பதும் ஒரு முறை .ஸௌர மாஸம் ஸங்க்ராந்தி அன்று , (ஸூர்யன் அடுத்த ராஶிக்குள் ப்ரவேஶிக்கும் தினமே ஸங்க்ராந்தி) .  மேஷ , ர்ஷப , மிதுன , கடக , ஸிஹ்ம , கன்னி , துலா , வ்ருஶ்சிக , தனுர் , மகர , கும்ப , மீன ..  இவை 12 ஸௌர மாஸங்கள் .  ஸௌர வர்ஷம் ஆரம்பிப்பது மேஷ ஸங்க்ராந்தி அன்று .  மகர ஸங்க்ராந்தியான பொங்கல் தினம் நாம் அனைவரும் அறிந்ததே .

அயனம் என்பது அரை வர்ஷம் .  கடக ஸங்க்ராந்தி (ஆடி மாஸப் பிறப்பு) முதல் மகர ஸங்க்ராந்தி (தை மாஸப் பிறப்பு) வரை உள்ள அரை வர்ஷம் தக்ஷிணாயணம் என்றும் மகர ஸங்க்ராந்தி முதல் கடக ஸங்க்ராந்தி வரை உள்ள அரை வர்ஷம் உத்தராயணம் என்றும் அறியப் படுகின்றன .  ஸூர்யனின் வடக்கு - தெற்கு திஶை ப்ரயாணத்தை மையமாகக் கொண்டது அயனக் கணக்கு .

யுகம் என்பது அடுத்த கால அளவு .  நான்கு யுகங்கள் உள்ளன .  ஸத்ய யுகம் அல்லது க்ருத யுகம் 17,28,000 வர்ஷங்கள் , த்ரேதா யுகம் 12,96,000 வர்ஷங்கள் . த்வாபர யுகம் 8,64,000 வர்ஷங்கள் மற்றும் கலி யுகம் 4,32,000 வர்ஷங்கள் கொண்டவை .  இவை நான்கும் சேர்ந்த சதுர் யுகம் 43,20,000 வர்ஷங்கள் .

43,20,000 வர்ஷங்கள்          =                 1 சதுர் யுகம்
71 சதுர் யுகம்                            =                1 மன்வந்தரம்
14 மன்வந்தரம்                        =                1 கல்பம்
1 கல்பம்                                =             ப்ரஹ்மனின் அரை நாள் (பகல் / ராத்ரீ)
720 கல்பங்கள்                        =                 ப்ரஹ்மானின் ஒரு வர்ஷம்
100 ப்ரஹ்ம வர்ஷங்கள்   =                 1 மஹா கல்பம்  (ப்ரலயம்)                           (311,040,000,000,000 மநுஷ்ய வர்ஷங்கள்)

(ஒரு ப்ரஹ்மனின் முடிவு ...  மற்றொரு ப்ரஹ்மனின் ஆரம்பம் ...)

காலம் ஆஶ்சர்யகரமானது .  காலத்தைப் பற்றிய ஞானம் பரமாத்மாவை அறியத் தூண்டிடும் .  நமது வாழ்நாள் மிகக் குறுகியது .  கால ப்ரவாஹத்தில் சிறு துளி .  காலம் ஆதியும் அந்தமும் அற்றது .  அதனால் காலம் தெய்வமாகவே போற்றப் படுகிறது .  யமராஜனே காலதேவன் .  ஶிவன் அல்லது மஹாகாலன் காலத்திற்கு அப்பாற்பட்டவன் , அகாலன் .  (உலகம் இன்று அழிந்து விடும் , ஸெப்டெம்பர் 23 அன்று அழிந்து விடும் .. டிஸம்பர் 31 அன்று அழிந்து விடும் என்று கிளப்பப் படும் க்றிஸ்தவ புரளி எல்லாம் டுபாக்கூர் ...)

காலம் நித்யமானது .  காலம் எதையும் ஸாராதது .  அதே ஸமயம் சூழ்நிலை , மனநிலை மற்றும் இடத்தை ஸார்ந்தது . ஒருவருக்கு நீண்ட காலமாக உள்ளது மற்றவருக்கு குறுகிய காலமாகத் தோன்றும் .  ஒரு இடத்தில் குறுகியதாகத் தோன்றும் காலம் வேறொரு இடத்தில் மிக நீண்டதாகத் தோன்றிடும் .  உத்ஸாஹமாக ஒரு கார்யத்தில் ஈடுபடும் போது காலம் வேகமாக ஓடும் .  மனஸ் லயிக்காமல் , அலுப்புடன் ஒரு கார்யத்தில் ஈடுபடும் போது காலம் மிக மெதுவாக ஓடிடும் .  புதன் க்ரஹத்தில் காலம் வேகமாக ஓடும் .  ஶனி கிரஹத்தில் மெதுவாக ஓடும் .  நினைவிலும் கனவிலும் ஒரு சில க்ஷணங்களில் பல வர்ஷங்கள் ஓடி விடும் .

ஒரு புழு தன்னுடைய எல்லா கார்யங்களையும் அதாவது , பிறந்து , வளர்ந்து , உண்டு , பெண் இனத்துடன் கூடி , அடுத்த தலைமுறையை படைத்து , ...  கடைஸியில் இறந்து ... எல்லாம் தன் ஒரு நாள் வாழ்க்கையில் முடித்து விடுகிறது .  மற்ற ம்ருகங்கள் ஒரு சில வர்ஷங்களில் முழு வாழ்க்கையை வாழ்ந்து விடும் .  மநுஷ்யன் அதே கார்யங்களை எழுபது எண்பது வர்ஷங்களில் செய்து முடிக்கிறான் .

தேவ லோகத்து ஒரு பகல் அல்லது ஒரு ராத்ரீ , பித்ரு லோகத்தில் ஒரு பக்ஷம் (பதினைந்து தினங்கள்) , மநுஷ்ய லோகத்தில் ஒரு அயனம் அல்லது ஆறு மாஸங்கள் .  இங்கு உத்தராயனம் என்பது பித்ரு லோகத்தில் ஶுக்ல பக்ஷம் , தேவ லோகத்தின் பகல் .  இங்கு தட்சிணாயனம் என்பது பித்ரு லோகத்தில் க்ருஷ்ண பக்ஷம் மற்றும் தேவ லோகத்தில் ராத்ரீ .  நமக்கு ஒரு சில லக்ஷ வர்ஷங்கள் ப்ரஹ்மனுக்கு ஒரு தினமே .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...