Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 93


கீதையில் சில சொற்றொடர்கள் - 93


स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति  ।  (अध्याय ८ - श्लोक २०)
ஸ ஸர்வேஷு பூதேஷு நஶ்யத்ஸு ந விநஶ்யதி  ...  (அத்யாயம் 8 - ஶ்லோகம் 20)
Sa Sarveshu Bhooteshu Nashyatsu Na Vinashyathi ...  (Chapter 8 - Shloka 20)

அர்தம் :  அனைத்து உயிர்களும் அழிந்து மறைந்த பின்னரும் எது இருக்கிறதோ , அதுவே அவன் ..

ருசி என்பது என்ன ?  ஒரு பண்டத்தின் ருசியை எவ்வாறு அறிவது ?  அதை வாயில் போட்டு , மென்று , முழுங்கிய பின்னர் , அதாவது , அந்த பண்டம் அழிந்து மறைந்த பின்னர் , நாக்கில் எது தங்குகிறதோ ...  அது ருசி .  அந்த பண்டத்தின் ஒவ்வொரு அணுவிலும் ருசி உள்ளது .  ஆயின் , ருசியைத் தனியாகப் பிரித்து எடுக்க முடியாது .  அது அருவம் ஆனது .  அதை உணர மாத்ரமே முடியும் .  அந்த பண்டம் இருக்கும் போது , அது இருந்தது .  பண்டம் எங்கும் வ்யாபித்திருந்தது .  அதன் அணு அணுவிலும் இருந்தது .  இருந்தும் மறைந்து இருந்தது .  பண்டம் அரைபட்டு அழிந்த பிறகு , வயிற்றுக்குள் சென்று விட்ட பிறகு , நாக்கில் தங்குவது ருசி .

க்ஞானம் என்பது என்ன ?  புஸ்தகங்கள் , பேனாக்கள் , வித்யாலயம் , மஹாவித்யாலயம் , ஆசிரியர்கள் , லைப்ரரி , லெபோரேடரி , கட்டிடங்கள் , பரீக்ஷை இவை எல்லாம் கல்வி பெற்றிட , க்ஞானம் பெற்றிட அவஶ்யமானவை .  இவை இல்லாமல் கல்வி பெற முடியாது .  ஆனால் , ஒருவன் தான் பெற்ற க்ஞானத்தை , கல்வியை எவ்வாறு உணர்வது ?  வித்யாலய பர்வம் முடிந்த பின் , மஹாவித்யாலய பர்வம் முடிந்த பின் , புஸ்தகங்கள் , பேனாக்கள் , பரீக்ஷைகள் என்ற இவை அனைத்தும் அவனது வாழ்க்கையில் இருந்து மறைந்த பின்னர் , அவனுள் எது தங்கி இருக்கிறதோ , ஒளி ரூபமாக அவனுள் இருந்து , அவனது வாழ்க்கையை வழி நடத்துகிறதோ , அதுவே அவன் பெற்ற க்ஞானம் .  க்ஞானம் அரூபமானது .  புஸ்தகங்கள் , பேனாக்கள் , ஆசிரியர்கள் , லைப்ரரிகள் , லெபோரெடரி , பரீக்ஷைத் தாள் , என்ற இவை அனைத்திலும் க்ஞானம் வ்யாபித்திருக்கிறது .  புதைந்து மறைந்து , அவ்யக்தமாய் இருக்கிறது .  இவை அனைத்தும் மறைந்த பின்னரும் எது மறையாமல் , ஒளி ரூபமாய் , உள்ளே ப்ரகாஶித்துக் கொண்டிருக்கிறதோ அதுவே ஞானம் .

ஒருவனுடைய வாழ்க்கை என்பது எது ?  ஶரீரம் , மூச்சு விடுதல் , போஜனம் , உடைகள் , அவரது பேச்சு, எழுத்து , உறவுகள் , பணம் ஸம்பாதித்திடும் முயற்சிகள் , அதற்கான கருவிகள் , யந்த்ரங்கள் , போக்குவரத்து வாஹனங்கள் ... என்று எத்தனையோ விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன .  இவையே வாழ்க்கை என்று ஏமாந்து விடும் வாய்ப்பு உண்டு . ஆனால் , இவை அனைத்தும் இல்லாத போதும் , மறைந்த பிறகும் , அவரும் மறைந்த பின்னர் , அவரைப் பற்றிய எத்தகைய பாவம் நிலைத்து நிற்கிறதோ , அதுவே அவரது வாழ்க்கை .

இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ பரமாத்மனை இவ்வாறு வர்ணிக்கிறார் .  அனைத்தும் வெளிப்பட்டது அவனாலே .  அனைத்தின் உள்ளேயும் அவன் வ்யாபித்திருக்கிறான் .  அனைத்தும் செயல்படுவது அவனாலே .  (அதனாலே என்றும் சொல்லலாம் .  ஸ்ரீ பரமாத்மா ஆண் பாலோ பெண் பாலோ இல்லை .)  அனைத்தும் அடங்குவதும் அவனாலே .  அனைத்தும் அழிந்த பிறகும் , மறைந்து விட்ட பின்னரும் எது இருக்கிறதோ , அதுவே அவன் .  அனைத்து உயிர்களும் இருக்கும் போது , வெளிப்பட்டிருந்த நிலையில் , வ்யக்தமாக , ஸ்வரூபமாக இருக்கிறான் .  அனைத்தும் மறைந்த பிறகு , வெளிப்படாத நிலையில் , அவ்யக்தமாக இருக்கிறான் .  அவன் இருக்கிறான் .  அவன் மாத்ரமே இருக்கிறான் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...