Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 113


கீதையில் சில சொற்றொடர்கள் - 113


भूयः कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मेSमृतम्   ... (अध्याय १० - श्लोकम १८)
பூயஹ கதய த்ருப்திர்ஹி ஶ்ருண்வதோ நாஸ்தி மே(அ)ம்ருதம்  ... (அத்யாயம் 10 - ஶ்லோகம் 18)
Bhooyah Kathaya Truptirhi Shrunvato Naasti Me(a)mrutam  ... (Chapter 10 - Shlokam 18)

அர்தம் :  அம்ருதத்திற்கு ஒப்பான உங்கள் வார்தைகளைக் கேட்டு எனக்கு த்ருப்தி ஏற்படுவதில்லை ...

பேசுபவர் மற்றும் கேட்பவர் மத்தியில் நிலவிடும் ஸம்பந்தமே பேசுபவரின் வார்தைகளை மதுரமானதாக்கும் .  அம்ருதத்திற்கு ஒப்பானதாக்கும் .  கேட்பவர் மனஸில் பேசுபவர் பற்றி எல்லையற்ற ப்ரீதி இருக்க வேண்டும் .  இங்கு அர்ஜுனன் மனஸில் ஸ்ரீ க்ருஷ்ணனைப் பற்றிய பாவனை தூய அன்பும் ஸ்நேஹமும் கலந்தது .  ஸ்ரீ க்ருஷ்ணனும் அர்ஜுனன் மேல் அபார ஸ்நேஹமும் , ப்ரியமும் வைத்தவன் .  கீதையில் பல முறை 'இஷ்டோ(அ)ஸி , ப்ரியோ(அ)ஸி என்றெல்லாம் கூறி அதை வெளிப்படுத்தவும் செய்கிறான் .

பேசக்கூடிய மொழியும் பேசப்படும் வார்தைகளும் ப்ரதானம் இல்லை .  தாய் தந்தையருக்கு குழந்தையின் மழலை தேன் போல தித்திக்கும் .  அம்ருதம் போல இருந்திடும் .  ப்ரேமையில் மூழ்கி இருக்கும் கணவன் மனைவிக்கு ஒருவருக்கு மற்றவருடைய வார்தைகள் பரஸ்பரம் தித்திப்பானதாக , கேட்கக் கேட்கத் தெவிட்டாததாக இருந்திடும் .  குருவிற்கு ஶிஷ்யனுடைய கள்ளம் கபடம் அற்ற க்ஞானப் பிதற்றல்களும் ஶிஷ்யனுக்கு குருவினுடைய ஆழமான க்ஞான விளக்கங்களும் எவ்வளவு கேட்டாலும் , எத்தனை தடவை கேட்டாலும் த்ருப்தி அளிக்காத மதுர வ்ருஷ்டியாக , தேன் மழையாக இருந்திடும் .  தேஶ பக்தனுக்கு தேஶத்தின் பெருமைகள் அம்ருதத்திற்கு ஒப்பானதாக , எத்தனை முறை கேட்டாலும் அலுக்காததாக இருந்திடும் .  பக்தனுக்கு பரமனின் லீலைகளும் விபூதிகளும் என்றும் த்ருப்தி அளிக்காதவையாக , அம்ருதகானமாக இருந்திடும் .

பேசுபவரின் மன நிலையும் மஹத்வம் வாய்ந்தது .  எதற்காகப் பேசுகிறார் என்பதைப் பொருத்து , அவரது பேச்சு கேட்பவரின் மனஸில் தாக்கத்தை ஏற்படுத்திடும் .  அத்தகைய தாக்கத்தை வைத்தே பேசுபவரின் மன நிலையை அறிந்து கொள்ள முடியும் .  கேட்பவர் மனஸில் பேசுபவரைப் பற்றிய சிந்தனை எழுந்தால் , (ஆஹா !  இவர் எவ்வளவு அழகாகப் பேசுகிறார் , எவ்வளவு படித்திருக்கிறார் ...) பேசுபவர் , தற்பெருமைக்காக , பாராட்டு மற்றும் கைத் தட்டலுக்காக , ஸ்வய அஹங்காரத்தை வெளிப்படுத்தப் பேசுகிறார் என்று அர்தம் .  கேட்பவர் மனஸில் பேச்சின் கருத்தைப் பற்றிய சிந்தனை எழுந்தால் , பேசுபவர் கருத்திற்காகப் பேசுகிறார் என்று அர்தம் .  கேட்பவர் தன்னை மறந்து , ஸுற்று சூழலை மறந்து ஆனந்தத்தில் மூழ்கினால் , பேசுபவரும் தன்னை மறந்த நிலையில் , பர வஶ நிலையில் , பரம ஆனந்தத்தில் மூழ்கி பேசுகிறார் ...  இல்லை ..  இல்லை ..  அவர் பேசவில்லை , பேச்சு அவர் உள்ளிருந்து வெளிப்படுகிறது என்று அர்தம் .  இத்தகைய பேச்சே அம்ருதம் போல இருந்திடும் .  எவ்வளவு கேட்டாலும் இன்னம் கொஞ்ஜம் கேட்கலாம் என்று தோன்றிடும் .  எவ்வளவு கேட்டாலும் த்ருப்தி அளித்திடாது .

இங்கு வக்தாவான ஸ்ரீ க்ருஷ்ணனின் மனநிலையும் ஶ்ரோதாவான அர்ஜுனனின் மனநிலையும் இவ்வாறு இருப்பதால் அர்ஜுனன் , "ஹே கிருஷ்ண !  அம்ருதத்திற்கு ஒப்பான உனது வார்தைகள் எனக்கு த்ருப்தி அளிக்கவில்லை " என்கிறான் .   

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...