Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 108



கீதையில் சில சொற்றொடர்கள் - 108


मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु  ...  (अध्याय ९ - श्लोक ३४)
மன்மனா பவ மத் பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 34)
Manmanaa Bhava MadBhakto Madyaajee Maam Namaskuru  ...  (Chapter 9 - Shlokam 34)

அர்தம் :  மனஸை என்னில் வைத்திடு .  என்னிடம் பக்தியைச் செலுத்திடு .  எனக்காக யக்ஞம் செய்திடு .  என்னை நமஸ்கரித்திடு .

இது ஒரு Formula சொற்றொடர் .  பரமனை கேந்த்ரமாக வைத்து வாழ்வதற்கான Formula .  மனஸை என்னில் லயிக்க வைத்திடு .  பக்தியை என்னில் செலுத்திடு .  எனக்காக யக்ஞங்களைச் செய்திடு .  என்னை நமஸ்கரித்திடு .

மனஸை ஸ்ரீ பரமனது பாவனையால் நிறைத்திடு .  அத்தகைய மனஸ் லோகாயத கார்யங்களில் ஈடுபட்டிருக்கும் போதும் , அவனையே கேந்த்ரமாகக் கொண்டிருக்கும் .  உலகக் கவர்ச்சிகளில் மூழ்கி விடாது .  ஸ்வயமும் ஆனந்தத்தில் திளைத்திருந்து , ஸுற்றி உள்ளோருக்கு ஆனந்தத்தின் ஊற்றாக இருந்திடும் .

ஸ்ரீ பரமன் மீதே பக்தி கொண்டிடு .  Devotion only to God .  பக்திக்கான ஒரே திஶை ஸ்ரீ பரமாத்மனே .  பொதுவாக உலக வாழ்க்கையில் இருப்பவரின் விஶ்வாஸம் , பக்தி , நம்பிக்கை பல திஶைகளில் சிதறியதாக இருக்கிறது .  பாதுகாப்பு அளித்திடும் ராஜா மற்றும் ராஜ்ய அதிகாரிகள் , பண வரவிற்குக் காரணமான யஜமான் , ஶரீரத்தின் உபாதைகளைத் தீர்த்து வைக்க முயன்றிடும் வைத்யர் , மனஸை ஸந்தோஷப் படுத்திடும் நடிகன் , ஸங்கீதக் கலைஞன் அல்லது மற்ற துறைக் கலைஞன் போன்ற பலர் நம் பக்திக்கு பாத்ரம் ஆகிறார்கள் .  உலகத்தை ப்ரதானமாகக் கருதி வாழ்பவனின் நிலை இது .  ஸ்ரீ பரமனைக் கேந்த்ரமாகக் கொண்டவனின் பக்தி ஒரு முகமாக இருக்கிறது .  அவனால்  தேஶத்து ராஜாவையும் , தன்னுடைய யஜமானனையும் , வைத்யரையும் , நடிகனையும் ஸ்ரீ பரமானது ரூபமாகவே பார்க்க இயலுகிறது .  அவனது உலக வாழ்க்கை பாதிக்கப் படுவதில்லை .  அதே ஸமயம் அவன் உலகத்தில் சிக்கி , மூழ்குவதும் இல்லை .

லௌகீக ஸுகங்களையும் வஸதிகளையும் பெறுவதற்காக , முயற்சிகளையும் த்யாகங்களையும் யக்ஞங்களையும் செய்வோருக்குப் பஞ்ஜம் இல்லை .  'இவற்றை எனக்காகச் செய்திடு' என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .  இத்தகையவன் வெளிப்படையாக லௌகீக விஷயங்களில் ஈடுபட்டிருப்பது போலத் தோன்றினாலும் , அவன் ஸ்ரீ பரமனில் மூழ்கி இருக்கிறான் என்பது தான் உண்மை .

"என்னை நமஸ்கரித்திடு" என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .  "நாமார்க்கும் குடியல்லோம்" என்ற நிலை இது .  "வாடா காலா !  உன்னை காலால் எட்டி உதைக்கிறேன் என்று பாரதி சொன்ன நிலை இது .  நமஸ்காரம் அவனுக்கு மாத்ரமே .  பணிதல் அவன் தாளில் மாத்ரமே .  வேறு எந்த ஶக்தியும் பயமுறுத்திப் பணிய வைக்க முடியாது .  இத்தகைய ஸாதுக்களை கொடூர இஸ்லாமிய ராஜ்யத்தாலும் பணிய வைக்க முடியவில்லை .

மன்மனா பவ மத்பக்தஹ ...  மத்யாஜீ  மாம் நமஸ்குரு ...   அவனன்றி வேறொன்றும் இல்லை .  அவன் மாத்ரமே ...

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...