Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 104


கீதையில் சில சொற்றொடர்கள் - 104


पत्रं पुष्पं फलं तोयम् यो मे भक्त्या प्रयच्छति यो मे भक्त्या प्रयच्छति ... तदहं भक्त्युपह्रुतम् अश्नामि प्रयतात्मनः ...  (अध्याय ९ - श्लोक २५)
பத்ரம் புஷ்பம் ஃபலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி .. ததஹம் பாக்த்யுபஹ்ருதம் .. அஶ்நாமி ப்ரயதாத்மனஹ ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 25)
Patram Pushpam Phalam Toyam Yo Me Bhaktyaa Prayachchati ... Tadaham Bhaktyupahrutham Ashnaami Prayaataatmanah  ...  (Chapter 9 - Shlokam 26)

அர்தம் :  ஒரு இலை , ஒரு புஷ்பம் , ஒரு பழம் அல்லது ஒரு துளி ஜலம் என்று எனது பக்தன் எதை அளித்தாலும் ...  பக்தி நிறைந்த தூய மனஸை ஏற்கிறேன் ...  (தூய மனஸினால் அளிக்கப் படுவதை ஏற்கிறேன் .. என்றும் அர்தம் கொள்ளலாம் ..)

பக்தியின் வழிமுறை ..  ஸ்ரீ பகவான் தன் வாயால் சொல்லிடும் வழிமுறை ...

எல்லாவற்றிலும் புறம் உண்டு அகம் உண்டு .  தின்பண்டங்களின் புறம் அவற்றின் வடிவமும் நிறமும் .  ருசி , ஆரோக்யத்தின் மீது தாக்கம் அவற்றின் அகம் .  வஸ்துக்களின் தோற்றம் அவற்றின் புறம் .  உபயோகம் அவற்றின் அகம் .  பேசப்படும் வார்தைக்கு ஶப்தமே புறம் .  அதன் அர்தம் தான் அகம் .  கார்யங்களுக்கு அவற்றின் நோக்கமே அகம் .

நாம் ஸாதாரண மநுஷ்யர்கள் புறத்தை மாத்ரம் பார்ப்பவர்கள் .  அகத்தைப் பார்த்திடும் ஆற்றல் நமக்குக் கிடையாது .  புறத்தைக் கண்டு மதிப்பிடுகிறோம் .  புறம் அநுகூலமாக இருந்தால் அதிக மதிப்பெண்கள் .  புறம் ப்ரதிகூலமாக இருந்தால் , நம் மனஸிற்கு ஹிதமாக இல்லை என்றால் குறைவான மதிப்பெண்கள் ..  மநுஷ்யர்களை ஆடையை வைத்து மதிப்பிடுகிறோம் .  அவர்களிடம் உள்ள வீடு , வாஹனம் போன்றவற்றை வைத்து மதிப்பிடுகிறோம் .  அதனால் , பெரும்பாலான மநுஷ்யர்கள் வெளி ஆடை அலங்காரத்திற்கும் ஆடம்பரத்திற்கும் அளித்திடும் மஹத்வத்தை அகத்தின் பூஷணங்களான குணங்களுக்கு அளிப்பதில்லை .  கவர்ச்சியான புறத் தோற்றத்தையும் விளம்பரங்களையும் வைத்து பொருட்கள் மற்றும் ஸேவைகளை அதிக விலைக் கொடுத்து வாங்குபவர்கள் நம்மில் அநேகர் .  ஸமூஹ , அரஸியல் அமைப்புகளில் , ஏன் குடும்பங்களிலும் கூட புற விஷயங்களே உறவுகளை த்ருடப் படுத்துவதால் , உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுதல் , டம்பம் , நடிப்பு , பொய் , ஆகியவை ஸஹஜமாகி விட்டன .

நமக்கு அகத்தைக் காணும் ஆற்றல் இல்லை .  காணும் விருப்பமும் இல்லை .  ஸ்ரீ க்ருஷ்ணன் அகத்தை மாத்ரம் காண விரும்புகிறான் .  அகத்திற்கு மாத்ரம் மதிப்பளிக்க விழைகிறான் .  அகத்தில் உள்ளதை மாத்ரம் ஏற்க விரும்புகிறான் .  புற அலங்காரங்களை வைத்து , அலங்கார மதுர மொழியை வைத்து அவனை ஏமாற்ற முடியாது .  "நீ அளிப்பது எதுவாக இருந்தாலும் ... ஒரு இலையோ , ஒரு புஷ்பமோ , ஒரு பழமோ அல்லது ஒரு சொட்டு ஜலமோ , அளித்திடும் உன் மனஸை , அதில் நிலவிடும் பக்தியை , தூய்மையை ஏற்கிறேன் .  அதை வைத்து , நீ அளிப்பவற்றை ஏற்கிறேன்" என்கிறான் .

த்ரௌபதி , யானை கஜேந்த்ரன் , ஶபரீ மற்றும் விதுரன் ஆகிய நால்வர் ஸ்ரீ பரமனுக்கு முறையே பத்ரம் , புஷ்பம் , பழம் , நீர் இவற்றை அளித்து ஸ்ரீ பரமனின் பூர்ண அருளைப் பெற்றவர்கள் .  த்ரௌபதி ஒரு துண்டு கீரையை , அதுவும் சாப்பிட்டு முடித்து , அலம்பி வைத்த பாத்ரத்தில் ஒட்டி இருந்த துண்டுக்கீரையை , ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு அளித்தாள் .  ஸ்ரீ கஜேந்த்ரன் என்ற யானை ஒரே ஒரு தாமரை புஷ்பத்தை ஸ்ரீமன் நாராயணனுக்கு அளித்தது .  ஶபரீ பழத்தை , அதிலும் தான் கடித்துப் பார்த்த எச்சில் பழத்தை ஸ்ரீ ராமனுக்கு அளித்தாள் .  அரண்மனையில் வாழும் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு , அரண்மனை விருந்தை புறக்கணித்து விட்டு வந்த ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு , ஸ்ரீ விதுரன் தன் குடிசையில் இருந்த கூழை அளித்தார் .  இவர்கள் அளித்த விஷயங்கள் காரணமாக இவர்களுக்கு ஸ்ரீ க்ருஷ்ணன் அளித்த அருளில் குறை வைக்கவில்லை .  அளித்தவர்களும் தான் அளித்தவற்றின் மதிப்பை கருதவில்லை .  ஏற்றவனும் அவற்றின் மதிப்பைக் கணக்கிடவில்லை .  ஆனந்தமாகக் கொடுத்தனர் .  அவனும் ஆனந்தமாக ஏற்றான் .  கொடுக்கும் விஷயங்கள் அல்ல , கொடுத்திடும் மனஸ் , அதில் உள்ள பாவனை தான் மஹத்வமானது .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...