Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 107


கீதையில் சில சொற்றொடர்கள் - 107


अनित्यम् असुखम् लोकम्  ...  (अध्याय ९ - श्लोक ३४)
அநித்யம் அஸுகம் லோகம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 34)
Anithyam Asukham Lokam  ...  (Chapter 9 - Shlokam 33)

அர்தம் :  இந்த உலகம் நித்யம் இல்லாதது .  ஸுகம் அற்றது .

கீதையில் மீண்டும் மீண்டும் சொல்லப் பட்டிருக்கும் ஸில கருத்துக்களில் இதுவும் ஒன்று .  இந்த ஜகத் நித்யம் அற்றது ,  ஸுகம் அற்றது .  மீண்டும் மீண்டும் சொல்லப் பட வேண்டிய அவஶ்யம் என்ன ?  ரெண்டு காரணங்கள் .  இது ஒரு ஸம்வாதம் என்பது ஒன்று .  அர்ஜுனனுக்கும் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும் இடையில் நடந்த ஸம்வாதம் .  திட்டம் இடப்பட்டு , கோர்வையாக தயார் செய்யப் பட்ட உரை இல்லை .  ஸம்வாதத்தில் கேள்வி கேட்பவரின் கேள்விகளுக்கு ஏற்ப , மன நிலைக்கு ஏற்ப பேச வேண்டியது அவஶ்யம் .  எனவே , அதே விஷயம் மீண்டும் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது .  அர்ஜுனன் ஒரு நரன் , நம்மைப் போன்ற ஒரு ஸாதாரண மநுஷ்யன் என்பது ரெண்டாவது காரணம் .  மாட்டிற்கு ஒரு சூடு , மநுஷ்யனுக்கு ஒரு சொல் என்று ஒரு பழமொழி உண்டு .  ஆனால் , அது மிகச் சிலருக்கே பொருந்தக் கூடியது .  அர்ஜுனன் விதி விலக்கல்ல .  (நேர்மாறாக , க்ஷணச் சித்தம் , ஶ்மஸான வைராக்யம் போன்ற வார்தைகளும் உண்டல்லவா !!)

அர்ஜுனன் ஒரு ஸாதாரண மநுஷ்யனே .  (நம்மிடம் உள்ள ஒரு குறை இங்கு வெளிப்படுகிறது .  ஒரு துறையில் மிக விஶேஷமான ஆற்றல் கொண்டவர்களை நாம் மிக உயர்வாக , ஒரு அஸாதாரண மநுஷ்யனாகக் கருதி விடுகிறோம் .  ஒரு சிறந்த நடிகன் , சிறந்த பேச்சாளன் அல்லது எழுத்தாளன் அந்தந்தத் துறையில் மாத்ரமே நிபுணன் .  வாழ்க்கையின் மற்ற துறைகளில் , கண்ணோட்டங்களில் அவன் ஒரு மிக ஸாதாரண மநுஷ்யனாகவே இருந்திடுவான் .)  பதினெட்டு அத்யாய கீதை சொல்லி முடித்த பிறகும் , "நான் நிலையானேன் , மோஹம் அழிந்து என் நினைவு திரும்பியது , நீ சொன்ன படி நான் செய்கிறேன்" என்று அர்ஜுனன் சொன்ன பிறகும் பதினோரு நாட்கள் யுத்தம் நடந்த பின் , அபிமன்யூ கொல்லப்பட்ட நாளில் , அர்ஜுனன் 'தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று புலம்பவில்லையா ?  குருக்ஷேத்ர யுத்தம் முடிந்த பிறகு , ராஜ்ய ஸபையில் பஞ்ச பாண்டவர்கள் அமர்ந்திருக்கும் போது , அர்ஜுனன் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் , "க்ருஷ்ணா , அன்று யுத்தத்தில் நான் ஒரு விஶேஷ மன நிலையில் இருந்தேன் .  அதனால் , நீ சொன்ன கீதை எனக்கு முழுமையாகப் புரியவில்லை .  இங்கு , நாம் அனைவரும் அமைதியான மன நிலையுடன் அமர்ந்திருக்கும் போது , மீண்டும் ஒரு முறை கீதையைச் சொல்வாயா ?" என்று கேட்டான் அல்லவா ?

ஒரு வார்தையை ஒரே ஒரு முறை சொல்லி விட்டால் , அதன் முழுமையான அர்தம் புரிந்து விடும் என்பது ஸாதாரண மநுஷ்யர்களுக்கு ஸாத்யம் இல்லை .  அதே கருத்தை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய அவஶ்யம் இருக்கிறது .  மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் .  மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும் .நம் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்தில் , வெவ்வேறு வயஸில் படிக்கப் படும் அதே கருத்து , வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு பரிமாணங்களில் புரிந்து கொள்ளப் படுகிறது .

உலகம் பொய் என்று சொல்லவில்லை ஹிந்து தர்மம் .  உலகத்தை மறுக்கச் சொல்லவில்லை ஹிந்து தர்மம் .  உலகத்தை மித்யா என்கிறது .  மாயை என்கிறது .  அதாவது , இல்லாதது இருப்பது போலத் தோன்றும் .  நித்யம் அற்றது , நிரந்தரம் போலத் தோன்றும் .  ஸுகமானது போலத் தோன்றும் .  து:கமும் கலந்தே வரும் .  அதில் மயங்கி விடாதே என்கிறது ஹிந்து தர்மம் .  வாழ்க்கையின் அறியாமை கலந்த குழந்தைப் பர்வம் , இயலாமை கலந்த வயோதிகப் பர்வம் , நோய்க்காலம் ஆகியவை மொத்த வாழ்நாளில் பெரும் இழப்புதான் என்றாலும் , தவிர்க்க முடியாத இழப்பு .  எஞ்ஜுவது மிக அல்ப காலமான யௌவனப் பர்வம் மாத்ரமே .  இது செயல் துடிப்புள்ள பர்வம் .  உத்ஸாஹம் நிறைந்த பர்வம் .  மோஹம் என்னும் வலையில் சிக்கி , நிரந்தரம் இல்லாத உலக ஸுகங்களின் பின்னால் ஓடி , விலைமதிப்பிட முடியாத இந்த யௌவனத்தை , மீண்டும் பெற முடியாத இந்த யௌவனப் பர்வத்தையும் இழந்து விடாதே என்று எச்சரிக்கிறது ஹிந்து தர்மம் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...