Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 99


கீதையில் சில சொற்றொடர்கள் - 99


सदसच्चाहम्  ।  (अध्याय ९ - श्लोक १९)
ஸதஸச்சாஹம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 19)
Sadasachchaaham  ...  (Chapter 9 - Shloka 19)

அர்தம் :  ஸத் , அஸத் ரெண்டும் நான் .

வேதங்களில் நாம் மநுஷ்யர்கள் (ர்ஷீகள்) ஸ்ரீ பரமனைப் பற்றி  விவரிக்கிறோம் .  கீதையில் அவனே தன்னை விவரிக்கிறான் .  அவனைப் பற்றி நம் மனஸில் (அர்ஜுனன் மனஸில்) எழக் கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறான் .

மனைவி ஸமைத்து போஜனம் .அளிக்கிறாள்   மிகவும் ஸ்வாதிஷ்டமாக ஸமைப்பவள் , ஒரு நாள் , உப்பில்லாமல் அல்லது சூடு குறைவாக ஸமைத்து விடுகிறாள் .  கோபமும் சண்டையும் அவ்ஶ்யமா ?  ஸ்வாதிஷ்டமாக ஸமைத்தவளும் அவளே .  இன்று மாறிய ருசியுடன் ஸமைத்திருப்பவளும் அவளே .

ஒரு ரோஜாச் செடி அநுதினமும் அழகான , மணமான ரோஜா புஷ்பங்களைக் கொடுக்கிறது .  நாமும் அதைப் பறித்து , ஸ்ரீ பகவானின் பாதங்களில் ஸமர்பித்து , ஆனந்தம் அடைகிறோம் .  ஒரு தினம் ரோஜாவைப் பறித்திடும் போது , ஒரு முள் குத்தி விடுகிறது .  செடியிடம் கோபப் படலாமா ?  ஸுகந்தமான , ஸுந்தரமான புஷ்பத்தைக் கொடுப்பதும் அதே செடி .  முள்ளைக் கொடுப்பதும் அதே செடி .

ஒரு பதவியில் அமர்ந்திருக்கும் போது , கிடைக்கக் கூடிய பாராட்டுக்களும் , சலுகைகளும் , மர்யாதைகளும் , வரவேற்புகளும் மனஸிற்கு ஹிதம் அளிப்பவை .  வயஸு ஆனதாலோ , சட்டம் மாறியதாலோ , கருத்து வேறுபாட்டினாலோ , அரஸியல் சூழ்நிலை மாறியதாலோ , அந்த பதவி பறிக்கப் படும்போது கிடைக்கக் கூடிய அபமானங்களும் அலக்ஷ்யங்களும் வசை மொழிகளும் மனஸிற்கு நெருடலானவை .  ஒரே பதவியால்தான் ரெண்டும் விளைந்தன என்பதுதானே ஸத்யம் ?

க்ளாஷியஸ் க்ளே என்ற குத்துச் சண்டை வீரன் கூறியதைக் கேளுங்கள் .  "பயிற்சிக் கூடத்தில் அழுபவன் பந்தய மேடையில் சிரிக்கிறான் .  அங்கு அழ விரும்பாதவன் , சிரித்த படி இருக்க விரும்புபவன் , பந்தய மேடையில் அழுகிறான் .  அழுகையும் , சிரிப்பும் ஒரே குத்துச்சண்டையில் விளைபவையே .

ப்ரஶ்னை மனைவியிலோ , ரோஜாச் செடியிலோ , பதவியிலோ , குத்துச் சண்டையிலோ இல்லை .  ஸம்பந்தப் பட்ட மநுஷ்யனிடம் உள்ளது .  இவனுக்கு ஸ்வாதிஷ்டமானதே வேண்டும் .  அழகான , ஸுகந்தம் நிறைந்த புஷ்பம் மாத்ரமே வேண்டும் .  பாராட்டுக்களும் பரிஸுகளும் வேண்டும் .  சிரிப்பு மாத்ரமே வேண்டும் .  அனுகூலமானவை , ஹிதமானவை , ஸுகமானவை மாத்ரம் வேண்டும் .  எதிர்மறையானவை வேண்டாம் .  ப்ரதிகூலமானவை வேண்டாம் .  கசப்பானவை வேண்டாம் .  ரெண்டையும் அளிப்பது ஒன்றே என்பதை நாம் அறிவதில்லை .  அறிய மறுக்கிறோம் .  மீறி அறிய வைக்கப் படும் போது அதிர்ச்சியாக இருக்கிறது .

ஸ்ருஷ்டி அவன் ஸமைத்தது .  அதில் உள்ள அனைத்தும் அவன் கைவண்ணம் .  அவன் திட்டத்தில் உருவானவை .  ஸ்ருஷ்டியில் தென்றலும் அவனே .  புயலும் அவனே .  தூறலும் அவனே .  பெருவெள்ளமும் அவனே .  ஹிதமான , ரம்யமான விடியற் காலை வானமும் அவனே .  கொளுத்திடும் மத்யாஹன வானமும் அவனே .  சோலையும் அவனே .  பாலையும் அவனே .  அட்டஹாஸமான ஸுநாமியும் அவனே .  மந்தஹாஸமான அமைதியான அலைகளுடன் கூடிய ஸமுத்ரமும் அவனே .  மலரும் அவனே . முள்ளும் அவனே .  ஜன்மமும் அவனே .  மரணமும் அவனே .  பூத்துக் குலுங்கும் வஸந்தமும் அவனே .  காய்ந்து கிடக்கும் வறட்சியும் அவனே .  அவன் படைப்பு .  அதில் உள்ள எல்லாம் அவனே .

ப்ரஶ்னை அதுவல்ல .  நாம்தான் ப்ரஶ்னை .  நமக்கு ஒன்று வேண்டும் .  மற்றொன்று வேண்டாம் .  நாம் அவனது படைப்பிற்கு மார்க் போட்டு , அநுகூலமானவை - ப்ரதிகூலமானவை , இனிப்பு - கசப்பு , ஹிதமானவை - முரடானவை , பிடித்தவை - பிடிக்காதவை என்று பாகு படுத்தி உள்ளோம் .  முதல் வகைகளைப் படைத்தவன் எவ்வாறு ரெண்டாம் வகைகளைப் படைத்திருக்க முடியும் என்று கேட்கிறோம் .  ரெண்டும் ஒரே 'ஒருவனுடைய' படைப்பு என்று நம்ப மறுக்கிறோம் .  க்றிஸ்தவமும் இஸ்லாமும் இந்த ரெண்டு வகைகளின் படைப்பிற்கு வெவ்வேறு ஶக்திகளை நியமித்தே விட்டன .  முதல் வகைகளைப் படைத்தவன் கடவுளாம் .  ரெண்டாம் வகைகளைப் படைத்தவன் ஶைதானாம் .

இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் , "இல்லை .  இல்லை .  ரெண்டும் என் படைப்பே .  ரெண்டும் நானே" என்கிறான் .  ஸத்தும் நானே .  அஸத்தும் நானே .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...