Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 106


கீதையில் சில சொற்றொடர்கள் - 106


अपि चेद्सुदुराचारो भजते मामनान्य भाक् ।  साधुरेव स मन्तव्यः सम्यग् व्यवसितो हि स: ।  (अध्याय ९ - श्लोक ३०)
அபி சேத் ஸுதுராசாரோ பஜதே மாம் அநந்ய பாக் ..  ஸாதுரேவ ஸ மந்தவ்யஹ ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸஹ  ..  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 30)
Api Ched Suduraachaaro Bhajate Maam AnanyaBhaak .. Saadhureva Sa Mantavyah SamyagVyavasitho Hi Sah  ..  (Chapter 9 - Shlokam 30)

அர்தம் :  மிக மோஸமான துராசாரியும் அநந்ய பாவத்துடன் என்னை பஜிக்கத் தொடங்கினால் , ஸாது என்றே அறியப்படுவான் .  ஏனென்றால் அவனது நிஶ்சயம் த்ருடமானது .

ஸ்ரீ க்ருஷ்ணனின் அத்புதமான வாக்குறுதி இது .  ஹிந்து தர்மத்தின் விஶேஷ முத்ரை வாக்யம் இது .  மற்ற மதங்களில் பாபிகளுக்கு நிரந்தர நரகமே .  மறு வாய்ப்பே கிடையாது .  (அம்மதங்களில் பாபி என்ற சொல்லின் விளக்கமும் நகைப்புக்கு உரியதே .  பாபி என்பவன் ஸ்ரீ பரமனது படைப்பிற்கு எதிராக குற்றங்கள் புரிபவன் அல்ல .  மாறாக யேஶு அல்லது அல்லாவை ஏற்காதவர்கள் பாபிகளாம் .  சர்ச்சுக்கும் மஸூதிக்கும் வராதவர்கள் பாபிகளாம் .)  ஹிந்து தர்மத்தில் முடிவுறா வாய்ப்புகள் .  பாபிக்கு , மஹாபாபிக்கு , ஏன் ! துஷ்ட துராசாரிக்கும் எல்லையற்ற வாய்ப்புகள் உண்டு .

ஸ்ரீ பரமனைத் தம் வாழ்க்கையின் கேந்த்ரம் ஆக்க வேண்டும் .  அவனை நோக்கித் திரும்ப வேண்டும் .  பல நிலைகள் உள்ளன .  அவனை மறந்து உலகத்தை மாத்ரம் பார்த்தல் என்பது அடிமட்ட நிலை .  உலகத்தைப் பார்ப்பது மற்றும் அவனை நினைப்பது .  ஸ்ரீ பரமனது திஶையில் இது முதல் நிலை .  அவன் மூலம் உலகத்தைப் பார்ப்பது என்பது அடுத்த நிலை .  இந்நிலை அடைந்து விட்டால் , உலகத்தையே அவனாகப் பார்த்தல் என்ற அடுத்த நிலை ஸுலபமாகி விடும் .  உலகம் மறைந்து , அவன் மாத்ரமே தெரிதல் என்பது மோக்ஷ நிலை .

துராசாரியும் ஸாது ஆகி விடுவான் என்கிறாரே !!!  அடுத்த ஶ்லோகத்தில் தத்க்ஷணமே மஹாத்மா ஆகி விடுவான் என்கிறார் .  அதெப்படி ?  இது ஸாத்யமா ?  நிஶ்சயம் த்ருடமானது என்பதால் இது ஸாத்யமே !!  ஸிகரெட் , ஸாராயம் போன்ற பழக்கங்களில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் .  ஆனால் , மனஸ் பலஹீனமாக இருப்பதால் , நிஶ்சயம் த்ருடமாக இல்லாததால் , "கொஞ்ஜம் கொஞ்ஜமாகக் குறைத்து , ஒரு ஸில நாட்களில் விட்டு விடலாம்" என்று யோஜிப்பர் .  பெரும்பாலும் இவர்களால் அப்பழக்கத்தில் இருந்து வெளியேற முடியாது .  மாறாக , த்ருட நிஶ்சயம் உள்ள நபர் , அப்பழக்கத்தை தத் க்ஷணம் உதறித் தள்ளி விடுவார் .  ஸந்ந்யாஸீயாக வேண்டும் என்று நினைத்து , திட்டம் இட்டு , பயிற்சிகள் எடுத்துக் கொள்பவர் பெரும்பாலும் ஸந்ந்யாஸீ ஆவதில்லை .  த்ருட நிஶ்சயம் கொண்டவர் மனஸில் தத் க்ஷணம் வைராக்யம் உதித்து , வீட்டை விட்டு வெளியேறி விடுவார் .

"துராசாரி அல்லது மோஸமான நடவடிக்கைகள் கொண்டவன் என்னை அநந்ய பாவத்துடன் பஜித்தால் , நல்லவன் ஆகி விடுவான்" , என்று ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்லவில்லை .  ஸாது ஆகி விடுவான் .  மஹாத்மா ஆகி விடுவான் என்கிறார் .  ஒரு பாழடைந்த பங்களா நூறு வர்ஷங்களாக இருட்டில் மூழ்கி இருக்கிறது .  அதில் ஒளி ஏற்றிட நீண்ட காலமும் , அரும் பெரும் முயற்சிகளும் அவஶ்யமா ?  அவஶ்யம் இல்லை .  ஒரே ஒரு க்ஷணமும் ஒரே ஒரு விளக்கும் போதும் .  ஒளி ஏற்ற வேண்டும் என்ற நிஶ்சயம் த்ருடமானதாய் இருக்க வேண்டும் .  அவ்வளவுதான் .  இவ்விஷயத்தில் ஸ்ரீ வால்மீகி ஜ்வலிக்கும் ஒரு உதாஹரணம் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...