Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 102


கீதையில் சில சொற்றொடர்கள் - 102


येऽप्यन्य देवता भक्ता यजन्ते  ...  तेऽपि मामेव यजन्ति  ...  अविधिपूर्वकम् ।  (अध्याय ९ - श्लोक २३)
யேப்யந்ய தேவதா பக்தா யஜந்தே  ...  தேபி மாமேவ யஜந்தி  ...  அவிதி பூர்வகம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 23)
Yepyanya Devataa Bhaktaa Yajante ...  Tepi Maameva Yajanthi -  AvidhiPoorvakam .. (Chapter 9 - Shlokam 23)

அர்தம் :  அந்ய தேவர்களை பூஜிப்பவர்களும் என்னையே பூஜிக்கின்றனர், விதிகளுக்கு முரண்பட்டு ...

யேஶு தன்னை , "I am a Jealous God" என்கிறாராம் .  அவருக்கு என்ன பொறாமை ?  யார் மீது பொறாமை ?  மற்ற கடவுள்கள் மீது ???  ஏன் பொறாமை ?  இவர்களைப் பூஜிப்பவர்கள் இத்தனை நபர்கள் இருக்கிறார்களா ?  இந்தப் பொறாமையின் காரணமாக , அவர்கள் அனைவரையும் க்றிஸ்தவத்திற்கு மாற்றித் தன் பின்னால் வரச் செய்திட , அக்கடவுள்களை மறக்கச் செய்திட சர்ச் பெரும் பாடு படுகிறது ...  மாற மறுப்போரைக் கொன்று விடவும் தயங்குவதில்லை .  மற்ற கடவுள்களின் வழிபாட்டு ஸ்தலங்களை தகர்த்து விடவும் தயங்குவதில்லை .  பொறாமையின் தீவ்ரம் ...

ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு சொல்வது அத்தகைய பாவனையை வெளிப்படுத்துகிறதா ?  "நான் ஒருவனே தேவன்" என்கிறாரா ?  அந்ய தேவதைகளை பஜிப்பவர்கள் ...  ஸ்ரீ க்ருஷ்ண ரூபத்தை அல்லாமல் , மற்ற ரூபங்களைப் பூஜிப்பவர்கள் ... 'என்னையே பூஜிக்கின்றனர்' என்கிறார் .  பாரத தேஶத்தில் மிக ஆழமாக வேரூன்றி உள்ள கருத்தையே கூறுகிறார் .  வேதங்களின் கருத்து இது .  "நீ எந்த ரூபத்திற்கு அர்சனை - ஆராதனை அளித்தாலும் , அது ஒரே பரமனை சென்று அடையும்" .  ரூபங்கள் மாறலாம் .  பரமாத்மன் ஒன்றுதான் என்ற கருத்தையே வெளிப்படுத்துகிறார் .

விதிகளுக்கு முரண்பட்டு என்கிறாரே ?  ஸ்ரீ க்ருஷ்ணன் யஜந்தே அல்லது பூஜித்தல் என்று சொல்வது விக்ரஹ ஆராதனை மற்றும் புஷ்பங்களாலும் ஶ்லோகங்களாலும் செய்யப்படும் பூஜையைக் குறிப்பிடவில்லை .

தனம் , பதவி , கீர்தி ... போன்ற உலகாயத விஷயங்களில் ஏதேனும் ஒன்றை , அடைந்து விட வேண்டும் என்ற ஆவேஶத்துடன் , மனஸெல்லாம் அதே சிந்தனையால் நிறைத்து , ஶரீரத்தின் ஒவ்வொரு அணுவும் அந்த சிந்தனையால் துடித்து , செய்திடும் முயற்சிகள் அனைத்தும் அதே நோக்கத்தால் தூண்டப்பட்டு , இருந்திடும் இந்த நிலை பூஜித்தலே .  தனம் என்ற ஶக்தியின் அதிதேவதை , பதவி - அதிகாரம் என்ற ஶக்தியின் அதிதேவதை அல்லது கீர்தி என்ற ஶக்தியின் அதிதேவதையின் பூஜை ...  இந்த தேவதைகளின் அருள் வேண்டி நடந்திடும் பூஜை ...  இந்தப் பூஜையில் புற ஷடங்குகள் இல்லை .  ஆனால் , இங்கும் பாவனை ஒரு பக்தனின் பாவனையே .  அநன்ய பாவனை .  வேறு எந்த சிந்தனையும் இல்லாது , தான் நாடிடும் ஶக்தியின் சிந்தனை மாத்ரம் .  பக்தனின் லக்ஷணங்கள் அனைத்தும் இருந்தும் , இதை "விதிகளுக்கு முரணான" பூஜை என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .

தனம் நாடுகிறான் .  பதவியை நாடுகிறான் .  கீர்தியை நாடுகிறான் .  அந்த ஒரே நாட்டத்தில் வாழ்கிறான் .  அந்த ஒரே சிந்தனையில் லயிக்கிறான் .  ஏன் ?  இவற்றை  அடைந்து விட்டால் நிரந்தர ஆனந்தத்தை , பரம ஆனந்தத்தை அடைந்து விடலாம் என்று கருதுவதால் ...  இயலாத நிலையை மாற்றி குறையற்ற ஐஶ்வர்யத்தைப் பெற்று விடலாம் என்று நினைப்பதால் , நிஶ்சயம் அழிவு என்ற நிலையை மாற்றி , அழிவற்ற அமர நிலையை அடைந்து விடலாம் என்று கருதுவதால் ...  மரணத்திற்குப் பின்னும் நிலைத்து விட வேண்டும் என்று விரும்புவதால் ....  இது ஸாத்யமா ?  தனத்தால் , அளவற்றதாக இருந்தாலும் ...  ஆனந்தத்தை வாங்கி விட முடியுமா ?  து:கம் கலப்பில்லாத ஸுகத்தைப் பெற்று விட முடியுமா ?  பதவியால் , வானளாவிய அதிகாரத்தால் குறைவற்ற ஐஶ்வர்யத்தைப் பெற்று விட முடியுமா (ஐஶ்வர்யம் என்றால் செல்வம் இல்லை .  ஆதிக்யம் அல்லது ஈஶ்வரத் தன்மை) ?  கீர்தியால் அழிவற்ற நிலையை , மரணம் இல்லா நிரந்தர நிலையை எய்து விட முடியுமா ?  முடியாது என்பதே ஸத்யம் .

தனம் மூலம் பொருட்களை வாங்கி விடலாம் .  ஸுகங்களை விலை பேசலாம் .  ஆனந்தம் கிடைத்திடுமா என்றால் கிடைக்காது .  பதவி மூலம் அதிகாரம் பெறலாம் .  சில குறுகிய காலத்திற்கு , சிலர் மீது ஆதிக்யம் செலுத்தலாம் .  பூர்ண ஆதிக்யம் , ஐஶ்வர்யம் லபிக்குமா என்றால் 'ம்ஹும் .  லபிக்காது' .  கீர்தியைப் பெற்றால் , சில கல்வெட்டுகளில் பெயர் பதியலாம் .  சில ஶிலைகள் நிறுவப்படலாம் .  பளிங்குக் கற்களால் ஸமாதி கட்டப் படலாம் .  இவை குறுகிய காலத்திற்கே நிலைத்திடும் .  நிரந்தரத் தன்மையை , மரணமற்ற நிலை கிடைக்குமா என்றால் கிடைக்காது .  அதனால் தான் இம்முயற்சிகளை , இந்நாட்டங்களை "விதிகளுக்கு முரணானவை" என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  அடைய வேண்டியது ஒன்று .  அதற்கான பாதையை விட்டு விட்டு , வேறொரு பாதை வழியாக ப்ரயாணிக்க முயல்வதை "விதிகளுக்கு முரணான" என்கிறார் .

தனம் , அதிகாரம் , கீர்தி , ஸந்தானம் போன்றவற்றை நாடும் இவர்களே மற்ற தேவதைகளை வழிபடுபவர்கள் .  இவர்களது பாவனை அநன்யமாக இருப்பதால் இவர்களும் பூஜித்திடும் பக்தர்கள்தான் .  விரும்புவதை அடைந்தாலும் , இவர்களது நோக்கம் நிறைவேறாது என்பதால் இவை விதிகளுக்கு முரண்பட்டவை . 

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...