Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 98


கீதையில் சில சொற்றொடர்கள் - 98


मोघाशा मोघ कर्माणो मोघ ज्ञाना विचेतसः राक्षसीम् मोहिनॆम्  ।  (अध्याय ९ - श्लोक १२)
மோகா மோக கர்மாணோ மோக க்ஞானா விசேதஸஹ ராக்ஷஸீம் மோஹினீம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 12)
Moghaashaa Mogha Karmaano Mogha Gyaanaa Vichetasah Raakshaseem Mohineem ...  (Chapter 9 - Shloka 12)

அர்தம் :  மோக என்றால் வெற்று .  வீணான ..  (அமோக என்ற வார்தை தமிழகத்தில் உபயோகத்தில் உள்ளது .  அமோக என்றால் மிகச் சிறந்த , மிகப் பயனுள்ள ...)  மோக ஆஶா என்றால் ...  வெற்று நம்பிக்கை .  மோக க்ஞானம் என்றால் வெற்று க்ஞானம் .  மோக கர்ம என்றால் வீணான முயற்சிகள் .  இவை மோஹத்தைத் தோற்றுவித்து , புத்தியைக் குழப்ப வைத்து , ராக்ஷஸத் தன்மையைத் தூண்டி விட்டு , மநுஷ்யனை தாமஸனாக்கக் கூடியவை .

மூடன் யார் ?  அவஶ்யமானதை காரியத்தைச் செய்யாதவன் மூடன் .  உபயோகமான க்ஞானத்தை ஏற்காதவன் மூடன் .  அர்தமுள்ள நம்பிக்கைகளை வைத்திடாதவன் மூடன் .  அதற்கு மேல் , வெற்று க்ஞானத்தைப் பெறுபவன் , வெற்று நம்பிக்கைகளை போஷிப்பவன் , அர்தமற்ற கார்யங்களைச் செய்பவன் ...  மஹா மூடன் .  மூடன் மாத்ரம் இல்லை .  புத்தி ப்ரஷ்டன் .  குழப்பத்தில் ஆழ்ந்திருப்பவன் .  தாமஸன் .  ராக்ஷஸன் .  அப்பப்பா !!  ஸ்ரீ க்ருஷ்ணனின் கடுமையான வார்தைகள் .

நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம் என்கிறார்கள் .  எனில் மோக ஆஶைகள் எவை ?  அர்தம் அற்ற , வெற்று நம்பிக்கைகள் எவை ?  வீட்டு வாஸலில் ஒரு கல்லைத் தொங்க விட்டால் கேடு வராது .  கையில் ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டால் , எல்லாம் நல்லபடி நடந்திடும் .  ஸ்ரீ க்ருஷ்ணன் குறிப்பிடுவது இத்தகைய மூட நம்பிக்கைகளை , என்று கருதி , மூடன் என்று அவர் குறிப்பிடுவது என்னை அல்ல என்று நினைப்பது தன்னையே ஏமாற்றிக் கொள்ளுதல் .  நம்மிடம் 'இத்தகைய மூட நம்பிக்கைகள் இல்லை .  ஸரி .  ஆனால் , நம் நம்பிக்கைகள் எவ்வாறு உள்ளன ?  இன்று நன்றாக நடந்தது போலவே நாளையும் நடந்திடும் .  இன்று கிடைத்த மோசமான அநுபவங்கள் இனி .கிடைத்திடாது   பிறருக்கு ஏற்பட்ட அநுபவம் எனக்கு ஏற்படாது .  பிறர் செய்த தவறுகள் என்னால் நிகழாது .  என் தவறுகள் கண்ணில் படாமல் இருந்து அல்லது மன்னிக்கப் பட்டு , எனக்கு நல்ல ஃபலன் கிடைத்திடும் .  என் திட்டம் மிகச் சரியானது .  அதன் படியே நடந்திடும் .  என் முயற்சிகள் நிஶ்சயம் நான் எதிர்ப்பார்த்த ஃபலன்களையே கொடுத்திடும் .  நான் மோஹ வலையில் வீழ்ந்திட மாட்டேன் .  நான் அன்றாடம் தேஹப் பயிற்சி செய்பவன் .  எனக்கு நோயெதுவும் வராது .  நான் பூர்ண ஆயு வாழ்ந்திடுவேன் .  போன்றவை .  இவை ஒவ்வொன்றும் மோக ஆஶைகளே .  மோஹத்தில் ஆழ்த்த வல்லவை .

க்ஞானம் புனிதமானது .  க்ஞானத்தைப் பெறுதலே வாழ்க்கையில் ப்ரதான கார்யம் .  ஸத்யம் .  ஆனால் , க்ஞானம் என்ற பெயரில் குப்பை கூளங்களை மூளையில் நிரப்பிக் கொண்டு தன்னை க்ஞானி என்று சொல்லிக் கொண்டால் ??  உலகத்தில் அன்றாட சோற்றை ஸம்பாதித்திட , துள்ளிக் குதித்தல் , உருளுதல் ,கரணம் அடித்தல் போன்ற நான்கைந்து விஷயத்தைக் கற்றுக் கொண்டால் குரங்கிற்குப் போதும் .  ஆனால் , அது க்ஞானம் இல்லை .  இன்று கல்வி என்ற பெயரில் அளிக்கப் படுவது இத்தகையதே .  அதே போல , ஆயிரக்கணக்கில் வெற்று விவரங்களை மனப்பாடம் செய்து வைத்தலும் க்ஞானம் இல்லை .  இவை நமக்கு சில பரிஸு பாராட்டுக்களை கொடுக்கலாம் .  நமக்கு வழி காட்டும் வகையில் நம்முள் ஒளி ஏற்றாது .

மோக கர்மம் எவை ?  நிழலைப் பிடிக்க முயற்சி , நாயின் வாலை நேராக்க முயற்சி ..  ஈ அல்லது கொசுவைத் துரத்தி துரத்தி அடிப்பது ... போன்ற செயல்கள் வெற்றானவை என்பது வெளிப்படை .  ஆனால் நம்மில் பெரும்பாலோர் ஈடுபட்டிருக்கும் பல செயல்கள் வெற்றானவையே .  அர்தம் அற்றவையே .  நாய் ஒரு எலும்பைச் கடித்துக் கொண்டிருக்கும் .  அது காய்ந்து போன எலும்பு .  அது நாயின் வாயில் குத்தி , காயம் ஏற்படுத்தும் .  நாய் தன் ரக்தத்தையே சுவைத்து , எலும்பின் சுவை என்று கருதிடும் .  எலும்பை விடாமல் கடித்திடும் .  நமது பல செயல்கள் இதே போன்றவை .  அறியாமையில் தோய்ந்தவை .  வாழ்வதற்காக செல்வம் வேண்டும் .  அதை ஈட்டிட செய்யப்படும் கர்மங்களில் அர்தம் உண்டு .  செல்வம் , அதிக செல்வம் , மிக அதிக செல்வம் ... அளவற்ற செல்வம் குவித்திட செய்யப் படும் முயற்சிகள் ...  "நான் யார் ?" என்று அறிந்திட செய்யப் படும் முயற்சிகள் அமோகம் .  விவேகம் கூடியவை .  "நான் யார் !!" என்று காட்டிட செய்யப் படும் முயற்சிகள் வெற்றானவை .  அநுதினமும் தேஹப் பயிற்சிகள் செய்தல் விவேகம் .  ஶரீரம் ரோகம் இல்லாமல் இருந்திட வேண்டும் என்ற பயத்தில் செய்யப் படும் முயற்சிகள் வெற்று .  ஶரீரத்தில் ரோகம் ஏற்பட்டு விட்டால் ...  பல்துறை டாக்டர்கள் பின்னால் அலைந்து , மற்ற பலரும் கூறிடும் யோஜனைகளை பின்பற்ற முயன்று , கோவில் கோவிலாக திரிந்து , ரோகத்தில் இருந்து முக்தி பெற்றிட செய்யப் படும் முயற்சிகள் வெற்று .  தவறான முயற்சிகள் செய்து விட்டு ஸரியான ஃபலன் கிடைக்க முயலுதல் , அஸத்யத்தைப் பற்றி விட்டு , தீய ஃபலன் தவிர்த்திட முயலுதல் , விஷ விதையை ஊன்றி விட்டு இனிய பழம் வேண்டும் என்று பிரார்தனை செய்தல் ..  இவை எல்லாம் வெற்று முயற்சிகள் ...

இது உபயோகமானதா ?  இது என்னை உயர்த்திடுமா ?  இது எனக்கு அவஶ்யமானதா ?  இந்தக் கேள்விகள் கேட்டு நம் நம்பிக்கைகளை , க்ஞானத்தை மற்றும் கர்மத்தை உரஸிப் பார்க்க வேண்டும் .  ஆம் என்று பதில் வருபவற்றை மாத்ரம் ஏற்று ... அமோக வாழ்க்கை , அர்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...