Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 103


கீதையில் சில சொற்றொடர்கள் - 103


यान्ति देवव्रता देवान् पितॄन यान्ति पितृव्रता: ।  भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ।।  (अध्याय ९ - श्लोक २५)
யாந்தி தேவவ்ரதா தேவான் , பித்ரூன் யாந்தி பித்ருவ்ரதாஹ ...  பூதாநி யாந்தி பூதேஜ்யா மத்யாஜினோsபி மாம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 25)
Yaanti DevaVrataa Devaan Pitroon Yanti PitruVrataah ..  Bhootaani Yanti Bhootejyaa Yanti Madyaajino(a)pi Maam ...  (Chapter 9 - Shloka 25)

அர்தம் :  தேவர்களை பூஜிப்பவர்கள் தேவத்வத்தை அடைகின்றனர் .  பித்ருக்களை பூஜிப்பவர்கள் பித்ரு பாவத்தை அடைகின்றனர் .  பூத ப்ரேதங்களை பூஜிப்பவர்கள் அதே பாவனையை அடைகின்றனர் ..  என்னை பூஜிப்பவர்கள் என்னை அடைகின்றனர் .

நாம் எதை நாடுகிறோமோ , அதுவே நமக்குக் கிடைக்கும் .  அல்ப விஷயங்களை நாடினால் அல்ப விஷயங்களே கிடைக்கும் .  உயர்ந்த விஷயங்களை நாடினால் உயர்ந்த விஷயங்கள் கிடைக்கும் .

நாட்டம் எவ்வாறு ஏற்படுகிறது ?  அவரவர் ஸ்வபாவத்திற்கு ஏற்ப ... ஒரு IAS அதிகாரி .  மந்த்ரியிடம் தன்னை அறிமுகம் செய்து வைத்திட என்னிடம் கெஞ்ஜுவதைப் பார்த்தால் , "இவர் ஒரு IAS அதிகாரியா , கார்யாலய வாஸலில் நிற்கும் வாச்மேனா என்று ஸந்தேஹம் வரும் .  இவ்வாறு கூறும் போது வாச்மேனைத் தாழ்த்துவதல்ல என் நோக்கம் .  அல்ப நாட்டங்கள் இல்லாத ஸாதாரண மநுஷ்யர்கள் பலரை நான் அறிவேன் .  நம்முடைய ஒரு தாரணையை , நாம் நம்பிடும் ஒரு கருத்தை , தவறான கருத்தை highlight' செய்யவே இந்த ஒப்பிடுதல் ..

ஸமீபத்தில் , "சிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்" என்ற தலைப்புடன் ஒரு படமோ அல்லது ஏதோ ஒரு படத்தில் இந்த வசனமோ பேசப்பட்டது .  முற்றிலும் அபத்தமான கருத்து .  ஆனால் , இத்தகைய பல கருத்துக்கள் நம்மில் பெரும்பாலோர் மனங்களில் பதிந்துள்ளன .  "தனவந்தன் அல்பமாக (பேச்சு மொழியில் சொல்ல வேண்டுமானால் - பக்கியாக) இருக்க மாட்டான்" .  (நாம் விமானங்களில் பஃபே என்ற பார்ட்டிகளிலும் காணும் காக்ஷிகள் இக்கருத்துக்கு மாறானவை .)  "படித்தவன் கோழையாக இருக்க மாட்டான்" ;  (என்னுடன் படித்தவர்கள் பலரை மிக அருகில் இருந்து பார்க்கிறேன் .  எல்லாம் இருந்தும் தொடை நடுங்கிகளாக , தவறு என்று தான் கருதிடும் விஷயத்தை எதிர்க்க முடியாதவர்களாக இருப்பதைப் பார்க்கிறேன் .)  "பதவியில் இருப்பவன் குழைபவனாக , கூழ் கும்பிடு போடுபவனாக இருக்க மாட்டான்" ;  கட்சியின் அதிபர் தயவால் கிடைத்த பதவியைக் காத்துக் கொள்வதற்காக கூன் முதுகுடன் வாழ்பவர்கள் எத்தனை எத்தனை !!  "வயஸு முதிர்ந்தவன் குழந்தைத்தனமாக , மூடனாக இருக்க மாட்டான்" ;  (முக்கால் நிஜாரை அணிந்து கொண்டு , தலை மயிறுக்கு ஸாயம் பூசிக் கொண்டு , வாஸனை த்ரவ்யங்களைத் தெளித்துக் கொண்டு ,  குழந்தைத்தனமான பேச்சுக்களில் நேரத்தைக் கழித்திடும் எத்தனை 60 , 70 , ஏன் 80 வயஸு நபர்களை நாம் காண்கிறோம் .)

முன்னொரு காலத்தில் இவை ஸத்யமாக இருந்திருக்கலாம் .  ஆங்க்லக் கல்வி , ஸுக போகத்திற்கு அளிக்கப் படும் மஹத்வம் , இவை காரணமாக இன்று பெரும்பாலும் இக்கருத்துக்கள் பொய்யானவை .  ஒருவன் சிறியவனா பெரியவனா , படித்தவனா படிக்காதவனா , பெரிய பதவியில் இருப்பவனா ஸாதாரண பதவியில் இருப்பவனா , தனவந்தனா தரித்ரனா , சிவப்புத் தோல் உள்ளவனா கறுப்புத் தோல் உள்ளவனா என்பதெல்லாம் பொருட்டல்ல .  அவன் ஸ்வபாவம் , ஸ்வபாவத்திற்கு ஏற்ற அவனது நாட்டம் எத்தகையது என்பதுதான் முக்யம் .  எதை நாடுகிறானோ, அதுவும் தீவ்ரமாக நாடுகிறானோ , அதுவே அவனுக்குக் கிடைத்திடும் .  வேறொன்றும் கிடைத்திடாது .

நாட்டத்தை உயர்த்திக் கொள்ள முடியுமா ?  ஸ்வபாவத்தை Finetune செய்து கொள்ள முடியுமா ?  பொதுவாக , முடியாது என்பதுதான் என் அநுபவம் .  "விரலைச் சூப்பிக் கொண்டு இவ்வுலகத்தில் வருபவன் விரலைச் சூப்பிக் கொண்டே ஶ்மஶானத்திற்குச் செல்கிறான்" என்று ஸ்ரீ ரஜனீஷ் சொல்வார் .  மாற்றப் பட அவஶ்யம் உள்ளது என்பதை உணர்வதும் இல்லை .  மாற்றிக் கொள்ள விரும்புவதும் இல்லை .  மாற்றிக் கொள்ள முயல்வதும் இல்லை .

மாற்றிக் கொள்ள முடியவே முடியாதா ?  முடியும் , மிக அரிதாக .  மிகக்கடும் முயற்சிகளின் விளைவாக .  தன்னைக் காணுதல் , தன் செயல்களை , பேச்சை , சிந்தனையை புடம் போடுதல் , தன்னை அறிதல் , நல்லோரின் துணை நாடுதல் (ஸத்ஸங்கம்) போன்ற பல முயற்சிகள் , தொடர் முயற்சிகள் மூலம் ஸ்வபாவத்தை , வாழ்க்கையில் தனது நாட்டத்தை finetune செய்து கொள்ள முடியும் .  இந்த ஜன்மத்தில் முடியவில்லை என்றாலும் வரும் ஜன்மங்களிலாவது முடியும் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...