Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 92


கீதையில் சில சொற்றொடர்கள் - 92


अव्यक्ताद्व्यक्त यः सर्वाः प्रभवन्त्यहरागमे  ... रात्र्यागमे प्रलीयन्ते ।  (अध्याय ८ - श्लोक १८)
அவ்யக்தாத் வ்யக்த யஹ ஸர்வாஹ ப்ரபவந்தி அஹராகமே  ...  ராத்ர்யாகமே ப்ரலீயந்தி    (அத்யாயம் 8 - ஶ்லோகம் 18)
Avyaktaad Vuakta Yah Sarvaah Prabhavanti Aharaagame ...  Raathryaagame Praleeyante ...  (Chapter 8 - Shloka 18)

அர்தம் :  ப்ரஹ்மனின் பகல் துவங்கும் போது , ஸுப்தமாக இருந்த நிலையில் இருந்து , அவ்யக்தமாக , வெளிப்படாமல் இருந்த நிலையில் இருந்து , அனைத்து உயிர்களும் வ்யக்தம் ஆகின்றன ...  வெளிப்படுகின்றன ...  ப்ரஹ்மனின் ராத்ரீ ஆரம்பிக்கும் போது , உயிர்கள் அனைத்தும் மீண்டும் லயம் ஆகி விடுகின்றன ...  ஸுப்தமாகி விடுகின்றன .

மூன்று நிலைகளில் இந்த வாக்யத்தின் பாவத்தை உணர்ந்து கொள்ளலாம் .

ஒன்று : -  நமது அன்றாட பகலும் ராத்ரீயும் ...  பகல் வந்தால் நாம் நித்ரையில் இருந்து விழிக்கிறோம் .  நித்ரையில் நாம் நமக்குள் ஒடுங்கி இருந்தோம் .  லயமாகி இருந்தோம் .  நாம் மாத்ரம் தனியாக , ஸுப்த நிலையில் இருந்தோம் .  தேஹ உணர்வு அழிந்திருந்தது . நம்மைச் சுற்றி ஒரு உலகமும் அதில் உயிர்களும் உள்ளன என்ற உணர்வை இழந்து விடுகிறோம் .  நித்ரை ஒரு வகையில் மரண நிலையே . மலையாளத்தில் காலையில் விழிப்பதற்கு 'உணருன்னு' என்ற வார்தை உபயோகப் படுகிறது .  உணர்வற்ற நிலையிலிருந்து , தேஹம் பற்றிய உணர்வு , உலகம் பற்றிய உணர்வு , மேலோட்டமான 'அஹங்காரத்துடன் இணைந்த நான்' என்ற உணர்வு இழந்த நிலையில் இருந்து , வெளிப்படுகிறோம் .  விழித்துக் கொள்கிறோம் . ராத்ரீ வரும் போது மீண்டும் லயம் ஆகி விடுகிறோம் .  ஒடுங்கி விடுகிறோம் .  உணர்வற்ற நிலையை எய்து விடுகிறோம் .

ரெண்டு : -  மரணம் , புனர்ஜன்மம் என்ற அந்த நிலை .  மரணம் வரும்போது , ஸுப்த நிலைக்குச் சென்று விடுகிறோம் .  ஸுப்த நிலையில் இருந்து புனர்ஜன்மம் எடுத்திடும் போது , மீண்டும் வ்யக்த நிலையில் , வெளிப்படுகிறோம் .  மரணம் நம் அன்றாட நித்ரையைப் போன்றது .  தேஹ உணர்வு கிடையாது .  (தேஹம் கிடையாது .) உலக உணர்வு கிடையாது .  (உலகத்தை உணர வேண்டும் என்றால் , இந்த்ரியங்கள் வேண்டும் .  தேஹம் வேண்டும் .)

மூன்று :  ஸ்ருஷ்டி - லயம் என்ற அந்த நிலை ...  ப்ரஹ்மனின் பகல் வரும் போது நாம் , படைப்பில் உள்ள அனைத்து உயிர்களும் , லய நிலையில் இருந்து , வெளிப்படுகின்றன .  வ்யக்தம் ஆகின்றன .  ப்ரஹ்மனின் பகல் முடிந்து ராத்ரீ பிறக்கும் போது , அனைத்து உயிர்களும் மீண்டும் லயமாகி விடுகின்றன .  விஸர்ஜனம் ஆகி விடுகின்றன .  அடுத்த பகலின் ஆரம்பத்தில் மீண்டும் வெளிப்படுகின்றன .

மூன்று நிலைகளிலும் அதே உயிர்கள் மீண்டும் மீண்டும் வெளிப்படுகின்றன .  ஒடுங்குகின்றன .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...