Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 97


கீதையில் சில சொற்றொடர்கள் - 97


परम्भावं अजानन्तो अवजानन्ति मां मूढा  ...  (अध्याय ९ - श्लोक ११)
பரம் பாவம் அஜானந்தோ அவஜாநந்தி மாம் மூடா  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 11)
ParamBhaavam Ajaananto avajaananti Maam Moodhaa  ...  (Chapter 9 - Shlokam 11)

அர்தம் :  எனது பரம பாவனையை அறிந்திடாத மூடர் , என்னை அவமதிக்கின்றனர் ...

என்னை அறியாதவர்கள் மூடர்கள் என்கிறார் .  எனது பரம பாவனையை அறியாத மூடர்கள் என்கிறார் .  எனது அவதார மஹிமையை அறியாத மூடர்கள் என்கிறார் ..  எனது ஆகாரத்தில் நிராகாரத்தை , உருவத்தில் அருவத்தை , ப்ரக்ருதியில் ப்ரஹ்மனைக் காண முடியாதவரை மூடர் என்கிறார் .

நாம் தேஹம் எடுத்து பூ லோகத்திற்கு வந்திருப்பது நம் பூர்வ ஜன்ம வாஸனைகளைக் கழித்திட .  அவ்வாஸனைகளுக்கு ஏற்ற தேஹம் நமக்குக் கிடைக்கிறது .  வாஸனைகளை அநுபவிக்க ஹேதுவான சூழ்நிலை நமக்குக் கிடைக்கிறது .  வாஸனைகளுக்கு ஏற்ப ஸுக து:கங்களை அநுபவித்தவாறு வாழ்க்கையைக் கழிக்கிறோம் .  நாம் ப்ரக்ருதியின் வஶத்தில் இருக்கிறோம் .  ப்ரக்ருதி நம் வஶத்தில் இருப்பதில்லை .

தெய்வ மநுஷ்யர்கள் , அவதாரங்கள் ப்ரக்ருதியைத் தம் வஶப் படுத்தி , மநுஷ்ய ஸமூஹத்தின் மீது கருணை கொண்டு , தேஹம் எடுத்து , பூ லோக வாஸம் செய்திட , இறங்கி வருகின்றனர் .  அவர்களது அந்த பரம பாவனையை அறிந்திடாது , அவர்களை தேஹத்துடன் கூடிய ஸாதாரண பிற மநுஷ்யர்களாகக் கருதிடுவோரை மூடர்கள் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .

ஸ்ரீ க்ருஷ்ணன் , 'மூடர்கள்' என்று சொல்வது நம் அனைவருக்கும் பொருந்திடும் .  நமக்கு அருகில் இருப்போரின் தெய்வீகத் தன்மையை அறிந்திடாது , அவரை நம் தாயாகவும் , தனயனாகவும் , புதல்வனாகவும் , வேலைக்காரனாகவும் , வேறு ஏதோ பந்தமாகவும் பார்க்கிறோம் .  இதையே மூடத்தனம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .

எனது பரம பாவத்தை அறிந்திடாது என்னை அவமதிக்கின்றனர் , என்கிறாரே ஸ்ரீ க்ருஷ்ணன் ?  அபமானப் படுத்தப் படுவதில் அவருக்கு மன வருத்தமா ?  மநுஷ்ய ஸமூஹத்தின் மீது கருணை கொண்டவர் அல்லவா அவர் ?  தன்னை உயர்த்திக் கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பினைத் தவற விடுகின்றனர் என்பதே அவர் வருத்தம் .  எவ்வாறு ???

"இவரும் தன்னைப் போலவே தேஹம் தரித்து வந்த ஸாதாரண மநுஷ்யன் , குறைகளுடன் கூடிய மநுஷ்யன் , தவறுகள் இழைத்திடும் மநுஷ்யன் அல்ப ஸுக - து:கங்களைத் துரத்தி ஓடும் ஒரு மநுஷ்யனே" என்று கருதி , தன்னுடைய குறைகளை , தவறுகளை , ஸுக - து:க நாட்டத்தை மன்னிப்பதன் மூலம் தன் உயர்வைத் தடுத்துக் கொள்கிறான் .

இவனைக் கவர்ந்து , தன் காலடியில் விழ வைத்திட , தன்னை ஒரு அவதாரமாக , தெய்வீக மநுஷ்யனாக ஏற்க வைத்திட , தன் படத்தையும் கை கால்களையும் பூஜை செய்ய வைத்திட ,  மாயா ஜாலங்களைக் காட்டி , பெரும் கூட்டங்களைக் கூட்டி , ப்ரமிக்க வைத்திடும் அலங்காரங்கள் செய்து கொண்டு , கவர்ச்சிகரமான வசனங்கள் பேசி , பல்வேறு வேஷங்களில் வரும் போலிகளின் பின்னால் ஓடும் போதும் தன் உயர்விற்கான பாதையை மூடி விடுகிறான் .  ஸ்ரீ க்ருஷ்ணனின் வருத்தம் இதுவே .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...